search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hemant Soran"

    • ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.
    • எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கவனித்து வருகிறார்.அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்பனா சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேள்வி:-கடந்த 2 மாதங்களாக உங்கள் அரசியல் பயணம் எப்படி இருந்தது?

    பதில்:-எனது கணவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ந்தேதி கைது செய்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.ஏனென்றால் இது திடீரென்று நடந்தது. எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து தற்போது தேர்தல் பரபரப்பில் இருந்து வருகிறோம். ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

    கேள்வி:-உங்களது கணவரின் அண்ணன் மனைவி சீதா சோரன் ஜே.எம்.எம். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர எடுத்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அவர் எடுத்த முடிவு ஊடகங்கள் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது கணவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நான் ஏற்கனவே உடைந்து போயிருந்தேன். அதிலிருந்து வெளியே வர சிறிது நேரம் பிடித்தது. அந்த முடிவு அவருடைய தனிப்பட்டது என்று நம்புகிறேன். அதை நான் மதிக்கிறேன்.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், என்ன செய்வது என்று அவருடன் விவாதித்தீர்களா?

    பதில்:-ஹேமந்த் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். நான் சட்ட நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் சொந்தப் பொறுப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே ஒரு மனைவியாகவும், ஒரு மனிதனாகவும் குடும்பம், கட்சி, தொண்டர்களுக்காக துணை நிற்பது எனது தனிப்பட்ட கடமை என்று நான் நினைத்தேன். எனது பிறந்த நாளான மார்ச் 3-ந்தேதி அன்று ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் பொறுப்பின் காரணமாக மாமனார், மாமியார் ஆசியுடன் தீவிர அரசியலில் இறங்கினேன்.

    கேள்வி:-உங்கள் கணவர் கைது செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-ஹேமந்த் கைது தொடர்பான நிலம் அவரது பெயரில் உள்ளதா என அதிகாரிகள் சோதித்திருக்க வேண்டும். அவரது பெயரில் ஒரு பேப்பர் கூட இல்லை.இந்தக் கேள்வி ஏன் ஹேமந்த்திடம் கேட்கப்படுகிறது என்று கேட்க விரும்புகிறேன். நிலம் தங்களுக்கே சொந்தம் என்று தற்போதும் கூறும் நில உரிமையாளர்களிடம் ஏன் கேள்வியை கேட்கவில்லை. நில உரிமையாளரும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்க்கும் போது, ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-எங்களது உரிமையை பெற்று தருமாறு மத்திய அரசிடம் கேட்கிறோம். மத்திய அமைச்சகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சர்னா மதக் குறியீட்டை நாங்கள் கேட்கிறோம்.ஆனால் அது மறுக்கப்படுகிறது. அதுவும் ஊழல்தான். நான் ஊழலுக்கு முற்றிலும் எதிரானவள். ஆனால் மத்திய அரசு ஜார்கண்ட்டை வளர்ப்பு மகன் போல நடத்துகிறது. அதுவும் ஊழல்தான். நாங்கள் ஏமாற்றப் பட்டதாக உணர்கிறோம். இதனால்தான் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்குக்கு எதிராக முதல்வராக இருந்து ஹேமந்த் குரல் எழுப்பினார்.

    கேள்வி:-ஜார்கண்ட்டின் வருங்கால முதல்-மந்திரியிடம் பேசுகிறோம் என்று கூறலாமா?

    பதில்:-இப்போதே இல்லை.எனது மாமனார் சிபு சோரன், கணவர் ஹேமந்த், கட்சித் தொண்டர்களின் எண்ணங்கள், லட்சியங்களில் இருந்து நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் என்னைப் பார்க்கும்போது அவர்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறார்கள்.

    கேள்வி:-கட்சியினர் உங்கள் பெயரை முன்மொழிந்தால் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க தயாரா?

    பதில்:-மக்கள் என்னை ஒரு போர்வீராங்கனையாக ஆக்கியுள்ளனர். நான் ஒரு போராட்ட குணம் படைந்தவள் என்பதால் அந்த வார்த்தையை விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன். நான் அதை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.

    இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    • ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.
    • 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிப்பு.

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.

    இந்நிலையில், ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    ஜார்கண்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
    • முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்கள் அனுப்ப பட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், 8 வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, தனது வீட்டிலேயே வைத்து தன்னை விசாரிக்கலாம் என பதிலளித்தார்.

    அதனடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக-வினர், " ஏழாவது சம்மன் வரை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஹேமந்த் சோரனின் ஆணவம், எட்டாவது சம்மனில் மறைந்தது" என விமர்சித்தனர். இதற்க்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியினர், "பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது. இதற்கு முன்பே ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது" என கூறினர். 

    ×