search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health care tips"

    மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க்.

    ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
    நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
    சிறுநீரக கற்கள் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.

    சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெளியில் இருந்து வருவது. இது, உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணிகளை உள்ளடக்கியது. இன்னொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் பாதிப்பு கடத்தப்படுவது ஆகும்.

    போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக கோடை காலங்களில் வெளியில் செல்லும்போதும், அதிகபடியான வியர்வை ஏற்படும். அந்த சமயத்தில் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது மிக முக்கியம்.

    வெயிலில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயிகள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், திறந்தவெளியில் நடந்து செல்பவர்கள், வெயில் காலங்களில் தாகம் தீரும் வரை தண்ணீர் அருந்துவதும் மிக மிக முக்கியம். இருதயம் பலவீனமானவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது.

    ஏன் தண்ணீர் குடிப்பது முக்கியம் என்றால், சரியான அளவு குடிக்காவிட்டால் போதுமான சிறுநீர் வெளிவராது. அப்படியே வந்தாலும், சிறுநீர் மிகவும் இறுகிய திரவமாக வரும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    சிறுநீரில் அளவுக்கதிகமாக கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட், பாஸ்பேட் சத்துகள் வெளியேறும். அவற்றை திரவ வடிவில் கரைத்து சிறுநீரில் வெளியேற்ற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இல்லையென்றால், சிறுநீரில் வெளியேறும் கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட் உப்புக்கள் திரவ தண்ணீரில் முழுமையாக கரைய முடியாமல் சிறுநீர் பாதையில் தங்கி படிந்துவிடும். பிறகு சிறுநீரக கல்லாக வளரும்.

    பொதுவாக, சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தினுள், சிறுநீர் சேகரமாகும் பையில், சிறுநீர் வரும் பாதையில் என 3 இடங்களில் வரலாம். ஒரு சிறுநீரகத்திலும் இந்த பாதிப்பு வரலாம் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீரகத்திலும் வரலாம். இவை பல்வேறு அளவுகளில், பல்வேறு வடிவங்களில் வரலாம்.



    சிறுநீரக கற்கள் மொத்தம் 5 வகைபடும். முதல் வகை கால்சியம் பாஸ்பேட் ஆக்சலேட் வகை கற்கள்.

    இந்த வகை கற்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக உருவாகிறது. சிறுநீரக கல் நோயாளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த வகை கற்களால் தான் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான கால்சியம் சத்துகள் சிறுநீரில் வெளியாவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

    அதாவது, அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து மாத்திரைகள், அதிகமான வைட்டமின் டி மாத்திரைகள், ஸ்டாய்டு மருந்துகள் உண்பவர்கள், அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவோர், லிட்டர் கணக்கில் பால் அருந்துபவர்கள், கால்சியம் சத்து நிறைந்த தண்ணீரை கொதிக்க வைக்காமல் குடிப்பவர்கள் இந்த வகை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கற்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மறுபடியும், மறுபடியும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது. நாளடைவில் அவர்களுக்கு சிறுநீரக பாதையில் கற்களால் அடைப்பும், கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது.

    இத்தகைய கற்கள் உண்டாவதை தடுக்கும் சக்தி சிட்ரிக் அமிலத்துக்கு உண்டு. எலுமிச்சை, ஆரஞ்சு சாறு சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.

    இதற்கு அடுத்தபடியாக பாதிப்பை தரும் வரிசையில் யூரிக் ஆசிட் கற்களை சொல்லலாம். இந்த பாதிப்பை எக்சரே படம் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடிக்க முடியும்.

    அசைவ பிரியர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் வரும். குறிப்பாக கல்லீரல், மூளைக்கறி எனக் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவோருக்கு யூரிக் ஆசிட் கற்கள் பாதிப்பு அபாயம் எந்த நேரமும் உண்டு. சில மருந்து, மாத்திரைகளாலும் யூரிக் ஆசிட் கற்கள் வரும். பரம்பரை நோயாக கூட சிலருக்கு இந்த பாதிப்பு வருகிறது.

    3-வது வகை ஆக்சலேட் கற்கள். உணவில் அதிகமாக தக்காளி, பசலைக் கீரை போன்ற சில வகை கீரைகளை அதிகம் சேர்ப்பது, சாக்லெட் சாப்பிடுவது, தேநீர் பருகுவது, முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிடுவது இந்த பாதிப்புக்கு வித்திடும்.



    4-வது வகை சிஸ்டீன் கற்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு இது. அல்லது பரம்பரையாகவும் வரலாம். பெரியவர்களுக்கு அரிதாக ஏற்படும்.

    5-வது வகை கற்கள் சிறுநீர் நோய் கிருமித் தாக்குதலால் வரும் இன்பெக்‌ஷன் ஸ்டோன். இது மிகவும் அபாயகரமான பாதிப்பு. ஏனெனில் இந்த பாதிப்பால் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. திரும்ப திரும்ப சிறுநீர் தொற்று வருபவர்களுக்கும் இந்த கற்கள் வரலாம். எனவே, சிறுநீர் தொற்று தானே என அலட்சியப்படுத்தக் கூடாது.

    சிறுநீரக கல் பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். கடுமையான வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டின் இரண்டு புறமும் வலி அல்லது ஒருபுறம் வலி, அடி வயிறு வலி, குறிப்பாக சிறுநீர் கழிக்க செல்லும்போது வலி ஏற்படுதல் போன்றவற்றை சொல்லலாம். சில நேரங்களில் சிறுநீர் ரத்தமாகவும் போகலாம்.

    சிறிய அளவிலான கற்கள் தானாகவே வெளியேறிவிடும். ஆனால், 8 மி.மீ. அளவுக்கு அதிகமான கற்கள் இருந்தால், தானாக வெளிவரும் வாய்ப்பு குறைவு. இதற்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சை தேவை.

    மேலும், ஒரு முறை சிறுநீரக கல் ஏற்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர்களுக்கு மீண்டும் கல் வராமல் பார்த்துக்கொள்ள முறையான கண்காணிப்பு சிகிச்சை, தொடர்ந்து சில மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.

    கல் வராமல் இருக்க அல்லது கல் வந்த பிறகும் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். அசைவ உணவுப் பிரியர்கள் அளவோடு இறைச்சிகளை உண்ண வேண்டும். மீன், முட்டை சாப்பிடலாம். லிட்டர் கணக்கில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு சேர்க்கக்கூடாது.

    சிறுநீர் கல் வராமல் இருக்க காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது, வெறும் தண்ணீராக மட்டுமின்றி, இளநீர், எலுமிச்சை சாறு, பழ ரசங்களாகவும் இருக்கலாம்.

    டாக்டர் சவுந்தரராஜன்,

    சிறுநீரக நிபுணர்
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, குடும்ப உறவுகளின் ஆரோக்கியம், வாழ்வின் சுறுசுறுப்பு, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.

    இவற்றில் நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

    கல்லீரல் ஜீரண உறுப்புகளின் ஒரு பகுதி 500க்கும் மேற்பட்ட வேலைகளை பார்ப்பது இதன் பொறுப்பு.

    * பித்த நீர் உற்பத்தி செய்து கொழுப்பு, புரதம், போன்ற இவற்றினை உடைத்து குடலில் உடனடி எளிதாய் உறிஞ்ச உதவுகின்றது.

    * வைட்டமின் கே உறிஞ்சப் பித்த நீர் மிக அவசியமாகின்றது. வைட்டமின் கே இல்லாவிடில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் கூட நிற்காது. ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    * கார் போன்ற டிரேட்டுகளை உடைத்து குளுகோசாக மாற்றி ரத்த ஓட்டத்தில் செலுத்தி திசுக்கள் அதனை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதிக குளுகோஸ்களை கோனாம் கல்லீரலில் சேமிக்கப்பட்ட தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் தாது, உப்புகளை பாதுகாத்து வைக்கின்றது. வைட்டமின் ஏ. பி12, டி, ஈ, கே மற்றும் இரும்பு காப்லர் போன்ற தாது உப்புகளை சேமித்து குறைபாட்டின் போது உதவுகின்றது.

    ரத்தத்தினை வடிகட்டி நச்சினை நீக்கி சுத்திகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது. இப்படி எண்ணற்ற கல்லீரல் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நம்மைத்தாக்கும் பல நோய்கள் கல்லீரலை பாதிக்கலாம்.

    * வைரஸ் தாக்குதல்

    மதுவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல், மது இல்லாமல் உணவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல், பித்த குழாய்கள் பாதிப்பு கல்லீரல் இறுகுதல், அதிக சர்க்கரை யால் ஏற்படும் பாதிப்பு என பல வகை பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துவதில் சுகாதாரமின்மை பச்சை குத்தி கொள்ளுவதில் சுகாதாரமின்மை ரசாயனங்கள், சர்க்கரை நோய், கூடுதலான எடை பொட்டாசியம் குறைபாடு ஆகியவைகளும் கல்லீரல் குறைபாட்டினை ஏற்படுத்தலாம்,

    மிக அதிகமாக பல்வேறு தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கும் கல்லீரலுக்கும் தாக்கு பிடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா.

    கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை ஏற்படலாம், வயிற்றில் வலி, வீக்கம் ஏற்படலாம். கால் கணுக்காலில் வீக்கம் ஏற்படலாம்.

    * சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்
    * சிறுநீர் அடர்ந்து இருக்கலாம்
    * ரத்தம் அல்லது கறுநிற வெளிப்போக்கு இருக்கலாம்.
    * அதிக சோர்வு ஏற்படலாம்.
    * எப்பொழுது தூங்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
    * வயிற்று பிரட்டல், வாந்தி, பசியின்மை இருக்கலாம்.
    * குழப்பமான உணர்வு இருக்கலாம்.

    * மூட்டுவலி, ரத்த கொதிப்பு, மன உளைச்சல் போன்றவைகளும் அறிகுறிகளாக இருக்கலாம்.
    இத்தகு பாதிப்புகள் இருப்பின் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. தவிர்ப்பு முறையாக கீழ்க்கண்டவைகளை பின் பற்றலாம்.
    * அதிகம் பதப்படுததப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

    * காய்கறி ஜூஸ் அருந்துங்கள்- காரட், பீட்ரூட், முட்டைகோஸ், புடலை, பீர்க்கை இவைகளில் ஏதேனும் ஜூஸ் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
    எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, இவற்றினையும் ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை, பூண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றினையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருக்க வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், பசலை, கரும்பு ஜூஸ், சர்க்கரை வள்ளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றினை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஆல்கஹாலினை தவிர்த்து விடுங்கள்.

    இஞ்சி, மஞ்சள். பட்டை, லவங்கம் இவற்றினை நம் முன்னோர்கள் நன்கு உணவில் சேர்த்தனர். ஆரஞ்சு பழம், குடை மிளகாய், காரட், வெள்ளரி, ஆப்பிள் இவையும் நவீன விஞ்ஞான ஆய்வின் சிபாரிசாக கல்லீரல் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்படுகின்றது. 
    சாப்பிடும்போது பேசக்கூடாது. உணவை ரசித்து சாப்பிடவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது.
    சாப்பிடும்போது பேசக்கூடாது. உணவை ரசித்து சாப்பிடவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது. அதற்கு மனித முகத்தின் வடிவமும் ஒரு காரணம் என்கிறது. மனித முகத்தில் மண்டை ஓட்டின் அமைப்பு கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது மருத்துவம்.

    இந்தத் தொண்டையை மேலும் 3 பகுதிகளாக பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதன்படி தொண்டையை முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை என்று 3 வகைப்படுத்துகிறார்கள். வாயிலிருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயை கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராஸிங் போல செயல்படுகிறது.

    சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். அதேபோல்தான் சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க்கொண்டிருக்கும். உணவுப் பாதை ரெயில்வே பாதை போல எப்போதாவதுதான் அதில் ரெயில் வரும். ஆனால் ரெயில் வரும்போது சாலை மூடப்படும். அப்படித்தான் உணவு வரும்போது, அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக்கொள்ளும். உணவு கடந்து போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.



    இதற்காக கதவு போன்ற அமைப்பு இருக்கிறது. இதனால் உணவுக்குழாய்க்குள் காற்றோ, சுவாசக்குழாய்க்குள் உணவோ போய்விடாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறக்கும். சுவாசக்குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும்போது சுவாசக்குழாய்க்குள் உணவுப்பொருள் தவறாக நுழைந்து விடும். அதை வெளியே தள்ளுவதற்காக சுவாசக்குழாய் வேகமான ஒரு விசையை உருவாக்கும்.

    அதைத்தான் புரையேறுதல் என்கிறார்கள். மருத்துவர்கள் இதனை வாட்ச்டர்க் மெக்கானிஸம் என்கிறார்கள். இந்தப் புரையேறுதல் சாப்பிடும்போது மட்டுமல்ல, சிலசமயங்களில் தூங்கும்போதும் கூட ஏற்படுகிறது. அசந்து தூங்கும்போது சிலசமயம் நம்மையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே இருக்கிறார் என்று சுவாசக்குழாய் சும்மா இருந்துவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும்.

    இதைத்தான் தூக்கத்தில் புரையேறுதல் என்கிறார்கள். இப்படி சுவாசக்குழாய்க்கும் உணவுக்குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதால் தான் சாப்பிடும்போது பேசக்கூடாது என்கிறார்கள். தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை, விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்தக் கெட்டித்தசை தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக்குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல் உண்டாகி காற்றுப்போகும் முயற்சி தடைபடும். 
    ×