என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடகா"
- சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது.
- 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா பேசி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.
இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுத்துள்ளார்.
அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன். அவரும் என் பக்கம் தான் நிற்பார். எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும்" என்று டி.கே சிவகுமார் தெரிவித்தார்.
- 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கைத் தாக்கல் செய்தது.
- மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி
தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் முறையான அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாட்டின் புகாரை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டம், 1956-ன் பிரிவு 5-ன் கீழ் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கவும் உத்தரவிட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அந்த மனுவில், குறிப்பாக மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாகத் தீர்ப்பாயம் அமைப்பதே தீர்வாகும் என நீதிமன்றம் முடிவு செய்தது.
கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீரைத் திசைதிருப்பும் பணிகளை மேற்கொள்வது, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பாதிப்பதாகக் கூறி 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
- கணவர் மற்றும் மாமியாருடன் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
- இதனால் விரக்தியான பெண், 3 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 28 வயது பெண், தனது 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்து தானும் விசம் அருந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் பதாமி தாலுகாவில் உள்ள கிராமம் ஹிரேமுச்சல்குட்டா கிராமம். இந்த கிராமத்தில் ரூபா ஹனுமன்த் கவுடர் (வயது 28) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 5, 4, மற்றும் 2 இரண்டு வயதில் மூன்று குழந்கைள் இருந்தன.
இவருக்கும் இவரது கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெறு வழக்கம். சம்பவத்தன்று இந்த சண்டை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த சண்டையால் விரக்தியான ரூபா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கில் போட்டு கொன்றுள்ளார். அதன்பின் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விசம் அருந்தியுள்ளார். ஆனால், ரூபா உயிர்ப்போகவில்லை.
உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது
- கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, தினமும் வரலாறு காணாத உச்சம் என்ற பட்டத்துடனேயே பயணித்து வந்தது. இப்படியாக விலை உயர்ந்து கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மேலும் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை குறைய வேண்டும் என பக்தர் ஒருவர் வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சிம்னாலி துர்க்கம்மா தேவி தேர் திருவிழாவின் போது பக்தர் ஒருவர் "ஏழைகளும் வாங்கும் அளவிற்கு தங்கம் விலை குறைய வேண்டும்" என வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்த புகைப்படம் வைரலானது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை.
- அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் தாவநகரே மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 2 மாதங்களுக்கு முன் ஹரிஷ் (30) என்பவரை மணந்தார்.
கடந்த 23 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை. புகாரின் பேரின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது தெரியவந்தது.
இதை அறிந்ததும், கணவர் ஹரிஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். ஹரிஷின் மரணச் செய்தியைத் தாங்க முடியாமல், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் (36) தற்கொலை செய்து கொண்டார். ருத்ரேஷ் சரஸ்வதியின் தாய்மாமன்.
காவல்துறை விசாரணையில், சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. சரஸ்வதி மற்றும் அவரது காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
- பைக் டாக்சியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் குற்றம் சாட்டினர்.
- இதையடுத்து, கர்நாடக அரசு இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி சுமார் 6 லட்சம் பேர் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.
பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கர்நாடக அரசு இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி பைக் டாக்சி ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர்.
தடையை எதிர்த்து பைக் டாக்சி ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் வந்தபோது, கர்நாடகத்தில் பைக் டாக்சி இயங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
- ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார்.
பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கொரிய நாட்டு பெண்ணிடம் ஊழியர் அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி, தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.
இமிக்ரேஷன் சோதனைகளை முடித்துவிட்டு அவர் டெர்மினல் நோக்கிச் சென்றபோது ஏர் இந்தியா நிறுவனத்தின் தரைதள ஊழியராக பணிபுரியும் 25 வயது முகமது அபான் என்பவர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பயணச்சீட்டைப் பரிசோதித்த ஊழியர், அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
மீண்டும் ஸ்கிரீனிங் கவுண்டருக்குச் சென்றால் விமானத்தைத் தவறவிட நேரிடும் என்றும், தான் தனியாகச் சோதனை செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அந்தப் பெண் எதிர்த்தபோது அவரைக் கட்டிப்பிடித்து தேங்க் யூ என்று கூறிவிட்டு ஊழியர் அங்கிருந்து நழுவி உள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகளைப் ஆராய்ந்ததில் அந்த ஊழியரின் தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் முகமது அபானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
- கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது
முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இன்று (ஜனவரி 22) சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மரபுப்படி அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது.
தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த ஆளுநர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
வழக்கமாக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் ஆளுநர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.
முன்னதாக நேற்று முன் தின் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள், தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4 வது ஆண்டாக வெளியேறினார்.
அதேபோல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார்.
இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
- சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
- யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.
கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சிறையில் உள்ளார்.
தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.
அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார்.
அது போலி வீடியோக்கள் என்றும் யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.
இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பதவியில் இருந்து ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த சம்பவம் காரின் கேமராவில் பதிவாகியுள்ளது
- இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை கத்தியை காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரின் கேமராவில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், காரில் உள்ள நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் ஏன் எங்களை திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கோவமான அந்த இளைஞர் பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரின் அருகே வந்து பாக்கெட்டில் உள்ளே இருந்த கத்தியை எடுத்து சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சையத் அர்பாஸ் கான் என்று அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "பெங்களூரு நகரக் காவல்துறை, சாலையில் மோசமாக நடந்து கொள்வதையோ அல்லது பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடத்தைக்கோ பொறுத்துக்கொள்ளாது. வன்முறைச் செயல்கள், ஆயுதங்களைக் காண்பித்தல், மிரட்டல்கள் அல்லது பொது இடங்களில் அநாகரிகமான நடத்தை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும், பெங்களூரு நகரக் காவல்துறை சாலையில் மோசமாக நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், சட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய விதர்பா அணி 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருண் நாயர் 76 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 54 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அமான் மோகடே பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சமர்த் 76 ரன்னும், துர்வ் ஷோரே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், விதர்பா அணி 46.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி தொடரில் இருந்து வெளியேறியது.
நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
- 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டினர்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் 13 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஹூப்ளி-தார்வாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்கள் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை அணுகி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதை வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் புகாரில் தெரிவித்தனர். இதனால் சிறுரவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.






