search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank employees"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும்.

    புதுடெல்லி:

    வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.

    இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

    அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல் கல்லாகும்.

    வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ஊதிய உயர்வு 2022, நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.

    சென்னை:

    பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.

    இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

    ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ரூ.7,898 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
    • 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர். 

    • பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
    • இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் பண சேமிப்பு கிடங்கும் உள்ளது.

    வங்கி பண சேமிப்பு கிடங்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கிக்கு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.70.40 கோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது பல்வேறு வகைகளில் ரூ.3.28 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பண சேமிப்பு கிடங்கு கடந்த ஆண்டு 3 முறை முறைகேடாக திறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார். புகாரின் பேரில் வங்கி அலுவலர் செல்வராஜன், மேலாளர் ராஜன், அலுவலர் ஜெயசங்கரன், சார்பு அலுவலர் ஸ்ரீகாந்த், பண பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் ஆகியோர் மீது சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட மூத்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி இறந்து விட்டார்.

    புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை கொண்டு 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணையின் போது வங்கி கதவுகள் எதற்காக 3 முறை திறக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறு வங்கியில் டெபாசிட் செய்து உள்ளார்களா? அல்லது சொத்துக்கள் வாங்கி உள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி போலி நோட்டுகள் தயாரித்து அதனை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை அவர்கள் கைப்பற்றி இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் 5 பேரும் கைதாக வாய்ப்பு உள்ளது.

    இந்த விவகாரத்தில் இந்த 5 பேர் மட்டும் தான் காரணமா, அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பணம் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது. #BankWorkersStrike
    சென்னை:

    நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் 10,500 வங்கிகளை சேர்ந்த 45 ஆயிரம் பேர் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பணம் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது.

    தினமும் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை நடைபெறாமல் முடங்கியதால் தொழில் முனைவோர், வர்த்தக பிரமுகர்கள், சிறு நிறுவனங்கள், தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் 2-வது நாளாக நீடிப்பதால் சுமார் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் தேங்கியுள்ளன.

    வங்கிகள் மூலம் நடை பெறும் அனைத்து பண பரிமாற்ற சேவைகளும் 2 நாட்களாக இல்லாததால் தொழில் சார்ந்த நடவடிக் கைகள், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

    ஏ.டி.எம்.களில் நிரப்பி வைக்கப்பட்ட பணமும் நேற்றே தீர்ந்துவிட்டன. இதனால் இன்று பெரும் பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் மூடி கிடக்கின்றன. பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம்.களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சிறிய அளவிலான அன்றாட செலவுகளை மேற்கொள்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவித்தனர். சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.



    பெட்ரோல், டீசல், மளிகை செலவினங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிகமாக பயன்படுத்தினர்.

    வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பாரிமுனையில் உள்ள குறளகம் அருகில் ஒன்றுதிரண்டு இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அனைத்து வங்கிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் எச்.வெங்கடா சலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கோரிக்கை முழக்க கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.#BankWorkersStrike
    9 சங்கங்களை சேர்ந்த தலைமை அமைப்பான வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வரும் 30, 31 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. #BankStrike
    சிம்லா:

    வங்கி பணியாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்தின் தாமதம் மற்றும் அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து வரும் 30, 31 தேதிகளில்  வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பின் இமாச்சலப்பிரதேசம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம் வெர்மா தெரிவித்துள்ளார்.

    இந்திய வங்கிகள் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2 சதவீத சம்பள உயர்வும்,  சில வங்கிகளில் மூன்றாம் படிநிலை பணியாளர்கள் வரைதான் அளிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் எங்கள் அமைப்புக்கு உட்பட்ட 9 சங்கங்களின் சார்பாக இந்த போராட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.#BankStrike
    ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் 30 மற்றும் 31-ந்தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    சென்னை

    வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் தங்களது ஊதியத்தை மாற்றி அமைக்க கோரி 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பண மதிப்பு நீக்கத்தின் போது 2 மாதம் நாள் முழுவதும் இரவு-பகலாக உழைத்தனர். 31 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கியதும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துபவர்களும் இவர்கள் தான். ஆனால் அவர்களின் சம்பளம் மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளைவிட குறைவாக உள்ளது.

    வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள உயர்வு கடந்த 2017-ம் வருடம் நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தவேண்டியது.

    ஊதிய உயர்வுக்கான கோரிக்கை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் நடக்கவில்லை.

    பேச்சுவார்த்தையின்போது இந்தியன் வங்கிகள் சம்மேளனம் வழக்கத்திற்கு மாறாக இளநிலை மற்றும் நடுநிலை அதிகாரிகளுக்கு மட்டுமே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் 2 சதவீதம் சம்பள உயர்வே சாத்தியம் எனவும் கூறினார்கள்.

    இதனை கண்டித்து உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 9 சங்கங்களின் கூட்டமைப்பான யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் எப்போதும் போல 7-வது நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார் 
    ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். #Bankstrike
    சென்னை:

    வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது.

    இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Bankstrike #BankEmployees #Bank #Strike
    ×