search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eknath Khadse"

    • தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தபின் பா.ஜனதாவில் இணை இருக்கிறார்.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவில் முக்கிய தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. முன்னாள் மந்திரியான இவர் பா.ஜனதாவில் சில நாட்களில் இணைய உள்ளார்.

    கடந்த சில நாட்களாக பா.ஜனதா தலைமையுடன் ஏக்நாத் கட்சே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன்பின் அவர் சரத்பவார் அணியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளார். இது சரத்பவாருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு பா.ஜனாாவில் இணைய இருக்கிறார்.

    • மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே.
    • இவர் பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை மந்திரியாக இருந்தபோது நில பேரம் தொடர்பான மோசடி வழக்கில் சிக்கினார். இதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    இந்தநிலையில் மேல்-சபையில் பேசிய ஏக்நாத் கட்சே, பா.ஜனதா கட்சி மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவை மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா பணம் படைத்த பெரிய மனிதர்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்தவர் கோபிநாத் முண்டே. ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் பா.ஜனதா அவரை மறந்துவிட்டதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படுவதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோபிநாத் முண்டே எனது ஆட்சேபனையை நிராகரித்தார்.

    பா.ஜனதாவின் வளர்ச்சியில் கோபிநாத் முண்டேவின் பெரும் பங்களிப்பு இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தையும் இப்போது மறந்துவிட்டார்கள். முண்டேவின் குடும்பமும், நானும் சில காலம் கட்சியில் அறிவிக்கப்படாத புறக்கணிப்பை எதிர்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோது ஏக்நாத் கட்சே முதல்-மந்திரி போட்டியில் இருந்தார். ஆனால் கட்சி அவருக்கு பதிலாக தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே கூறியுள்ளார். #EknathKhadse #BJP
    மும்பை :

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏக்நாத் கட்சே. வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மந்திரி சபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். இவர் மீது நில முறைகேடு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்காரணமாக அவர் தனது மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் புசாவால் நகர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேயும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உல்லாஸ் பாட்டீலும் கலந்துகொண்டனர்.

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய உல்லாஸ் பாட்டீல், பா.ஜனதா கட்சி ஏக்நாத் கட்சேவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் காங்கிரசில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்தார்.

    இதற்கு முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே பதில் அளிக்கும் வகையில் பேசுகையில், “நீங்கள் (உல்லாஸ் பாட்டீல்) நினைப்பதை நான் கண்டிப்பாக யோசிக்கவில்லை. உங்கள் கட்சியானாலும், எனது கட்சியானாலும், யாரும் ஒரே கட்சியில் இருக்கப்போவதில்லை. ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.

    அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டும். அநீதி இழைத்தவர்கள் சரியான நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வலிமையை புரிந்துகொள்வார்கள்” என்றார்.

    இதன்மூலம் பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

    இந்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அவர் அளித்த பதிலில், “ நான் பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதில்லை. மேலும் கட்சி மீது அதிருப்தியிலும் இல்லை. எனக்கு ஏதேனும் வருத்தம் ஏற்படுமாயின் நான் கட்சி தலைவரிடம் இதுகுறித்து பேசி முடிவெடுப்பேன்” என்றார். #EknathKhadse #BJP
    ×