search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை-நீலகிரி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    தொடர் விடுமுறை-நீலகிரி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • மலை ரெயிலிலும் பயணித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • சிறப்பு மலை ரெயில் வருகிற 27-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    ஊட்டி,

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்ப குதிகள் மற்றும் எண்ணற்ற சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.

    இங்கு நிலவும் சுற்றுலா தலங்களை பார்க்கவும், இயற்கை அழகினை ரசிக்க வும் தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமி ன்றி வெளிநாடு களில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குவிந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கிறா ர்கள்.

    தற்போது சுதந்திர தின தொடர் விடுமுறை விடப்ப ட்டுள்ளது. இதன் காரண மாக கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்தி ற்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரி த்துள்ளது. நேற்று ஞாயிற்று க்கிழமை என்பதால் மாவ ட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், அங்கு பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டு கண்டு ரசித்தனர். மேலும் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் குடும்பத்தி னருடன் தாவரவியல் பூங்கா புல்வெளி தரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, குன்னூர் சிமஸ் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டமாகவே காணப்ப ட்டது.

    ஊட்டிக்கு வரும் சுற்று லா பயணிகள் அனைவருமே மலைரெயிலில் பயணிக்க விரும்புவார்கள். வனத்தின் நடுவே வரும் ரெயிலில், அங்குள்ள இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், வனவிலங்குகள் போன்றவற்றை ரெயிலில் இருந்தபடியே பார்த்து செல்லலாம் என்பதால் பெரும்பாலானவர்கள் அந்த ரெயிலிலேயே பயணி க்க விரும்புவர்.

    நேற்று நீலகிரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணி கள் பெரும்பா லானோர் மலை ரெயிலிலேயே பயணித்தனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சிறப்பு மலை ரெயிலும் இயக்கப்படுகிறது.

    வருகிற 27-ந் தேதி வரை இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. நேற்று சுற்றுலா வந்தவர்களில் பெரும்பா லனோர் ரெயிலிலேயே பயணித்து நீலகிரிக்கு சென்றனர். அப்போது அவ ர்கள் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணித்தனர். மேலும் சிறப்பு மலைரெயில் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×