என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடகா"
- அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்
- ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர். இந்த பிரச்சனைக்கு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய டிகே சிவகுமார் "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சித்தராமையா, "கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒரு குறிப்பிட்ட கணதிற்கு அல்ல, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.
நான் உட்பட காங்கிரஸ் கட்சி, நமது மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் நடந்து வருகிறது. கர்நாடகக்கு நாம் கோடுத்த வாக்கு வெறும் முழக்கம் அல்ல. அந்த வார்த்தை தான் நமது உலகம்" என்று தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களிடையே வெளிப்படையாக வார்த்தை மோதல் உருவாகி உள்ளது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
- விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது
கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார். முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- 10 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 10 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி மாண்டியா முனிசிபல் கவுன்சில் புட்டசாமி, கிருஷ்ணா மேட்டு நிலத்திட்ட தலைமை பொறியாளர் பிரேம் சிங், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக்கழக இணை பேராசிரியர் சுபாஷ் சந்திரா, மூத்த கால்நடை பரிசோதகர் சதீஷ், ஹாவேரி திட்ட இயக்குனர் அலுவலக நிர்வாக பொறியாளர் சேகப்பா, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி துணை அலுவலக மேலாளர் குமாரசாமி உள்பட 10 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனை முடிவில் தான் என்ன கைப்பற்றப்பட்டது என்று தெரியவரும்.
- காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-
காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அசோகா தெரிவித்தார்.
கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
- சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
- டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கார்கேயிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கார்கே பதில் அளிக்கையில் "பேச்சுவார்த்தை குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இங்கே நிற்பதால் உங்களுடைய நேரம்தான் செலவாகும். நான் மிகவும் கவலை அடைகிறேன். எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடம அதைச் செய்யும். நீங்கள் இதைப் பற்றி மேலும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலர் டெல்லி சென்று கார்கேவை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனினும், டெல்லிக்கு எம்.எல்.ஏ. சென்றது தனக்கு தெரியாது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
- தானே முதல்வராக தொடருவேன் என சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.
இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமித்ஷாவுடன் டிகே சிவகுமார் தொடர்பில் இருப்பதாக பரவிய தகவல் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமித்ஷாவுடன் தாம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் புகாரை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
- HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
- ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்தனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.
இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 60 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவிந்தபுரா காவல்நிலைய காவலர், பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு விற்பனை
- இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (20) மற்றும் சாண்ட்ரி (37) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மல்பே பிரிவில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கப்பல் கட்டும் தளத்தின் ரகசிய தகவல்கள் வெளியில் கசிவதாக, ஊழியர்கள் மீது மல்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஊழியர்களை கண்காணித்து இருவரையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ரோஹித்-தான் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக மால்பே பிரிவில் இன்சுலேட்டராக பணிபுரிந்த ரோஹித், கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்த தனது கூட்டாளி சாண்ட்ரி உடன் இணைந்து இந்திய கடற்படை கப்பல்களின் ரகசிய பட்டியல், அவற்றின் அடையாள எண்கள், மத்திய அரசின் கீழ் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் தள நடவடிக்கைகள் மற்றும் கடற்படை கப்பல்கள் போன்றவற்றின் விவரங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மற்றும் பிறநாடுகளுக்கு கொடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மால்பே பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகும், ரோஹித் சாண்ட்ரியிடமிருந்து தகவல்களைப் பெற்று வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மல்பே பிரிவு தனியார் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக கப்பல்களை உற்பத்தி செய்கிறது.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
- தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.
இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு டிகே சிவகுமாரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மறைமுறைகமாக காய் நகர்த்துகிறாரா என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் அரசின் இரண்டரை ஆண்டு நிறைவை அடுத்து, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு ஆகியோர் அடங்குவர்.
அளித்த வாக்குறுதியின்படி டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்குமாறு அவரது பிரிவின் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உயர்மட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.
அவர்கள் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் நாளை காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பயணம் குறித்து சித்தராமையா விளக்கம் கேட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி சென்று திரும்பிய டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், முதல்வர் சித்தராமையா தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று நம்புவதாகக் கூறினார்.
- அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர்.
- ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.
இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 547 ரன்கள் குவித்தது.
பெங்களூரு:
ரஞ்சி டிராபி தொடரின் 5-வது சுற்று போட்டி நடந்து வருகிறது. கர்நாடகாவின் ஹூப்ளியில் கர்நாடகா, சண்டிகர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 547 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்மரண் ரவிச்சந்திரன் சிறப்பாக ஆடி இரட்டை சதம் கடந்து 227 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட நிலையில் கருண் நாயர் 95 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் கோபால் 62 ரன்னும், ஷிகர் ஷெட்டி 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மனன் வோரா பொறுப்புடன் ஆடி சதமடித்து 106 ரன் எடுத்தார்.
கர்நாடக அணிச் ஆர்பில் ஷ்ரேயாஸ் கோபால் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பாலோ ஆன் பெற்ற சண்டிகர் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடக அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், சண்டிகர் 2வது இன்னிங்சில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 185 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.
கர்நாடக அணியின் ஷ்ரேயாஸ் கோபால் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்
கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






