என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம் II-ல் 15 மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் எளிதாக அணுகக்கூடியவகையில் வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.

    இந்தியாவின் சீரான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிலைய வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த ஒப்பந்தம் M/s v-shesh Learning Services Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 18, 2025 அன்று வழங்கப்பட்ட ஏற்பு கடிதத்திலிருந்து 180 நாட்களுக்குள் முடிக்கப்பட உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகாபிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s v-shesh Learning Services Private நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் P.ராஜசேகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எளிதாக அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் சீரான வழிகாட்டுதல்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கட்டம் II-ல் 15 மெட்ரோ ரெயில் நிலையங்களில் வடிவமைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக M/s v-shesh Learning Services Private ஆலோசனை நிறுவனம், கட்டம்-I-ல் செயல்பாட்டில் உள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் 10 ஓவருக்குப் பிறகு பவர்பிளே கோட்டிற்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்க வேண்டும் என்பது கொடூரமான விதி.
    • பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும்போது, ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் மூலம் பவுண்டரி அடித்து விடுகிறார்கள்.

    டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் வடிவில் விளையாடுவதற்குன ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-

    உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகிவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. இது விளையாடுவதற்கான மோசமான வடிவம். இதற்கு ஏராளமான காரணம் இருப்பதாக நினைக்கிறேன்.

    ஒருநாள் போட்டி வடிவத்திற்கான விதி பயங்கரமானதாக உள்ளது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். விக்கெட் எடுப்பதற்கும், எந்தவிதமான நெருக்கடிகை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்.

    தற்போது 11 முதல் 40 ஓவரை வரை நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர்பிளே கோட்டிற்கு வெளியே இருப்பதால், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும்போது அவருக்கு சற்று நெருக்கடி கொடுக்கும்போது, அவர் ஜஸ்ட் ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் செய்கிறார். இதனால் ஒரு ரன் மட்டுமல்ல நான்கு ரன்கள் கிடைக்கிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிறந்த ஆப்சனாக உள்ளது.

    இவ்வாறு மொயீன் அலி தெரிவித்தார்.

    தற்போது இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கேஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிவானந்தம், மகேஷ், முரளி, பாண்டுரங்கன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

    காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 28 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    • இயக்குநர் சுந்தர்.சி. தற்போது இயக்கி தயாரிக்க உள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'.
    • 'மூக்குத்தி அம்மன்2' திரைப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றது.

    இயக்குநர் சுந்தர்.சி. தற்போது இயக்கி தயாரிக்க உள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. படத்தின் பொருட் செலவு 100 கோடி ரூபாய் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து படத்திற்கான பூஜை தொடங்குவதை முன்னிட்டு வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன்2' திரைப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் படத்தின் முதல் ஷாட் எடுத்ததை படக்குழு வீடியோவாக எடுத்து படப்பிடிப்பு தொடங்கியதை அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டை பார்ப்பது அபத்தமானது.
    • அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவையோ? அதை சரியாக செய்து வருகிறார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தியாவின் தலைசிறந்த வீரரான விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து அந்த அணிக்கு அற்புதமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். கேப்டனாக அந்த அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவராக உள்ளார். அவரது ஸ்கோரில் 8 சதம், 55 அரைசதங்கள் அடங்கும்.

    என்றாலும் ஆர்சிபி அணிக்காக அவரால் சாம்பியன்ஸ் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறை 2-வது இடம் பிடித்தது. இந்த நிலையில்தான் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றால், அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த முடிவாக இருக்கும் என ஏடி பி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    விராட் கோலி அவருடைய வசதியான இடத்தில் இருந்து வெளியே வந்து புதிய ஷாட்களை முயற்சி செய்து கொண்டிருப்பது, அவருடைய ஆட்டத்தில் மாறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்துவதை பார்க்க சிறப்பானதாக உள்ளது. இதை செய்வதற்கான திறன் அவரிடம் ஏற்கனவே உள்ளது.

    ஆர்சிபி அணியோடு சாம்பியன் பட்டம் வெல்வது, ஏற்கனவே அவருடைய அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு சரியான முடிவாக (perfect finishing touch) இருக்கும்.

    விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டை பார்ப்பது அபத்தமானது. அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவையோ? அதை சரியாக செய்து வருகிறார். இது அனைத்தும் சூழ்நிலையை பொறுத்தது. மறுமுனையில் வேறு ஒருவர் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும்போது, அதிக சுதந்திரத்துடன் பரிசோதனை மேற்கொண்டு விளையாடுவதை பார்க்கலாம். அவ்வாறு இல்லாதபோது அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தேவை என வரும் நிலைத்து நின்று விளையாடுவார்.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    • சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.
    • குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    அத்தகு அடக்குமுறைகளிலிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயன்று பிடிபட்டால் சித்திரவதைக்கும் கடுமையான தண்டனைக்கும் உள்ளாவார்கள். 1950களில் இருந்து குறைந்தது 30,000 வட கொரிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள், தென் கொரியா, சீனா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் குடியேறினர்.

    அவர்களில் ஒருவர் திமோதி சோ. இரண்டு முறை முயற்சித்த பிறகு திமோதி நாட்டை விட்டு தப்பிச் சென்று தற்போது இங்கிலாந்தில் மனித உரிமை ஆர்வலராகப் பணியாற்றுகிறார். வட கொரியாவில் மக்களின் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர், LADbible நிகழ்ச்சியில் பேசினார்.

    அவர் கூறியதாவது, வட கொரியாவில் ஒருவர் டிவி வாங்கினால், ஒரு அரசு அதிகாரி அவரது வீட்டிற்கு வந்து, அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறாரா என்று சரிபார்க்கிறார்.

    வீட்டில் நிறுவப்பட்ட அனைத்து ஆண்டெனாக்களும் அகற்றப்பட்டு, ஒரே ஒரு ஆண்டெனாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கிம் ஜாங் உன்னின் பிரச்சாரத்தை மட்டுமே அரசாங்க சேனலில் காண முடியும். வேறு எந்த சேனலையும் யாராவது பார்க்க முயற்சித்தால், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

    வட கொரியாவில் அரசாங்க பிரச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டுமே குடிமக்கள் பார்க்க முடியும் என்ற கடுமையான விதி உள்ளது. வேறொரு நாட்டின் சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.

    இந்த விதியை யாராவது மீறினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கடுமையான சித்திரவதைகளையும் சந்திக்க நேரிடும். வட கொரியாவில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடியை வெட்டக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.

    பள்ளி செல்லும் குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள முடி திருத்துபவர்கள் கூட வேறு எந்த வகையான சிகை அலங்காரத்தையும் வெட்டத் துணிவதில்லை.

     

    அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்டைலிலிருந்து வேறுபட்ட ஸ்டைலில் சிறுவர்கள் தலைமுடியை வெட்டினால், அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவுசெய்வார்கள்.

    பல நேரங்களில் மக்கள் தங்கள் தலைமுடி காரணமாக கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இத்தகைய விதிகள் காரணமாக, அங்குள்ள மக்கள் எப்போதும் அடக்குமுறை மற்றும் பயத்தின் சூழலில் வாழ்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.  

    • 2025ஆம் ஆண்டில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை.
    • இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை நடவடிக்கை வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து

    மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்

    மேலும் கைது செய்யப்படுவதைத் தடுத்திட உடனடி தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (7.3.2025) கடிதம் எழுதியுள்ளார்.

    இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித்

    துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள

    மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், 2025ஆம் ஆண்டில், கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது

    செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப்படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த

    கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தற்போது, இலங்கையில் தமிழக மீனவர்கள் நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத்

    தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,

    சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு

    உதவுக்கூடிய ஓரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும்

    பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர் எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க

    உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்திடுமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ்.
    • பெருசு படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்பொழுது சூர்யாவின் 45 திரைப்படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். ஸ்டோன் பென்ச் நிறுவனம் இதுவரை 15 திரைப்படம் தயாரித்துள்ளது

    தற்பொழுது அவர்கள் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது அவர்கள் தயாரிக்கும் 16- வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடைப்பெறவுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெயலை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில் பிரபல ஸ்குவிட் கேம் பாணியில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருசிடம் இருந்து தப்பித்து ஓடுவதுப்போல் காட்சி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே எபிக் நம்பர்.
    • இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்திய தேர்தலை ஆணையம் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} வழங்கியுள்ளது.

    ஆனால் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே எபிக் நம்பர் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியானது. உதாரணத்திற்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு வாக்களரின் அடையாள எண்ணும், கர்நாடக மாநிலத்தில் உள்ள வாக்காளரின் அடையாள எண்ணும் ஒரே மாதிரியாக இருக்கும். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடைசியாக ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சகேத் கோகலே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சாகேத் கோகலே கூறியிருப்பதாவது:-

    ஒரே எண் கொண்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பலருக்கு வழங்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் இறுதியாக ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் பொய்யை வெளிக்கொண்டு வந்து அதன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

    முதலில் மறுப்பு தெரிவித்த ஆணையம், தற்போது அதை 3 மாதங்களில் சரி செய்வதாக தெரிவித்துள்ளது. ரிஜிஸ்டர் அதிகாரிகள் தவறான சீரிஸ் எண்களை பயன்படுத்தியதால் கடந்த 2000-த்தில் இருந்து இது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம்.

    தேர்தல் ஆணையம் எதை மறைக்கிறது? யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறது? இது ஒரு மோசடி. பதில்கள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    • ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது
    • டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

    அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். "நீங்கள்(ஈரான்) பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் அது ஈரானுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "அவர்கள்(ஈரான்) அந்தக் கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    நாம் ஏதாவது செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி கட்டமைப்பு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சூழலில் டிரம்ப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

    டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.

    இதற்கிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானிய தூதர் காசெம் ஜலாலியுடன் விவாதித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.
    • நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.

    வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.

    அங்கு, இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் அமர்ந்தனர்.

    பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.

    நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

    இதைதொடர்ந்து, விஜய் இஸ்லாமிய மக்கள் முன்பு பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், " மாமனிதர் நபிகள்நாயகம் அவர்களின் வழியை, மனிதநேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்.

    எங்களது அழைப்பை ஏற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

    இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    ராயப்பேட்டையில் திரண்டுள்ள தவெக தொண்டர்கள், ரசிகர்களை நோக்கி கை அசைத்து சந்தித்தபடி விஜய் புறப்பட்டுச் சென்றார்.

    • போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார்
    • பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    பிரிட்டனில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டியளித்துள்ளார்.

    லண்டனில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார். அதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெய்ஸ்வால், இது காலிஸ்தானியர்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல் சம்பவங்கள். இது நமது சட்டப்பூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் நடப்பவை மீதான பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    இந்த குழுக்கள் பிரிட்டனில் அச்சுறுத்தல் விடுக்கவும் பிற செயல்களைச் செய்யவும் உரிமம் பெற்றிருப்பது போல் தெரிகிறது. அவர்கள் எங்கள் இராஜதந்திரப் பணிகளைத் தடுக்க முயல்கிறார்கள்.

    இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கிலாந்து வருகையின் போது சாத்தம் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

    அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து ஆதரிக்கிறது. ஆனால் பொது நிகழ்வுகளை மிரட்டும், அச்சுறுத்தும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று  கூறப்பட்டிருந்தது.

    இதற்கிடையே மொரிஷியஸின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி,  மார்ச் 11-12 தேதிகளில் மொரிஷியஸுக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

    ×