search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17 பேர் பலி"

    சென்னையில் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் கைதான 17 குற்றவாளிகளை இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #chennaigirlharassment
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக, அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்த ரவிகுமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது தெரிய வந்தது.

    கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். வருகிற 31-ந்தேதி வரை இவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    குற்றவாளிகளை உறுதி செய்வதற்கான அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் ரோகித்துரை, கலைபொன்னி ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அதே வயதுடைய வேறு குற்றவாளிகள் 10 பேரும் நிறுத்தப்பட்டனர். இதில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.

    இந்த நிலையில், குற்றவாளிகள் 17 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்ற மகளிர் நீதிமன்றம், கற்பழிப்பு குற்றவாளிகளை 5 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, குற்றவாளிகள் 17 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். அவர்களிடம் இன்று முதல் 5 நாட்கள் விசாரணை நடத்துகிறார்கள். #chennaigirlharassment
    புழல் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இன்று நடந்தது. அப்போது கற்பழிப்பு குற்றவாளிகளை சிறுமி அடையாளம் காட்டினார். #chennaigirlharassment #PuzhalJail
    செங்குன்றம்:

    அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

    கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை வக்கீல்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் நடந்தது. இதைதொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 31-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் புழல் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இன்று நடந்தது.

    இதற்காக எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் கலைபொன்னி, ரோகித் ஆகியோர் வந்து இருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள்.

    கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினார். #chennaigirlharassment #PuzhalJail
    சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்த 17 கயவர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று ஈரோட்டில் மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaigirlharassment
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பீனிக்ஷ் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் இன்று ஈரோடு மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்று திளனாளிகள் நல அலுவலகம் முன் திரண்டனர்.

    நலச்சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் 11 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்த 17 கயவர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாய்தளம் மற்றும் வீல்சேர் அமைத்து கொடுக்க வேண்டும். மாற்று திறனாளி நல அலுவலக அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களைமாற்ற வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. #chennaigirlharassment
    அயனாவரத்தில் 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கை எடுத்து தீர்ப்பு வழங்குவோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். #chennaigirlharassment #chennaihighcourt

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, அயனாவரத்தில் 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அதேபோல, திருவண்ணாமலையில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை 8 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அண்மை காலங்களில், தமிழகத்தில் அதிகம் நடக்கின்றன.

    எனவே, பெண்களுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று வக்கீல் சூரிய பிரகா‌ஷம் கோரிக்கை விடுத்தார்.

    இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. தாமாக முன்வந்து வழக்கு எல்லாம் பதிவு செய்ய முடியாது. சிறுமி தொடர்பான வழக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் போலீசார் விரைவாக விசாரிப்பார்கள். கோர்ட்டும் விரைவாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்கும் என்று கருத்து கூறினர்.

    இதையடுத்து பாடம் நாராயணன் என்பவர் எழுந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, பாலியல் கொடுமைக்கு உள்ளான சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கவேண்டும். ஆனால், போலீசார் இந்த கமிட்டியிடம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை இதுவரை ஒப்படைக்கவில்லை என்று கூறினார்.

    இதே கருத்தை வலியுறுத்தி, குழந்தைகள் நல கமிட்டியின் வக்கீல் மெக்ரூனிஷாவும் வாதம் செய்தார். பின்னர், பல மாவட்டங்களில், குழந்தைகள் நல கமிட்டி அமைக்கப்படாமலும், அதிகாரிகள் நியமிக்கப்படாமலும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ஏற்கனவே, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நல கமிட்டிக்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இப்போது மீண்டும் அதே உத்தரவை பிறப்பிக்கின்றோம். 11 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி முன்பு ஆஜர்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.


    இதை தொடர்ந்து டிராபிக் ராமசாமி, ‘11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைதான 17 பேர் நேற்று மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை வக்கீல்கள் கொடூரமாக தாக்கினார்கள். போலீஸ் காவலில் உள்ள கைதிகளை வக்கீல்கள் தாக்கியது சட்டப்படி குற்றம்’ என்று வாதிட்டார். இதற்கு நீதிபதிகள் எந்த பதிலும் சொல்லவில்லை. #chennaigirlharassment #chennaihighcourt

    அயனாவரத்தில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி 17 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கைதான 17 பேரிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட உடனேயே தாமதமின்றி உரிய நடவடிக்கைக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 50 போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் காரணமாகவே சிறுமியை சீரழித்த 17 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறுமி கற்பழிப்பு வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி ஹாசினி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான வாலிபர் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது போல 17 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படிக்கிறார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவியின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி, குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மிரட்டி தங்கள் ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். இதுதவிர குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களும் சிறுமியை சீரழித்துள்ளனர்.

    ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கினர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், அவர் பல நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.



    லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்திய போலீசார் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  #ChennaiGirlHarassment #POCSOAct
    மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #FireworksExplosions
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.

    இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், அங்கு திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி பலியாகிளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். #Venezuela #NightClub #Violence
    கராக்கஸ்:

    வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸ். அங்கு லாஸ் காட்டராஸ் என்ற இரவு விடுதி உள்ளது.

    அதில் நேற்று முன்தினம் பள்ளி கல்வி ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.



    அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.   #Venezuela #NightClub #Violence #tamilnews
    உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #UPBusAccident #BusOverturned
    மெயின்புரி:

    உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற அந்த பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.



    பேருந்திற்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் போலீசார் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #UPBusAccident #BusOverturned

    ×