சரத் பவார் கட்சி தலைவர் பா.ஜனதாவில் இணைகிறார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தபின் பா.ஜனதாவில் இணை இருக்கிறார்.
சரத் பவார் கட்சி தலைவர் பா.ஜனதாவில் இணைகிறார்
Published on

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவில் முக்கிய தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. முன்னாள் மந்திரியான இவர் பா.ஜனதாவில் சில நாட்களில் இணைய உள்ளார்.

கடந்த சில நாட்களாக பா.ஜனதா தலைமையுடன் ஏக்நாத் கட்சே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன்பின் அவர் சரத்பவார் அணியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளார். இது சரத்பவாருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு பா.ஜனாாவில் இணைய இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com