search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில் பதுக்கிய"

    • ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் புதுமை காலனியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது ஒரு வீட்டில் 10 கிராம் அளவு கொண்ட 164 கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். மொத்தம் 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ஷேக் தாவூத் (28) என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் தான் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம் பாளையம் கக்கன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு 1,440 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருங்கல்பாளையம் சங்கு நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கருங்கல்பாளையம் சங்கு நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×