search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart problem"

    • பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
    • இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.

    1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்

    2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்

    3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.

    மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.

    இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

    1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,

    2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,

    3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,

    4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,

    5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,

    6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,

    7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.

    நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் மற்றும் பெண் மந்திரி எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. #KeralaHealthMinister
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வட எல்லையில் உள்ள நகரம் காசர்கோடு.

    காசர்கோட்டை சேர்ந்த தம்பதி சானியா-மித்தா. இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காசர்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    நேற்று குழந்தையின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபற்றி டாக்டர்கள், குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தையை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர்.

    மேலும் இந்த தகவல் கேரள அரசின் குழந்தைகள் நல அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர்கள் இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்த மந்திரி, குழந்தையை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் குழந்தையை உடனடியாக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரவும் ஏற்பாடு செய்தார்.

    மந்திரி சைலஜா.

    காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மின்னல் வேகத்தில் வந்தாலும் கூட 10 முதல் 12 மணி நேரம் ஆகும். அதுவரை குழந்தையின் உயிரை பாதுகாப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து கொச்சியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளிக்க மந்திரி சைலஜா ஏற்பாடு செய்தார். குழந்தைக்கு கேரள அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

    காசர்கோட்டில் இருந்து கொச்சி 400 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த சாலை. இதில் ஆம்புலன்சில் வந்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

    குழந்தையை காப்பாற்றவும், குழந்தையை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சிற்கு வழி விடவும் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் நல அதிகாரிகளும், மந்திரி சைலஜாவும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த செய்தி சமூக ஊடகங்கள் வழியாக வைரலாக பரவியது. காசர்கோட்டில் குழந்தையுடன் புறப்பட்ட ஆம்புலன்சிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கூட மக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் மந்திரியின் ஏற்பாட்டால் காசர்கோட்டில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்சு 400 கி.மீ. தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து கொச்சி அமிர்தா ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.

    அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, குழந்தையின் உடல்நிலை குறித்து 24 மணி முதல் 48 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும். நாங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம் என்றனர்.

    கேரள மந்திரியின் ஏற்பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே கேரள மக்களின் விருப்பம். கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.  #KeralaHealthMinister
    சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் ஆகியனவற்றை நல்லகட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் மாரடைப்பு மற்றும் ஹார்ட் பெயிலியர் வராமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் வாழமுடியும்.

    ஹார்ட் பெயிலியர் ( HEART FAILURE)

    ஹார்ட்அட்டாக், ஹார்ட்வால்வு பிரச்சினை, இருதயத்தில் ஓட்டை போன்றவை நாம்நாள் பொழுதும் கேள்விப்படும் இருதயநோய் தொடர்பான வார்த்தைகள் ஆகும். ஆனால் பொதுமக்களும் பாமரர்களும் அதிகம் கேட்டிராத ஒரு மருத்துவம் தொடர்பான சொல்ஹார்ட்ஃபெல்யூர்.

    ஹார்ட் பெயிலியர் என்றால்என்ன ?

    இருதயநோய்கள்மட்டும் அல்லாமல் நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்கத்தால் இருதயம் தன்செயலை / செயல்திறனை இழக்கக்கூடும். அடிப்படையில் இருதயம் செய்யும் வேலையை ஒரு பம்ப் (Pump) உடன் ஒப்பிடலாம். பம்ப் (Pump) போன்ற இந்த உறுப்பின் அதிமுக்கியமான வேலை, ரத்தத்தை உடம்பில் உள்ள மூளை, சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற பல்வேறு உறுப்புகளுக்கு ரத்தநாளங்கள் வாயிலாக சீராக சென்றடைய செய்வதே ஆகும்.

    மேற்கூறியது போல் பல்வேறு உறுப்புகளின் பல்வேறு நோய்களின் தாக்கம் இருதயத்தின் மேல் ஏற்படும் போது, இருதயம் தன் செயலை மெல்ல மெல்ல இழக்க நேரிடும். ஒரு சிலமாதங்களிலோ வருடங்களிலோ முற்றிலும் செயலிழக்கும் இருதயம் தனது பம்ப் (Pump) வேலையை முழுமையாக செய்ய முடியாமல் போகும். இதன் விளைவாக உடம்பின் மற்ற பிற உறுப்புகளுக்கு ரத்தம் சரியாக / சீராக சென்றடைவ தில்லை. ரத்தம் சென்றடையாத காரணத்தால் அந்தமற்ற உறுப்புகளும் மெதுவாக செயலிழக்கும் அபாயம் நேரிடும். விளைவு-மல்டி ஆர்கன்டிஸ்ஃபங்சன் (multi Organ Dysfunction) -அதாவது ஒன்றிற்கும் மேற்பட்ட உறுப்புகள் செயலிழக்க முக்கியமான காரணமாக ஹார்ட் பெயிலியர் காணப்படுகிறது.

    ஹார்ட் பெயிலியர் அறிகுறிகள் (SYMPTOMS )

    மூச்சுதிணறல் (Dyspnoea), அசாதாரணமான சோர்வு (Fatigue), படபடப்பு ( Palpitations), சுயநினைவின்றி மயங்கிவிழுதல் (Syncope) கால், முகம், வயிறு வீக்கம் சிறுநீர் அளவு குறைதல், நெஞ்சுவலி

    ஹார்ட் பெயிலியர் முக்கியகாரணங்கள்

    1.மாரடைப்பு (HEART ATTACK)

    மாரடைப்பு என்பது இருதயத்தின் மேல் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து, அந்த நாளங்கள் முழுவதுமாக அடைத்துக் கொள்வதினால் வரும் விளைவு. அடைப்பின் காரணமாக இருதயம் செயல்பட போதுமான பிராணவாயு போன்ற ஊட்டம் இல்லாததனால் அதன்பம்ப் (Pump) செயல்திறன் மெலிவடைந்துஹார்ட்பெயிலியர் (Heartfailure) ஏற்பட வழி வகுக்கிறது.

    2. இருதயவால்வு (VALVE) பிரச்சினைகள்

    இருதயத்தின் வால்வுகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் பல்வேறு விதமான வால்வு கோளாறுகள் காரணமாகவும் இருதயத்தினுள் அழுத்தம் (pressure) அதிகமாக, அதன் விளைவாக ஹார்ட்பெயிலியர் ஏற்படலாம்.



    3.இருதயத்தில் உள்ள பிறவி குறைபாடுகள் (CONGENITAL DEFECTS )

    ASD, VSD, PDA எனப்படும் பல்வேறு விதமான இருதயத்தின் திசுக்களில் பிறவி குறைபாடு காரணமாக தோன்றும் ஓட்டைகள் (defects) மற்றும் பிறவியிலிருந்தே தோன்றும் சில அறிய வகை வால்வு கோளாறுகள் காரணமாகவும் ஹார்ட்பெயிலியர் ஏற்படலாம்.

    4. இடியோபதிக் ( IDIOPATHIC) DCM

    Idiopathic DMC (Dilated Cardiomyopathy) எனப்படுவது காரணமே இல்லாமல் இருதயம் வீக்கம் அடைந்துகாலப்போக்கில் அதன் செயல்திறனைமுற்றிலுமாக இழக்கும் ஒருவிதமான நோய். இது ஹார்ட் பெயிலியர் ஒரு முக்கியமான மற்றும் பொதுவான காரணமாகும்.

    5. PERI PARTUM CARDIOMYOPATHY (கர்பகாலத்தில் ஏற்படும் ஹார்ட் பெயிலியர்

    பெண்கள் கர்பமுறிருக்கும் காலத்திலோ அல்லது குழந்தை பெற்று முதல் 4 மாதங்களிலோ, காரணமே இல்லாமல் இருதயம் வீக்கம் அடைந்து ஹார்ட் பெயிலியருக்கு வழி வகுக்கலாம்.

    6. சர்க்கரைநோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் (Diabetes & Hypertension)

    சர்க்கரைநோய் மற்றும் உயர்ரத்த அழுத்தத்தினால் நம் உடம்பில் பாதிப்படையாத உறுப்புகளே இல்லை. அவ்வகையில் இந்த உயிர் கொல்லி நோய்களினால் இருதயம் பல்வேறு வகைகளில் பாதிப்பை சந்திக்கிறது. அதில் முக்கியமான பக்கவிளைவு மாரடைப்புமற்றும் ஹார்ட் பெயிலியர் ஆகியன ஆகும். சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் ஆகியனவற்றை நல்லகட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் மாரடைப்பு மற்றும் ஹார்ட் பெயிலியர் வராமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் வாழமுடியும். இதற்கு முக்கியம் இந்நோய்களை பற்றிய அடிப்படை புரிதலும் அவற்றின் பக்கவிளைவுகளை பற்றிய போதிய விழிப்புணர்வும் ஆகும்.

    மேலும் விபரங்களுக்கு அணுகவும் ARAVIND HEART CENTRE (அரவிந்த் இருதய நலமையம்) Dr N Arvind Yuvaraj DM ., 0416 297 6666

    டாக்டர். N.அரவிந்த்யுவராஜ் DM., அரவிந்த் இருதய நலமையம்
    மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க்.

    ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் வருவதற்கான காரணத்தையும், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பார்க்கலாம்.
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் உருவான பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடித்தல், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப பரம்பரை, உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை மற்றும் கொழுப்பு அதிகமாதல் போன்றவையே அபாய காரணிகளாகின்றன. கொழுப்புப் பொருள், கொலஸ்டிரால் மற்றும் பிற பொருட்கள் ரத்தநாளச் சுவற்றில் படிவதே தமனிக் குழாய் ஒடுங்குவதற்கும் மெல்லியதாவதற்கும் காரணமாகிறது.

    இதுகுறித்து பிரசாந்த், சிறப்பு மருத்துவ மனையின் இதயவியல் சிறப்பு மருத்துவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது:-

    இதய நோய், பக்க வாதம், இதய செயலிழப்பு போன்றவைக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு முக்கிய அபாய காரணியாகும். நல்ல கொழுப்பை உயர்த்த உதவும் ஈஸ்டரோஜன் பெண்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

    ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களும் ஆண்களை போன்றே பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் நீரிழிவு அல்லது கொலஸ் டிரால், எல்டிஎல் கொலஸ் டிரால் அளவு அதிகமாகும். மேலும் குடும்ப பரம்பரை காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    புகைப்பிடிப்பது ரத்த நாள உள்சுவரைச் சிதைத்து, தமனிகளில் கொழுப்பு படிவதை அதிகரிக்கச் செய்கிறது. நிகோடின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை உயர்த்தச் செய்கிறது.

    நெஞ்சுவலி அல்லது அசவுகர்யம் (எரிச்சல், அழுத்தம், இறுக்கம் அல்லது கனம்), தொண்டை, வாய், தோள் அல்லது முதுகு, முழங்கை, மணிக்கட்டில் அசவுகர்யம், சுவாச குறைபாடு, குமட்டல், வியர்த்தல் போன்றவை இதய அடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

    சரிவிகித உணவை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருதல், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருத்தல், எடையைசரியாக பராமரித்தல் போன்றவை இதயநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாளை (செப்டம்பர் 29-ந்தேதி) உலக இதய தினம்.

    மனிதனின் உயிர்நாடி இதயம். நம் உடலில் அனைத்து உறுப்புகளை விடவும் இது அதி முக்கியத்துவம் வாய்ந்தது; அற்புதமானது.

    இதயம் விரிந்து சுருங்கி எப்போதும் இடைவிடாது, தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 தடவை சுருங்கி விரியும் பணி நடைபெறுகிறது. நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. மரபுப் பண்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், புகைப்பிடித்தல், புகையிலைப் பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள், ரத்த மிகை கொழுப்பு போன்றவை இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.

    மாரடைப்பு வராமல் தடுக்க மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

    உலக இதய நாளையொட்டி இந்த ஆண்டும் வழக்கம் போல் ‘லட்சியக்கருவை’ உலக இதய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும், புகையிலைப் பழக்கத்தை அறவே விட வேண்டும், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் ஆகிய உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள உரக்க வலியுறுத்துகிறது.

    உலகில் உள்ள எல்லா மனிதர்களும் வாரத்தில் 150 நிமிடங்கள் நடுநிலையான நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. உலகில் உள்ள 25 சதவீத மக்கள் இந்த இலக்கை எட்டவில்லை.

    இந்திய மனிதர்களில் 34 சதவீதமும் குறிப்பாக இந்தியப் பெண்களில் 40 சதவீதமும் அடிப்படை உடற்பயிற்சி கூட செய்வதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

    இந்திய மக்கள் உடற்பயிற்சி செய்வதை ஊக்கப்படுத்தாதவரை இதய நோய்கள் அதிகமாகும் போக்கை தடுத்து நிறுத்த முடியாது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் இளம் வயதிலேயே நோய்க்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்து பணிபுரியும் நிலை அதிகமாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் மட்டுமல்ல, அலுவலகங்களில் கம்ப் யூட்டர்களில் பணிபுரியும் அலுவலர்கள் கார், பஸ், லாரி ஓட்டுநர்கள், வியாபாரிகள் அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணிபுரிகிறார்கள்.

    எனவே இவர்கள் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக மருத்துவ உலகம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. இதனால் தொடர்ந்து உட்காருவதை தவிர்த்து 60, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடங்கள் நடப்பது நலம்.

    உணவுப் பழக்கத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை 2015-20-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் சுகாதார இலாகா வகுத்துள்ளது. முன்பு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் வரை கொலஸ்ட்ரால் பொருட்களை உண்ணலாம் என்று வரையறை வைத்திருந்தனர்.

    கொலஸ்ட்ரால் உணவைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மாவுச்சத்து (கார்போ ஹைடிரேட்) பொருட்களை அதிகம் சாப்பிட்டு அது தொடர்பான பிரச்சினை அதிகரித்து வருவது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இதனால் அந்த வரையறை நீக்கப்பட்டது. இதனால் மாவுச்சத்து என்பது ஒரு புதிய கொழுப்பு என்ற நிலைப்பாடு நிலவுகிறது. இதனால் சரிவிகித உணவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இதன்படி காய்கறி, பழங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, மீன் வகைகள் போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ராலுக்கு அளிக்கப்பட்ட வரையறை நீக்கப்பட்டது, இதய நோய் வராதவர்களுக்கான சிபாரிசு. ஆனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ராலை நன்றாகக் குறைக்க வேண்டும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த இதய தினத்தை முன்னிட்டு மேற்கூறப்பட்ட மூன்று உறுதிமொழிகளை மேற்கொண்டு அதன்படி செயல்பட்டால் வரும் ஆண்டுகளில் இதய நோய் வராமல் தடுக்க முடியும். உறுதிமொழி ஏற்போம்! இதயம் காப்போம்!

    டாக்டர் ரிபாய் சவுக்கத் அலி,

    இதய நோய் சிகிச்சை நிபுணர்

    தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், கொஞ்சம் கவலைப்படுவது நல்லது. ஏன் என்றால் தொண்டை நோய்த்தொற்றுக்கும், இருதயத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
    நான் பாடினா நல்லாத்தான் இருக்கும். என் குரல் அப்படி. ஆனால், ஒரு நாள் தொண்டையில் திடீர் கரகரப்பு. அப்போதே பதறிப் போய்ச் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த கஷாயம் போட்டுப் பாடகர் ரேஞ்சுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துக்கொண்டேன் என்றார் நண்பர் ஒருவர். இவர் பெரிதாக பயப்படாவிட்டாலும், தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், கொஞ்சம் கவலைப்படுவது நல்லது. ஏன் என்றால் தொண்டை நோய்த்தொற்றுக்கும், இருதயத்துக்கும் தொடர்பு இருக்கிறதே.

    தொண்டையில் தொற்று ஏற்பட்டவுடன் தண்ணீரில் உப்பைக் கலந்து வாய் கொப்பளித்தல், குளிர்பானங்களைத் தவிர்த்தல் போதும் என்றெல்லாம் இருப்பது வழக்கம். தொண்டை கரகரப்பு, காய்ச்சல் தானே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்ற அலட்சியப் போக்கு இயல்பாகவே நம் அனைவரிடமும் உண்டு. ஆனால் தொண்டை நோய்த்தொற்று இருதயச் செயல்பாட்டைப் பாதிக்கும் என்ற அதிர்ச்சிகரமான செய்தி, பலருக்கும் தெரியாது.

    இருதய பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாகச் செல்லாததாலேயே மயக்கம் ஏற்படுகிறது. இருதய வால்வில் ஒரே வழியாகச் சென்று வர வேண்டிய ரத்தமானது, இரு வழியாகச் சென்று வரத் தொடங்கும். மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் இருதயத்திலேயே தங்கிவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்த அதிகப்படியான ரத்தத்தைத் தாங்குவதற்காக இருதயம் விரிவடைய தொடங்குகிறது. ஒரு தொண்டை நோய்த்தொற்று இருதயத்தை இப்படியும் பாதிக்குமா? ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும், தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ- மாணவிகளிடம் இந்நோய்த்தொற்று விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது. 
    இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள்.
    இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள். ரத்த அழுத்தமும், உடல் பருமன் பிரச்சினையும் பலரை பாதித்துள்ளது. கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

    உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதும் ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. இறுதியில் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. தினமும் 2.3 கிராம் சோடியம்தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நாம் இரண்டு மடங்குக்கு அதிகமான உப்பை உணவில் பயன்படுத்துகிறோம். சமீபகாலமாக இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 17 மில்லியன் மக்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 23 மில்லியன் ஆக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். 
    ×