search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1காங்கிரஸ்"

    • சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • 1,040 மூத்த தி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    பொற்கிழி வழங்கும் விழா சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த மற்றும் நலிந்த தி.மு.க தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டியில் நேற்று மாலை நடந்தது.

    சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வ கணபதி வரவேற்று பேசி னார். அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், 1,040 மூத்ததி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளால் பொற்கிழி

    வழங்குவதை நான் பெரு மையாக கருதுகிறேன். காரணம் நான், காண கிடைக்காத அண்ணா வையும், பெரியாரையும் உங்கள் வழியாக காண்கி றேன். தி.மு.க.வின் அனைத்து இன்ப, துன்பங்க ளிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்கு மிகப்பெரியது. அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும்.

    மோடிக்கு விசுவாசம்

    அதேபோல் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு இளைஞர் அணி சார்பில் கூடுதலான நிதியாக சுமார் 24 கோடி ரூபாய் வங்கியில் இட்டு வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் இருந்து

    கிடைக்கும் வட்டி தொகையை இரு மாதங்க ளுக்கு ஒரு முறை பெறப்பட்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்கள் நலம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவர் இருந்து வரும் கட்சியின் முதல் எழுத்தான அண்ணாவையே மறந்து, அவர் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபர்களுடன் விசுவாசமாக உள்ளார். குறிப்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விசுவாசம் இல்லாத நிலையில், தற்போது மோடி, அமித்ஷா, கவர்னர் ஆகியோருக்கு மட்டுமே விசுவாசமாக செயல்படுகிறார்.

    சுயமரியாதை

    தற்போது இடைத்தேர்த லுக்காக ஈரோடு பகுதியில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பெரியாரின் நினைவு இல்லத்திற்கு சென்று, தனது தன்மானம், சுயமரியாதையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கு உங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான நேரு பணியாற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வெற்றியை ஈட்டித்தர வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணையில் இருந்து 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது.

    இதனையடுத்து அணை யின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மழைப் பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.95 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் இன்று சற்று குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.87 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 250 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி என மொத்தம் 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனையடுத்து பொதுப்பணித் துறையினர் உஷார் படுத்தப் பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். 

    • தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

    ஈரோடு வட்டாரம் மேட்டுநாசுவன்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத்தொகுப்பில், புதர்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

    தமிழக அரசால் வரும் 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும், ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட வேளாண் துறையின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 60 கிராம ஊராட்சிகளும், 2022-23-ம் ஆண்டு 44 கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதார துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மற்றும் எரிசக்தி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி களாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2021-22-ம் ஆண்டு 31 தரிசு நிலத்தொகுப்புகளில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 11 கிராம பஞ்சாயத்துகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு 9 இடங்களில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கபட்டுள்ளது.

    2022-23-ம் ஆண்டு 20 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 13 இடங்களில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இவ்வாறான தொகுப்பு களில் முட்செடிகள் மற்றும் புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாக தரிசு நிலங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.

    பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தரிசு நில தொகுப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் படுகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் நிலையான வருமானம் தரக்கூடிய பழப்பயிர்கள், காய்கறி தோட்டம் மற்றும் மரவகைப் பயிர்கள் தொகுப்பு விவசா யிகளின் பங்கேற்புடன் சாகுபடி செய்ய ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் பொறியியல் துறை மூலம் 10 எச்.பி மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் இறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவையல்லாது கலைஞரின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிராக உளுந்து சாகுபடிக்கு மானியம், கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், தார்பாலின் ஆகியவையும், தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டு தோட்டம் அமைக்க தளைகள் விநியோகம் நெகிழி கூடைகள், பழச்செடிகள் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 100 சத மானியத்தில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் மண் வரப்புகள், கல் வரப்புகள் அமைத்தல் போன்ற நீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2021-22-ம் ஆண்டு ரூ.425.5 லட்சம், 2022-23-ம் ஆண்டு ரூ.97.40 லட்சம் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தொகுப்புகளில் மொத்தம் 1,187 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, சென்னிமலை வேளாண்மை துணை இயக்குநர் சாமுவேல், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் மானா வாரி மக்காச்சோளமும், இதர பகுதிகளில் நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி, கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 3991.72 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1723.275 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1264.45 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10192.503 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 867.175 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன் படுத்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்த தமிழக முதல்-அமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை இயக்குநர், மாவட்ட கலெக்டர், வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) ஆகியோர்களுக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    • அந்த வழியாக வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அம்மாபாளையம் பகுதியில் 1,040 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 1,440 கிலோ ரேஷன் அரிசியையும், அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பவானிசாகரை சேர்ந்த கண்ணன் (47) என்பவரை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,900 கனஅடியாக குறைத்து விடப்படுகிறது.

    இதேபோல் கீழ் பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி நீர் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து இன்று வினாடிக்கு 684 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.44 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று வினாடிக்கு 3, 222 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து இன்று வினாடிக்கு 684 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.44 அடியாக உள்ளது. இதேபோல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் தடப்ப ள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 1,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணை 105 அடியை நெருங்கி வருகிறது. 

    • ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம் பாளையம் கக்கன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு 1,440 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழி யாக சந்தேகப்படும்படியாக ஆம்னி கார் ஒன்று வந்தது.

    காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும், ரேஷன் அரிசியை வடமாநிலத்த வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்::FILEPOTO:FILEPOTO

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்துக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 440 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதி கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2 ஆம் கட்டமாக 1,182 மாணவிகளு வழங்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் இத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    • பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட திட்ட வீடுகளுக்கு தனியாக 12,000 ரூபாய் வழங்கி கழிப்பறை கட்ட உதவுகின்றனர்.
    • பஞ்சாய த்துகளின் கோரிக்கை ஏற்று, 31 இடங்களில் சுகாதார வளாகம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொது இடத்தில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட மாக மாற்றும் முயற்சியாக, அனைத்து நகரம், கிராமப்புற ங்களிலும் உள்ள வீடுகளில் தனி நபர் கழிப்பறை கட்ட அரசு சார்பில் ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது.

    மாவட்டத்தில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்யப்பட்டு வரு கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் கட்டப்படும் பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட வீடுகளுக்கு தனியாக 12,000 ரூபாய் வழங்கி கழிப்பறை கட்ட உதவுகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் கிராம, நகரப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடு ப்பின்படி, 2,570 வீடுகளில் தனி நபர் கழிப்பறை இல்லை என்பதை அதிகாரி கள் உறுதி செய்தனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறிய தாவது:

    தனி நபர் கழிப்பிடம் குறித்து மாநில அரசிடம் தெரிவித்து, 2,570 வீடு களிலும் தனி நபர் கழிப்பறை கட்ட தலா, 12,000 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு கோரி னோம். முதற்கட்டமாக, 1,387 வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொள்ள நிர்வாக அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.

    விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று வழங்கி, கழிப்பறை கட்ட ப்படும். மீதமுள்ள வீடுகளுக்கு அடுத்த கட்டமாக நிதி பெற்று கழிப் பறை கட்ட நிதி வழங்க ப்படும்.

    மேலும் பஞ்சாய த்துகளின் கோரிக்கை ஏற்று, 31 இடங்களில் சுகாதார வளாகம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 13 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. அதில், 4 பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள, 9 பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

    தற்போது 2022–-23-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், 6 இடங்களில் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற் கான பணிகள் தொடங்க ப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–டுகிறது. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுப்படுகின்றனர்.

    70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொது–மக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார். 

    ×