search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meenakshi Lekhi"

    • கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்றார்.
    • அப்போது, பாரத் மாதா கீ ஜே என கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் ராஜினாமா செய்தது, ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    நாட்டின் மக்கள்தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். பிரதமர் மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால்தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது என தெரிவித்தார்.

    பேச்சின் முடிவில் அவர் 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட்டார். அதற்கு பார்வையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், இந்தியா உங்கள் தாய் அல்லவா? என்று கேட்டார். சொல்லுங்கள், சந்தேகம் உள்ளதா என மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.

    அதன்பின், அவர் திரும்ப திரும்ப முழக்கத்தைச் சொன்னார். அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி, பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என காட்டமாக கூறினார்.

    தொடர்ந்து அவர், பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த அனைவரும் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
    • கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க இஸ்ரேல் உலக நாடுகளுக்கு வலியுறுத்தல்.

    பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ஒரு சில நாடுகள் பயங்கரவாத அமைப்பு என்று அழைத்த போதிலும், பெரும்பாலான நாடுகள் அவ்வாறு அறிவிக்கவில்லை. காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினரை பகிரங்கமாக பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் உலக நாடுகளை வற்புறுத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்திய பிரதமர் தெரிவித்தார். இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், இந்தியா ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்த நிலையில்தான் பாராளுமன்றத்தில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லெகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாகவும், கடிதம் ஒன்று வெளியானது.

    இந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடைசெய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என ஒருவர் மீனாட்சி லெகியை டேக் செய்து கேட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த மீனாட்சி லெகி, "உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி மற்றும் பதிலுடன் நான் எந்த பேப்பரிலும் கையெழுத்திடவில்லை" என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதில் அளித்துள்ளார்.

    • மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசும்போது ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.

    அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசினர்.

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பா.ஜ.க. பேசிவந்த நிலையில் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.

    இதனால் கோபமடைந்த அவர், வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என எச்சரித்தார்.

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்களை மிரட்டும் அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை விவேகானந்தர் ஏற்படுத்தினார்.
    • நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும்.

    சர்வதேச யோக தின கொண்டாட்டததின் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்ற அவர் , விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார். 


    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்தா மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    யோகா செய்வதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைக்கப்படுகிறது. நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும். மிகப்பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார்.

    நாட்டின் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்திற்காக, நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார். இவ்வாறு மத்திய இணை மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்தார்.

    பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். #MeenakshiLekhi #RahulGandhi #ContemptCase #ChowkidaarChorHai
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த பதிலும் நீதிபதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

    இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது தொடர்பாக புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி தரப்பில் 3 பக்கங்கள் கொண்ட புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மோடியை திருடன் என நீதிபதி கூறியதாக பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறப்பட்டுள்ளது. #MeenakshiLekhi #RahulGandhi #ContemptCase #ChowkidaarChorHai
    ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC #MeenakshiLekhi
    புதுடெல்லி:

    ரபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.  

    இந்த தீர்ப்பை வரவேற்று அமேதியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’ரபேல் பேரத்தில் சில வகையிலான ஊழல் நடந்திருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

    மேலும், சுப்ரீம் கோர்ட் நீதி வழங்கி உள்ளது. ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னர் தன்னை குற்றமற்றவர் என கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்தன் மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என சுப்ரீம் கோர்ட்டும் கருதுகிறது என்னும் பொருள்படும் வகையிலும் ராகுல் கூறினார்.



    சுப்ரீம் கோர்ட் சொல்லாத ஒரு கருத்தை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தாக திரித்துக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக ரபேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பாஜக தலைமை எச்சரித்திருந்தது.

    இந்நிலையில், பாஜக எம்.பி.மீனாட்சி லேக்கி இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மூலம் தொடரப்பட்ட இந்த வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC  #MeenakshiLekhi
    ×