search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Search Education Program in Nilgiri District"

    • ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.
    • மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 12 ஆயிரத்து 665 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவி த்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    கொரோனா பெருந்தொ ற்றால் மாணவா்களின் கற்றலில் ஏற்பட்ட இடை வெளியை சரி செய்வத ற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்ட த்தை பள்ளி கல்வி துறை மூலம் 2021 அக்டோபா் 27-ந்தேதி தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதனால் மாவட்டம் முழுவதும் 3,737 தன்னாா்வலா்கள் இணைய வழியில் பதிவு செய்திருந்த னா். இவா்களில் 2,108 தன்னாா்வலா்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பரிந்துரை செய்ய ப்பட்டு இவா்களுக்கு உளவியல், கணினி வழித் தோ்வு மற்றும் குழுக் கலந்தாய்வு பயிற்சி அளிக்கப்பட்டு 1,814 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வடி வமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுநா் குழுவால் பயிற்சி வழங்கப்பட்டது. அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியமா்த்த ப்பட்டனா்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 1,214 தன்னாா்வலா்கள் கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், மாணவா்களின் வகுப்பு அடிப்படையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னா ா்வலா்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உயா் தொடக்க தன்னாா்வ லா்களும் மாண வா்களின் இல்லங்களுக்கு அருகி லேயே தினசரி 1 முதல் 2 மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனா். இதன் அடிப்ப டையில், நீலகிரி மாவட்ட த்திலுள்ள 4 ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் 7,652 மாணவா்க ளும், உயா்தொடக்க நிலையில் பயிலும் 5,013 மாணவா்க ளும் என மொத்தம் 12 ஆயிரத்து 665 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகி ன்றனா்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×