search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மலிவு விலையில் 5ஜி சேவை வழங்க தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ
    X

    மலிவு விலையில் 5ஜி சேவை வழங்க தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ

    இந்தியாவில் 4ஜி போன்றே அதிவேக 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. #5G #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் இன்னமும் பெருமளவு பயனர்கள் ஃபீச்சர்போன் பயன்படுத்தி வருவாதல், டெலிகாம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகக்கும் வாய்ப்புகள் குறைவு தான என ஜியோ தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் இன்றும் ஃபீச்சர் போன் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் தற்சமயம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையில் கவனம் செலுத்தவில்லை எனில் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

    5ஜி பயன்பாடு குறித்து பேசும் போது, 2019-20ம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், எனினும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021ம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். 



    இந்தியாவில் 5ஜி புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என அவர் தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் சாதனங்கள் தற்சமயம் வெளியாகாத நிலையில், இவை 2019ம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “2020ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டிற்கு வரயிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் கட்டணத்தை 2018ம் ஆண்டில் கணிப்பது கடினமான ஒன்று,” என மேத்யூ தெரிவித்தார். இந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஜியோ நிறுவனம் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓட்டுனர் இன்றி இயங்கும் காரினை சோதனை செய்தது.

    4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் தெரிவித்தார்.
    Next Story
    ×