search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "71வது பிறந்தநாள்"

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி மண்டபத்தில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். #EVKSElangovan
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று 71-வது பிறந்தநாள்.

    இதையொட்டி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி மண்டபத்தில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இதையொட்டி 71 கிலோ கேக்கை நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக வாங்கி வைத்திருந்தனர். அந்த கேக்கை வெட்டி தானும் உண்டு தொண்டர்களுக்கு வழங்கினார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் தான்மானத் தலைவர் இளங்கோவன் வாழ்க, அண்னை சோனியா காந்தி வாழ்க, வருங்கால பிரதமர் ராகுல்காந்தி வாழ்க என கோ‌ஷமிட்டனர்.

    விழாவில் நிர்வாகிகள் 71 கிலோ எடை கொண்ட லட்டுகளை வழங்கினர். மேலும் இளங்கோவனுடன் கட்சி நிர்வாகிகள் செல்பியும் எடுத்து கொண்டனர். #EVKSElangovan

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



    இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  85.2 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 33.7 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 71.1 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 75.2 சதவீதமும், நான்காவது கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. #MizoramAssemblyElections
    ஐஸ்வால்:

    மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.

    40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
     
    கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. தலைநகர் ஐஸ்வால் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.



    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐஸ்வால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல் மந்திரியும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐஸ்வால் வடக்கு-2 தொகுதிக்கு உட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். 

    இந்நிலையில், மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். #MizoramAssemblyElections
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நான்காவது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 6 மாவட்டங்கள் என மொத்தம் 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நான்காவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.



    இன்றைய நான்காம்கட்ட தேர்தலில் 99 கிராம தலைவர் பதவி மற்றும் 969 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர். 

    மீதமுள்ள 339 கிராம தலைவர் பதவி மற்றும் 1,749 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 5,470 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க சுமார் 4.72 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினர்.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  82.4 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 32.3 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 71.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 75.2 சதவீதமும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம். இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி வரி வசூலை கைவிட வேண்டும். வாகன காப்பீட்டு தவணை தொகை பல மடங்கு உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி தேனி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த போதிலும், பஸ்கள், ஆட்டோக்கள் நேற்று வழக்கம் போல் ஓடின. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சுமார் 350 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 97 சதவீதம் பஸ்கள் நேற்று இயங்கின. அதேபோல் மாவட்டம் முழுவதும் 90 சதவீதம் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

    பஸ், ஆட்டோக்கள் போக்குவரத்து போதிய அளவில் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. வேலை நிறுத்தம் அறிவிப்பு காரணமாக மக்கள் பலரும் வெளியூர் செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தது தெரியவருகிறது. இதனால், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தேனியில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடந்தது.

    இதற்காக தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் விலக்கில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். இவர்கள், தேனி-மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். அவர்களை நேரு சிலை சிக்னல் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன், ஏ.ஐ.யு.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மறியலின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    மறியல் செய்த நிர்வாகிகள் உள்பட மொத்தம் 71 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    அதேபோல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் நிலையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையில் உள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் வந்தனர். 
    ×