search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Insurance"

    • நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவ ட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையார், குத்தாலம் ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு மருத்துவ மருத்துவமனையிலும், கொள்ளிடத்தில் விஷ்னு மருத்துவமனை, மயிலாடுதுறையில் சாந்தி, கிருஸ்ணா, ராம் எலும்பு முறிவு மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கூர், திருவெண்காடு, குத்தாலம், கொள்ளிடம், மணல்மேடு ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,

    கொள்ளிடத்தில் சாய் ஸ்கேன் சென்டர், மயிலாடுதுறையில் அபினி மற்றும் மயூரா, ஆகிய 3 இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில்; பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7.5.2021 முதல் இன்று வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ் 97 நபர்களுக்கும், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 1702 நபர்களுக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 169 நபர்களுக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 178 நபர்களுக்கு என 2146 நபர்களும், 4164 நபர்கள் பொது சிகிச்சை என மொத்தம் 6310 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சி அகலார் பகுதியில் உள்ள தூனேரி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாமில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்

    இந்த முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் சிகிச்சை தேவை பட்டவர்களுக்கு உயர்சிகிச்சை பரிந்துரைக்கபட்டது.

    பொது மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், குழந்தகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சித்த மருத்துவர், மனநல மருத்துவர் என அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவம் பார்த்தது மிக சிறப்பாகும்

    இந்த மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சையை தங்கள் பகுதிலேயே பெற்றது தனிசிறப்பாகும். அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டது.

    மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரிரா மசந்திரன், இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார மருத்துவஅலுவலர் முருகேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார் ஆகியோர் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளி களுக்கான உரிய சிகிச்சை கள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2021 ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல், தற்போது வரை 1,268 பேருக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ்) 3,893 பேர், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 1,633 பேர், புற்றுநோய் சிகிச்சை 381 பேர், கல்லீரல் நோய் சிகிச்சை 82 பேர், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 2,894 பேர், தண்டுவடம் சிகிச்சை 106 பேர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை 479 பேர், கண்நோய் அறுவை சிகிச்சை 1,946 பேர், என மொத்தம் 12 ஆயிரத்து 682 பேருக்கு, ரூ. 17 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 314 மதிப்பில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில் மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?

    முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.

    இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

    கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.

    வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • கழிவுநீர் ஓடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
    • 23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., உரியவர்களிடம் வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை தெரசா நகர் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.15 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் ஓடையை அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தொடர்ந்து, முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை உரியவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க.., ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலமாக 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2021 ம் ஆண்டு மே 7 ந்தேதி முதல் 2022 ம் ஆண்டு அக்டோபா் 11 ந் தேதி வரையில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள்) ஆகிய அவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 3 ல் சமா்ப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது விநியோக திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
    • அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிறைவு உரையாற்றினார்.

    கூட்டத்தில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் கூட்டுறவு துறை மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கு துறை ஆகிய இரண்டு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுவதால் பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.

    பொருள்களின் எடை குறைகளை தவிர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் உறைகளில் அடைத்து தரவேண்டும். பொதுவிநியோகத் திட்ட ஊழியர்களுக்கு முழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதில் உள்ள சிக்க ல்களை நீக்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவன ங்களில் பணியாற்றும் ஊழிய ர்களுக்கு கருணை ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கூட்டுறவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பராமரிக்கும் முறையினை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சித்ரா, சிஐடியு மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன், கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் சாந்தகுமாரி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் விஜயன் வரவேற்றார். இறுதியில் மாநில குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.

    மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் சுதந்திர தின விழாவையொட்டி 6 மாநிலங்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. #Medicalinsurance

    புதுடெல்லி:

    இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி பல நோய்களுக்கு குறிப்பிட்ட தொகை வரை செலவு செய்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். அந்த பணம் காப்பீட்டு திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டு விடும்.

    இதேபோன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது.

    இதன்படி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட தொகை வரை சிகிச்சை அளிக்க மத்திய அரசே பணம் செலுத்தும். இதற்காக நியமிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

    இந்த திட்டத்துக்கு ஆயுஸ் மேன் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதை அமல்படுத்துவதற்காக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி செலவிடுவதற்கும் அரசு திட்டங்களை தயாரித்தது.

    இதையடுத்து 6 மாநிலங்களில் முதற்கட்டமாக திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி நாளை இந்த திட்டம் 6 மாநிலங்களில் அமலுக்கு வர உள்ளது.

    சத்தீஷ்கார், மணிப்பூர், அரியானா, குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த உள்ளனர்.

    இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் வெளியிட உள்ளார்.

    மேலும் இந்த திட்டத்தில் பல மாற்றங்களையும் செய்துள்ளனர். திட்டத்துக்கு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய அபியான் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.


    அதுபற்றியும் அவர் அறிவிக்கிறார். அடுத்த கட்டமாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி மற்ற மாநிலங்களிலும் இத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

    நாளை 6 மாநிலங்களில் அமலுக்கு வருவதையடுத்து திட்ட நடைமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்து பூ‌ஷன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர், இது பற்றி சுகாதாரத்துறையிடமும், சம்பந்தப்பட்ட மற்ற அமைப்புகளிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

    ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது? என்பது பற்றியும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    மாநிலங்களில் ஏற்கனவே உள்ள காப்பீட்டு திட்டங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களே நேரடியாண பணம் செலுத்துகிறது. ஆனால், மத்திய அரசு திட்டத்தின்படி இதில் காப்பீட்டு நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை.

    மத்திய அரசே அதற்கான நிதியை ஒதுக்கி நேரடியாக வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக நாடு முழுவதும் 22 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. அங்கு சிகிச்சை பெற்று கொண்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    ஆண்டுக்கு 10 கோடி குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திட்டத்தில் மோசடிகளோ, தவறுகளோ நடந்து விடாமல் தடுக்கும் வகையில் அதற்காக சில வரைமுறைகளையும் உருவாக்கி உள்ளனர். இதற்காக தகவல் தொழில் நுட்ப முறையில் பயனாளிகள் பதிவு செய்யப்படுவார்கள்.

    திட்டத்தின் நடை முறைகளும் அதில் பதிவு செய்யப்படும். அந்த பணி டாட்டா கன்சல் டன்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து டாட்டா நிறுவனம் இந்த பணிகளை செய்யும்.

    திட்டத்துக்கான ஆலோசனைகளை தேசிய ஆதார் நிறுவனத்தின் சேர்மன் சத்திய நாராயணா வழங்கி வருகிறார்.

    திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளையும் வகுத்துள்ளனர். இதன்படி ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பத்துக்கு மருத்துவ வசதிகளை பெற்று கொள்ள முடியும்.

    விரைவில் 4 மாநில சட்டசபை தேர்தலும், அதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளன. மருத்துவ திட்டத்தின் மூலம் மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது. #Medicalinsurance

    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச் செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது.

    உடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, ‘பேமிலி புளோட்டர் பாலிசி’ எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம்.

    இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது.

    மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்.



    மருத்துவக் காப்பீட்டில் ‘கோ-பே’ மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். ‘கோ-பே’ என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், ‘கோ-பே’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.

    1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    ஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும்.

    காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம்.

    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நரம்பு அழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNAssembly #TNMinister #Vijayabaskar
    சென்னை:

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் உலக நரம்பு அழற்சி நோய் தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆரஞ்சு நிற பலூன்களை பறக்க விட்டு, உலக நரம்பு அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதுவர்களை கவுரவப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், உலக நரம்பு அழற்சி நோய் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியில் உள்ள நரம்பு செல்களில் ஏற்படும் அழற்சி நோயாகும். இந்நோயினால் பார்வை இழப்பு, பார்வை இரண்டாகத் தெரிவது, கைகால் செயலிழப்பு, உணர்வின்மை, நடை தள்ளாட்டம், பேச்சுப் பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை தொந்தரவுகள், போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இந்நோய் எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும் குறிப்பாக 20-50 வயது வரை உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது.

    உலக அளவில் சுமார் 23,00,000 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், ஆண்டுதோறும் 1,00,000 பேரில் 20 பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 853 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் இந்நோய்க்கு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சைக்கு இதுவரை ரூ.2.3 கோடி மதிப்புள்ள மருந்துகள் நரம்பியல் துறையால் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஒரு நோயாளிக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இச்சிகிச்சைக்காக செலவிடுகிறது என்றார். #TNAssembly #TNMinister #Vijayabaskar
    ×