search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrived"

    • சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் மானா வாரி மக்காச்சோளமும், இதர பகுதிகளில் நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி, கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 3991.72 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1723.275 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1264.45 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10192.503 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 867.175 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன் படுத்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்த தமிழக முதல்-அமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை இயக்குநர், மாவட்ட கலெக்டர், வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) ஆகியோர்களுக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    கஜா புயல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு இன்று காலை கடலூர் வந்தனர். #GajaCyclone #GajaStorm
    கடலூர்:

    கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.



    இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை அரக்கோணத்திலிருந்து வேன் மூலம் 25 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர்.

    மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.

    கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:-

    அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.

    கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.

    படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #GajaStorm #NationalDisasterRescueTeam



    இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக, வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘சி.எஸ்.பி. 8001’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று காலை வந்தது. #VietnamCoastGuard #CSP8001 #Chennai
    சென்னை:

    இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக, வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘சி.எஸ்.பி. 8001’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று காலை வந்தது. வியட்நாமில் இருந்து கடலில் 3 ஆயிரத்து 575 நாட்டிக்கல் மைல் தூரம் கடந்து சென்னை வந்த இக்கப்பலுக்கு ‘பேண்டு’ வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்கனவே செய்துகொண்ட நட்புறவு உடன்பாடு அடிப்படையில் நாளை (வியாழக்கிழமை) இந்திய கடற்பரப்பில் வியட்நாம் கப்பலுடன், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர், ஒரு டோர்னியர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட இருக்கின்றன. இதனுடன் தேசிய கடல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கப்பலும் (சாகர் மஞ்சுஷா) பங்கேற்கிறது.

    கடல் கொள்ளை தடுப்பு, எல்லை தாண்டி மீன் பிடித்தல் தடுப்புக்கான ஒத்திகை நிகழ்வுகளும் இந்த கூட்டு பயிற்சியில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும் இன்று (புதன்கிழமை) நட்புறவு கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு வியட்நாமில் இருந்து கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக கப்பல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #VietnamCoastGuard #CSP8001 #Chennai
    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இத்தாலி சென்றடைந்தார். #SushmaSwaraj #Italy
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 7 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பயணத்தின் போது அவர் இத்தாலி, பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு செல்கிறார். இதையொட்டி முதற்கட்ட பயணமாக சுஷ்மா சுவராஜ் நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றார்.

    இது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஒரு வார காலம் அங்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அந்தந்த நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்கிறார். இது இந்தியாவுக்கும், அந்த 4 நாடுகளுக்கும் பயன் அளிக்கும்.

    21-ந் தேதி, பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். அதனை தொடர்ந்து அவர் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலைந்துரையாடுகிறார்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 
    ×