search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்த 1,622 மாணவிகள்
    X

    புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்த 1,622 மாணவிகள்

    • புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்::FILEPOTO:FILEPOTO

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்துக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 440 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதி கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2 ஆம் கட்டமாக 1,182 மாணவிகளு வழங்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் இத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    Next Story
    ×