search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் 6310 பேருக்கு சிகிச்சை
    X

    கலெக்டர் மகாபாரதி.

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் 6310 பேருக்கு சிகிச்சை

    • நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவ ட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையார், குத்தாலம் ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு மருத்துவ மருத்துவமனையிலும், கொள்ளிடத்தில் விஷ்னு மருத்துவமனை, மயிலாடுதுறையில் சாந்தி, கிருஸ்ணா, ராம் எலும்பு முறிவு மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கூர், திருவெண்காடு, குத்தாலம், கொள்ளிடம், மணல்மேடு ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,

    கொள்ளிடத்தில் சாய் ஸ்கேன் சென்டர், மயிலாடுதுறையில் அபினி மற்றும் மயூரா, ஆகிய 3 இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில்; பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7.5.2021 முதல் இன்று வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ் 97 நபர்களுக்கும், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 1702 நபர்களுக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 169 நபர்களுக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 178 நபர்களுக்கு என 2146 நபர்களும், 4164 நபர்கள் பொது சிகிச்சை என மொத்தம் 6310 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×