search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laboratory"

    • 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும்.

    கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்கள் இலவசமாக பயனடைய உள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரும் பொருட்செலவில் இந்த ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பரிந்துரைகள் துல்லியமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வுக்கூடத்தில் பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து அறியும் முழுமையான தானியங்கி கருவிகள், மண்ணின் அங்கக கரிம அளவை அறியும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆய்வக தொழிற்நுட்ப வல்லுனர் குழுக்களோடு மிக சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மண் பரிசோதனை சேவை முதற்கட்டமாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த சேவையை பெறும் விவசாயிகளின் நிலத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக செல்வார்கள். அங்கு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். பிறகு விவசாயிகளின் நிலத்தில் இருந்து பெறப்பட்ட மண், ஆய்வுக்கூடத்தில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.


    இந்த பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த வேளாண் வல்லுநர் குழு பயிர் ஆலோசனை மற்றும் உரப் பரிந்துரைகளை வழங்கும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தொடர் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்த இலவச மண் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மற்றும் மண்ணின் அங்கக வளம் பற்றி அறிந்து கொள்ளவும், பயிர்வாரியான ஊட்டச்சத்து தேவை மற்றும் மண்ணின் தன்மை முதலியவற்றை கருத்தில் கொண்டு உர மேலாண்மை செய்திடவும், பயிரின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை பெருக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெருமளவில் உதவி புரியும்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் 33 "மண் காப்போம்" இருசக்கர வாகனங்களின் பயணம் ஆதியோகி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதிலும் சென்று உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராமங்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்கு விரைவாக சென்று சேவையாற்ற முடியும். மேலும் விவசாயிகளை விரைவில் அணுகவும், புதிய சந்தைகளை திறம்பட கண்டறியவும் இந்த வாகனங்கள் உதவும் என்பதால் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி முன்பு குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக செய்து தராத கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரகோரி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    • செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
    • கல்லூரிகளில் இது போன்ற குறைகளை நீக்க முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் சட்டமன்றத்தில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்.

    2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது.

    கூட்ட தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்வி பின்வருமாறு,

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்ட, நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பெரும் இன்னலை சந்திக்கிறார்கள்.

    சுற்றுச்சுவர், நடைபாதை, ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு கட்டிடம் மட்டும் இருக்கிறது, வகுப்பறை நடக்கிறது.

    எனவே அரசு உடனடியாக இதை பரிசீலித்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    அதுபோல அங்கு நிர்வாக செலவுகளுக்கு பல்கலைக்கழகத்தை சார்ந்திருப்பதா அரசை சார்ந்திருப்பதா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்தது.

    நிர்வாக செலவுகளுக்கு போதிய நிதி இல்லாமலும் அவர்கள் திண்டாடக்கூடிய சூழலை காண முடிகிறது.

    அதையும் அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தருமா என்று அமைச்சர் அவர்களை அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கலைக் கல்லூரிகளில் இது போன்ற குறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    எனவே ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    • பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • வகுப்பறை மட்டும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவரிடம், இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆய்வக கட்டடம் இல்லா மல் மாணவர்கள் சிரம ப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அப்போது, வகுப்பறை மட்டும் ஆய்வக கட்ட டம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார். அத்துடன், அங்கு நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரையில், அத்தேர்வை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவ ர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியா சுதீன், ரிபாயுதீன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    பீஜிங் :

    சீனா விண்வெளியில் தனெக்கென புதிதாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. 'தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சீனா ஏற்கனவே வெண்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை அனுப்பியது. அந்த ஆய்வுகூட அமைப்பு 'தியான்ஹே' விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்4' ராக்கெட் மூலம் மெங்டியன் ஆய்வுகூட அமைப்பு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்டிபிசிஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.
    • வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    மன்னார்குடி:

    சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்து வமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர்
    பால சுப்ரமணியன்கலந்து கொண்டனர்.

    இவ்வாய்வ கத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    இதுவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.

    தற்போது கூடுதலாக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவ மனையிலும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்படுகிறது.

    இதன்மூலம் மன்னார்கு டியை சுற்றியுள்ள பகுதிக ளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.செல்வகுமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ கீர்த்தனா மணி, மன்னார்குடி நகரமன்ற தலைவர்.சோழராஜன், துணை தலைவர் கைலாசம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார்,மருத்துவமனை நிலைய அலுவலர் மரு.கோவிந்தராஜ், ஆர்டிபிசிஆர் ஆய்வக அலுவலர் மரு.பாரதிகண்ணமா, தேசிய நல்வாழ்வு குழும அலுவலர் மரு.வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
    • இதில் அமைச்சர்-மேயர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா சென்னை யில் நடைபெற்றது.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு மருத்துவ மனையில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொ டர்ந்து சிவகாசி அரசு மருத்து வமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆய்வ கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×