search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு  திட்டத்தில் 12,682 பேருக்கு சிகிச்சை
    X

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12,682 பேருக்கு சிகிச்சை

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளி களுக்கான உரிய சிகிச்சை கள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2021 ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல், தற்போது வரை 1,268 பேருக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ்) 3,893 பேர், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 1,633 பேர், புற்றுநோய் சிகிச்சை 381 பேர், கல்லீரல் நோய் சிகிச்சை 82 பேர், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 2,894 பேர், தண்டுவடம் சிகிச்சை 106 பேர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை 479 பேர், கண்நோய் அறுவை சிகிச்சை 1,946 பேர், என மொத்தம் 12 ஆயிரத்து 682 பேருக்கு, ரூ. 17 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 314 மதிப்பில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×