search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaibhav"

    • பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.
    • ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார்.

    சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

    பின் பிப்ரவரி மாதம் ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் சென்ற வாரம் நிறைவடைந்தது. அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைபவை வாழ்த்தி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படம் வெளியாகும் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்
    • டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களில் வலம் வருபவர் நடிகர் வைபவ். சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் தயாரித்தது. மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

    பின் பிப்ரவரி மாதம் வெளியான ரணம் அறம் தவறேல் படத்தில் ஷெரிஃப் இயக்கத்தில் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் வைபவின் அடுத்த படமான சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    மோஷன் போஸ்டரில் ஒரு கூட்டம் வங்கியை திருடிக் கொண்டு இருக்கின்றனர். பின் அவர்களின் பெயர்கள் போலிஸ் தேடும் முக்கிய குற்றவாளி பட்டியலில் இருக்கிறார்கள். பின் அவர்களை போலீஸ் துரத்துவது போன்ற காட்சிகள் மோஷன் போஸ்டரில் அமைந்துள்ளது. சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஒரு நல்ல காமெடி படமாக அமையும் என எதிர் பார்க்கப் படுகிறது. படம் வெளியிடும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மூன்றாவது பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார்.
    • வருகிற 23-ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள புதிய படம் ரணம். வைபவின் 25-வது படமாக ரணம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் வைபவுடன் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 23-ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

     


    அதையொட்டி இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்த வரிசையில், தற்போது ரணம் படத்தின் "பொல்லாத குருவி" மூன்றாவது பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார். ஷெரிஃப் எழுதியிருக்கும் இந்த பாடலை ரங்கோதம் மற்றும் ஷெரிஃப் இணைந்து பாடியுள்ளனர்.

    அரோள் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பாலாஜி கே ராஜா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை முனீஸ் மேற்கொண்டுள்ளார். 

    • ஆலம்பனா படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

    கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டசி காமெடி கதையம்சம் கொண்ட படமாக ஆலம்பனா உருவாகி இருக்கிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ஆலம்பனா டிசம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய வைபவ் படத்தில் உண்மையில் சிரித்து மகிழக்கூடிய வகையில் காமெடி இருக்கும் என்று தெரிவித்தார்.

     


    "இப்படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனம் சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது."

    "இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார்."

    "படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும்," என்று தெரிவித்தார்.

    • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் ‘பபூன்’.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்திருந்தார்.


    பபூன்

    மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையாம விமர்சனங்களை பெற்றது.


    பபூன் போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பபூன்' திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • வைபவ் நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பபூன்'.
    • இதில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.

    ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்துள்ளார். இதில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.

     

    பபூன் - வைபவ்

    பபூன் - வைபவ்

    மேலும், ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். 'பபூன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

     

    பபூன் - வைபவ்

    பபூன் - வைபவ்

     

    இதையடுத்து 'பபூன்' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'பபூன்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அதில், நடிகர் வைபவ், இந்த படத்துக்காக நிறைய யூடியூப் வீடியோ பார்த்து பபூன் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாங்க, "அவங்க உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு சினிமா தன்மைக்கு ஏற்றார்ப் போல் என்னை மாற்றிக் கொண்டேன். படம் ரொம்ப அழகா வந்திருக்கு. மேயாத மான் திரைப்படம் மாதிரி எல்லாம் பசங்களுக்கும் லவ் இருந்திருக்கும் அந்த மாதிரி படங்கள் நடிக்க எனக்கு பிடிக்கும்" என்றார்.


    • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'பபூன்'.
    • பபூன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.


    பபூன்

    மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். 'பபூன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பபூன் படக்குழு

    இதையடுத்து 'பபூன்' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'பபூன்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், இயக்குனர் அசோக் வீரப்பன், "இந்த படத்தில் கதாநாயகன் என்னவாக இருக்கிறாரோ அது தான் படத்தின் பெயர். இந்த படம் கடற்கரை மாவட்டங்களை சார்ந்த ஒரு கதைக்களம். இந்த களம் மிகவும் புதியதாக இருக்கும், இதுவரை பார்க்காததாக இருக்கும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



    • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் ‘பபூன்’.
    • இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.


    பபூன்

    மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'பபூன்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    முன்னதாக மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேரும் ஒரே கதையில் பணியாற்றியிருப்பதாக பிரபல படத்தொகுப்பபளரான ஸ்ரீகர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் உருவாக இருந்தது. சிம்புதேவன் - வடிவேலு இடையேயான கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலேயே நிற்கிறது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.



    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பதாக கூறப்படுகிறது. 


    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் விரைவில் துவங்க இருப்பதாக சிம்புதேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu
    வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.

    தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா - வைபவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

    சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #VenkatPrabhu

    ×