search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுப்பட்ட கல்லூரி மாணவர்கள்.

    கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்

    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி முன்பு குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக செய்து தராத கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரகோரி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×