search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5ஜி"

    இந்தியாவில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்ய உதவும் புதிய சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. #5G



    இந்திய டெலிகாம் சந்தையில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் எலெக்டிரானிக் சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கால் டிராப் பிரச்சனை மட்டுமின்றி 5ஜி இணைப்புக்களில் புதிய சிப்செட் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவீன சாதனங்களில் இதுவரை பயன்படுத்தப்படும் அனைத்துவித மின்னணு சிப்செட்களும் வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கியவை ஆகும். இந்தியாவில் செமிகன்டக்டர் உற்பத்தி ஆலை இல்லாததே இதற்கு காரணமாக இருக்கிறது. சான்க்யா லேப்ஸ் பயன்படுத்தும் சிப்செட்களும் தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    புதிய சிப்செட் மொபைல் நெட்வொர்க்கில் இருந்து வீடியோ தரவுகளை பிரிக்கும் என்பதால் அழைப்பு தரம் உயரும் என சான்க்யா லேப்ஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பராக் நாயக் தெரிவித்தார். 



    சான்க்யாவின் பிரித்வி 3 சிப்செட் மொபைல் போன்களில் நேரடி வீடியோ டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்குவதோடு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாட்டிலைட் போனாக மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. பிரித்வி 3 சிப்செட் வெளியீட்டு நிகழ்வில் டெலிகாம் துறை மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டு, புதிய சிப்செட்டை அறிமுகம் செய்தார்.

    புதிய சிப்செட் சார்ந்த மொபைல் போன் உபகரணங்களை டாங்கிள் வடிவிலும் மொபைல் போன்களாகவும் அடுத்த சில ஆண்டுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என நாயக் மேலும் தெரிவித்தார்.  

    செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்க சில காலம் ஆகும். உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த சிப்செட்டை அவர்கள் உருவாக்கும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்துவர். 5ஜி சேவைகளில் எங்களது தொழில்நுட்பத்தை வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என நாயக் தெரிவித்தார்.
    குவால்காம் நிறுவனம் வர்த்தக ரீதியிலான உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்தது. #Qualcomm



    ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்காம் நிறுவனம் உலகின் வர்த்தர ரீதியிலான முதல் 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என அழைக்கப்படும் இந்த பிராசஸர் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் மொபைல் சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கும்.

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் QTM052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல்கள் மற்றும் இதர சிக்னல் உபகரணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மொபைல் போன் வடிவமைப்பாளர்கள் புதிய சாதனங்களை வடிவமைக்க அதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, 5ஜி சேவையை 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைவான எம்.எம். வேவ் பேன்ட்களை வழங்குகிறது.



    அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை 2019 ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது. 2020 மற்றும் 2021 ஆண்டு வாக்கில் இந்தியா மற்றும் லத்தின் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.எம். வேவ் வசதி மற்றும் 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைந்த வர்த்தக ரீதியில் உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என குவால்காம் தெரிவித்துள்ளது. 



    இதுதவிர புது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 4ம் தலைமுறை ஆன்-டிவைஸ் ஏ.ஐ. என்ஜின், முந்தைய தலைமுறை மொபைல் பிராசஸரை விட மும்மடங்கு சிறப்பான ஏ.ஐ. செயல்திறன், ட்ரூ 4K HDR வீடியோ பதிவு செய்யும் வசதி, 3டி சோனிக் செனசார், உலகின் முதல் வர்த்தக ரீதியிலான அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கிறது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 7 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் மூலம் உருவாகி இருக்கிறது. இந்த பிராசஸர் உலகின் முதல் கம்ப்யூட்டர் விஷன் ஐ.எஸ்.பி. வழங்கப்பட்டு இருப்பதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக தரத்தில் படமாக்கும் வசதி கொண்டிருக்கிறது. #Qualcomm #Snapdragon855
    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்துள்ளார். #mimix3 #5G



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் 3 அறிமுகமானதும், இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார்.

    லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: Weibo

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும். புதிய 5ஜி வேரியன்ட் புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
    ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை விவரங்களைத் தொடர்ந்து பார்ப்போம். #Huawei #foldablephone



    ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக ராயோல் நிறுவனம் ஃபிலெக்ஸ்பை என்ற பெயரில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பின் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு இருக்கும் என்பதை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பிய பகுதிக்கான தலைவர் வின்சென்ட் பேங் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனே அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஐரோப்பியர்களுக்கு 5ஜி சேவைகள் அதிவேகமாக வழங்குவதில் ஐரோப்பியா தீவிரம் காட்டுவதாக தெரிகிறது என ஹூவாய் நுகர்வோர் வியாபாரக் குழு தலைவர் வால்டர் ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனத்தின் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பேட்டரி மற்றும் போட்டோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹூவாய் அதிகளவில் முதலீடு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் மட்டும் சுமார் 1300 முதல் 1800 கோடி யூரோக்களை முதலீடு செய்யும் மிகப்பெரும் தனியார் நிறுவனமாக ஹூவாய் இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி சாதனம் எவ்வாறு அழைக்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என பேங் தெரிவித்திருக்கிறார்.
    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #5G #iPhone



    ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். தரப்பில் இருந்து 5ஜி சாதனம் குறித்த தகவல்கள் மர்மமாக இருந்து வந்த நிலையில் 5ஜி ஐபோன் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.

    அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான மோடெம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இன்டெல் நிறுவனம் 8060 மோடெம்களை உருவாக்கி வருவதாகவும் இவை 5ஜி ஐபோனில் சோதனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8161 ரக சிப்செட் இன்டெல்லின் 10 நானோமீட்டர் வழிமுறையில் ஃபேப்ரிகேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் போனில் கனெக்டிவிட்டி சீராவகவும் வேகமாக்க முடியும்.

    சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் இன்டெல் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 8060 சிப்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு வெப்பத்தை வெளியேற்றியது தான் என்றும் இதை சரி செய்வதில் இன்டெல் அதிகளவு சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.



    அமெரிக்காவின் பிரபல டெலிகாம் சேவை வழங்கும் வெரிசான் மற்றும் எடி&டி உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி போன்களுக்கான சேவையை வழங்க மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரத்தை நாடுகின்றன. மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் அதிகளவு செயல்திறன் கொண்டவை ஆகும்.

    இதனால் போனில் அதிகளவு வெப்பம் ஏற்படுவதோடு, வெப்பத்தை போனின் வெளியே உணர முடியும். இவ்வாறு ஏற்படும் போது போனின் பேட்டரி ஆயுள் பெருமளவு பாதிக்கப்படும். எனினும் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து 5ஜி மோடெம்களை விநியோகம் செய்ய முயற்சிக்கலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மீடியாடெக் உடன் இணைந்து சிப் விநியோம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. எனினும் இது இரண்டாவது திட்டமாக இருக்கும் என்றும் இன்டெல் நிறுவனத்திற்கு போதுமான நேரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    5ஜி தொழிலநுட்பம் கொண்ட மொபைல் போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ, ஹூவாய் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் 5ஜி மோடெம் சிப்களை குவால்காம் விநியோகம் செய்கிறது.
    குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட் மாடலை இந்திய மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அறிமுகம் செய்தது. #qualcomm



    மொபைல் போன் சிப்செட் உருவாக்கும் குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலை இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

    வட அமெரிக்கா மற்றும் கொரியாவில் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பம் அதிவேக இணைய வேகத்தை சீராக வழங்குகிறது. 

    “4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை இயக்கும் வசதி கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன் வடிவம் இது. இந்த ஸ்மார்ட்போன் மில்லிமீட்டர் வேவ் பேன்ட்கள் மற்றும் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் பேன்ட்களை சப்போர்ட் செய்யும். 

    இதுபோன்ற வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கின்றன,” என குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணை தலைவர் துர்கா மல்லாடி தெரிவித்தார். 



    “இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிக பிரபலமானவையாக இருக்கின்றன. இங்கு சாதனம் மற்றும் உள்கட்டமைப்புகள் என இரண்டும் தயார் நிலையில் இருக்கும். அந்த வகையில் இந்திய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது இந்தியாவில் 5ஜி சேவை சீராக வெளியிடப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

    பொதுவாக புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் முதலில் பிரீமியம் சாதனங்களில் வழங்கி, அதன்பின் விலை குறைந்த சாதனங்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இதன் பின் புதிய தொழில்நுட்பம் வெகுஜன மக்களிடையே அதிக வரவேற்பை பெறும்.

    “தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் தான் உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நிறுவனங்கள் இதனை வெளியிட துவங்குவர், இதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
    இந்தியாவில் 4ஜி போன்றே அதிவேக 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. #5G #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் இன்னமும் பெருமளவு பயனர்கள் ஃபீச்சர்போன் பயன்படுத்தி வருவாதல், டெலிகாம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகக்கும் வாய்ப்புகள் குறைவு தான என ஜியோ தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் இன்றும் ஃபீச்சர் போன் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் தற்சமயம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையில் கவனம் செலுத்தவில்லை எனில் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

    5ஜி பயன்பாடு குறித்து பேசும் போது, 2019-20ம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், எனினும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021ம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். 



    இந்தியாவில் 5ஜி புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என அவர் தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் சாதனங்கள் தற்சமயம் வெளியாகாத நிலையில், இவை 2019ம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “2020ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டிற்கு வரயிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் கட்டணத்தை 2018ம் ஆண்டில் கணிப்பது கடினமான ஒன்று,” என மேத்யூ தெரிவித்தார். இந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஜியோ நிறுவனம் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓட்டுனர் இன்றி இயங்கும் காரினை சோதனை செய்தது.

    4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் தெரிவித்தார்.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய வசதி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு உறுதி செய்திருக்கிறார். #Huawei



    ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

    முன்னதாக மடிக்கக்கூடிய வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முன்னதாக ஜூலை மாதத்தில் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான செலவை 15 பில்லியன் டாலர்களில் இருந்து 20 பில்லியன் டாலர்களாக உயர்த்தியதாக அறிவித்தது.

    அடுத்த ஆண்டு வாக்கில் ஹூவாய் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என அவர் தெரிவித்தார். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் மேட் 20X போன்றே பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ஹூவாய் மடிக்கக்கூடிய போன் குறித்த விவரங்கள் முதற்கட்டமாக ஜூலை மாதத்தில் வெளியானது. எனினும் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக சில ஆண்டுகளாக தகவல் வெளியாகி வருகிறது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. 

    இத்துடன் சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் நுகர்வோர் மின்சாதன விழாவில் நடைபெற்ற தனியார் அரங்கில் பிரீவியூ செய்யப்பட்டது. இதில் ஸ்மார்ட்போனின் விலை KRW 20,00,000 (இந்திய மதிப்பில் ரூ.1,30,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

    5ஜி நெட்வொர்க் சேவையை வழங்குவதில் ஹூவாய் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஹூவாய் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன இணை நிறுவனர் அறிவித்துள்ளார். #OnePlus



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த புரளிகளுக்கு, ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் பதில் அளித்திருக்கிறார்.

    அதன்படி ஹாங்காங் நகரில் நடைபெற்ற 4ஜி/5ஜி உச்சிமாநாட்டில் கால் பெய், அடுத்த ஆண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிடும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக ஒன்பிளஸ் இருக்கும் என தெரிவித்தார். 



    மேலும் ஆகஸ்டு மாதத்தில் குவால்காம் தலைமையகத்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் வெளியிடும் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும் இது 2019-ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் சமீபத்திய QT052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் தவிர அசுஸ், ஃபுஜிட்சு, ஹெச்.எம்.டி. குளோபல், ஹெச்.டி.சி., இன்சீகோ/நோவாடெல் வயர்லெஸ், எல்.ஜி., மோட்டோரோலா, நெட்காம் வயர்லெஸ், நெட்கியர், ஒப்போ, ஷார்ப், சியெரா வயர்லெஸ், சோனி மொபைல், டெலிட், விவோ, டபுள்யூ.என்.சி. மற்றும் சியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் 2019-ம் ஆண்டு 5ஜி பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், X50 5ஜி என்.ஆர். மோடெம்களை சோதனை செய்ய துவங்கி இருக்கின்றன.



    குவால்காம் நிறுவன சிப்செட் முதல்முறையாக Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்றும், இது 5ஜி வசதி கொண்ட வணிக ரீதியிலான முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். சியோமி மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து பல்வேறு இதர நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை 2019-ம் ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக குவால்காம் நிறுவன தலைவர் கிரிஸ்டியானோ அமோன், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் இருபெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனகளில் 5ஜி தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என்றும், இதில் ஒரு மாடல் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் மற்றொன்று விடுமுறை காலத்திலும் அறிமுகமாகலாம் என தெரிவித்தார். #OnePlus #5G #Smartphones
    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. போட்டி நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை குறைத்தும், ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளில் கூடுதல் பலன்களை அறிவித்து வருகின்றன.

    புதிய சலுகை மட்டுமின்றி நாட்டில் 4ஜி சேவை பயன்பாடும் வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிகமுக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில், மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே 5ஜி சேவைகளையும் முதலில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 



    இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    “5ஜி-க்கு தேவையான எல்.டி.இ. நெட்வொர்க் ஜியோவிடம் தயார் நிலையில் இருக்கிறது, மேலும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆறு மாதங்களில் வழங்க முடியும்,” என பெயர் அறியப்படாத அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எனினும் இதை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், புதிய தொழில்நுட்பத்தை சீராக இயக்கும் சாதனங்கள் வெளிவர வேண்டும். புதிய தொழில்நுட்பம் தற்போதைய 4ஜி-யை விட அதிவேகமாக இணைய இணைப்பை பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த டெலிகாம் நிறுவனத்தை கைப்பற்றி இந்தியாவில் 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை வழங்க இருக்கிறது.






    இந்தியாவில் 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை முழுமையாக வழங்க ரிலையன்ஸ் ஜியோ அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. 

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராடிசிஸ் கார்ப்பரேஷன் டெலிகாம் சேவை மற்றும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனத்தை 7.5 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.510 கோடி) கொடுத்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வாங்க இருக்கிறது.

    இதன் மூலம் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை விரிவாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 1.72 டாலர்கள் வீதம் கட்டணமாக செலுத்த இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மட்டுமின்றி தொழில்நுட்ப நிறுவனமாகவும் உருவெடுக்கும்.


    கோப்பு படம்

    அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் சர்வதேச சந்தையில் 5ஜி, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் ஓபன் சோர்ஸ் ஆர்கிடெட்ச்சர் அடாப்ஷன் உள்ளிட்ட பிரிவுகளில் புதுமைகளை கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனமாக ஜியோ உருவெடுக்கும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

    புதிய நிறுவனத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிதி வழங்க இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனம் மென்பொருள், வன்பொருள், டெலிகாம் சேவை வழங்குவோருக்கு சேவை மற்றும் உபகரணங்களை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ராடிசிஸ் நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் 2018 நான்காம் காலாண்டு வாக்கில் நிறைவுற இருக்கிறது.

    மார்ச் 2018 காலாண்டு வாக்கில் ராடிசிஸ் நிறுவனம் 64 லட்சம் டாலர்கள் நஷ்டமடைந்து, வருவாய் ரீதியாக 2.62 கோடி டாலர்கள் இழந்தது. அமெரிக்காவின் ஆரிகான் பகுதியை சார்ந்த ராடிசிஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இயங்கும் இந்த ஆலையில் மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பொறியாளர் குழு, விற்பனை மற்றும் சேவை பிரிவுகள் இயங்கி வருகின்றன.
    ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் செய்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை செயல்படுத்தியிருக்கிறது.
    பீஜிங்:

    ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது. 

    புதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3டி போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.



    இதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டு இன்டகிரேட்டெட் ஸ்ட்ரக்சர்டு லைட் கேமரா பொருத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனினை ஒப்போ பயன்படுத்தியது. இது ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3டி டெப்த்-ஐ சேகரிக்கிறது. பின் இந்த தகவல்கள் 5ஜி சூழலில் அனுப்பப்பட்டு டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது. 

    அதிவேக, அதிக திறன் மற்றும் குறைந்த லேட்டென்சி மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு துறையில் புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. மொபைல் இன்டர்நெட் யநிஜ உலகிற்கும், டிஜிட்டல் உலகிற்கும் இடைய இருக்கும் எல்லைகளை குறைக்கிறது. அந்த வகையில் 3டி தரவுகள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.

    புதிய 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உருவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி பைலட் தி்ட்டத்திற்கென குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதில் முதன்மை நிறுவனமாக ஒப்போ இருக்கும் என தெரிவித்திருந்தது. 
    ×