என் மலர்
இந்தியா
- பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெளிநாட்டு நாயகன் மீண்டும் தன்னால் முடிந்ததை செய்கிறார். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆனால், ராகுல் காந்தி வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஜெர்மனி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர். பீகார் தேர்தலின்போதும் அவர் வெளிநாட்டிலும், பின்னர் வனச்சவாரியும் மேற்கொண்டார்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
- போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்
- நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது முழு திருப்தி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு கேரள அரசு ஆதரவாக உள்ளது. நடிகைக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி இருந்தது. இனியும் அது தொடரும் என்றார். அப்போது அவரிடம், ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் நடிகர் திலீப்புக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது ஜனநாயக முன்னணியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நடிகர் திலீப் மீது சதி திட்டம் தீட்டி குற்றம் சுமத்தப்பட்டதாக அடூர் பிரகாஷ் கூறியுள்ளார் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால், அதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.
- பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
- திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள கோட்ரி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் ஜக்தாப்(வயது36). இவர் திருமணத்துக்கு பெண் தேடிவந்தார். சமீபத்தில் திருமண தரகர் ஒருவர் நாகேஷ் ஜக்தாப்புக்கு அறிமுகம் ஆனார். அந்த தரகர் மூலம் அவருக்கு பிரித்தி ராவத் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. பெண் தேடி கொடுத்ததற்காக திருமண தரகர் நாகேஷ் ஜக்தாப்பிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கமிஷனாக வாங்கிக்கொண்டார். பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு காய்ஜ் தாலுகாவில் உள்ள கோவிலில் நாகேஷ் ஜக்தாப்புக்கும், பிரித்தி ராவத்துக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு திருமண கோஷ்டியினர் கோட்ரியில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர்.
இந்தநிலையில் பிரித்தி ராவத் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு நைசாக தப்பினார். திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மணமகளை தேடி சென்ற மணமகன் வீட்டார் திக்கோல் அம்பா பஸ் நிறுத்தத்தில் அவரை பிடித்தனர். அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பிரித்தி ராவத் திருமண மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்து கழுத்தை நீட்டிய சில மணி நேரத்தில் தப்பியோட முயற்சித்தது தெரியவந்தது.
மேலும் இந்த மோசடியில் திருமண தரகர், பெண்ணின் அத்தை உள்ளிட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோசடியில் தொடர்புடைய பிரித்தி ராவத்தின் அத்தை, திருமண தரகர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
- நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.
அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார்.
- சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஒரு நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்வில் சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்தில் (DBRAIT) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அமித் ஷா, அங்கு, சாவர்க்கருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தையும் அவர் திறந்து வைப்பார்.
இறுதிப் பயணத் திட்டம் விரைவில் கிடைக்கும் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
- றுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.
சிறுத்தைகள் உணவுக்காக மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை காடுகளில் விட வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ஜிதேந்திரா சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர், அஹல்யா நகர், புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.
சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டன. முன்பு, அவை வன விலங்குகள் என்று விவரிக்கப்பட்டன, ஆனால் இப்போது கரும்புத் தோட்டங்களும் அவற்றின் வாழ்விடமாக மாறிவிட்டன.
சிறுத்தை தாக்குதல்களில் மக்கள் இறந்த பிறகு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.
சிறுத்தைகள் ஆபத்தான பகுதிகளில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.
- நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை
- உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்றார் மோடி
வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயை 'பங்கிம் டா' என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவமதித்தற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியறுத்தி உள்ளார்.
நேற்று, கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா, நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை, ஆனால் வங்காளத்தின் முக்கிய கலாச்சார முகங்களில் ஒருவரை அவர் குறைத்து மதிப்பிட்டார்.
அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையையும் காட்டவில்லை. இதற்காக நீங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை அது அழித்துவிடும்" என்று மம்தா கூறினார்.
தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்களன்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, கவிஞர் பங்கிம் சந்திராவைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டதில் இருந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
பங்கிம் உடன் 'டா' சேர்ப்பதை எதிர்த்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்.பி. சவுகதா ராய், 'பங்கிம் பாபு' என்று சொல்லுமாறு மோடியை வலியுறுத்தினார்.
மோடி உடனடியாக, "நான் பங்கிமை 'பாபு' என்று அழைக்கிறேன். நன்றி, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்" என்றார். அதே நேரத்தில், ராய்-ஐ 'தாதா' என்று அழைக்கலாமா என்று மோடி சந்தேகம் கேட்டார். டா என்பது வங்காள மொழியில் சாதாராண சம்பாஷணையின்போது குறிப்பிடும் விளிச் சொல்லாகும்.
- தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
- எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம்.
கடந்த எட்டு நாட்களாக பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல விமானங்களை ரத்து செய்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் தந்தது.
இந்நிலையில் இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 5 ஆம் தேதி, இண்டிகோ 700 விமானங்களை மட்டுமே இயக்க முடிந்தது. அதன் பின்னர், அது படிப்படியாக ஆனால் சீராக மேம்பட்டுள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி 1,500 விமானங்களும், டிசம்பர் 7 ஆம் தேதி 1,650 விமானங்களும், டிசம்பர் 8 ஆம் தேதி 1,800 விமானங்களும், இன்று(நேற்று) 1,800க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டன.
நேற்று(திங்கள்கிழமை) முதல், எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 நகரங்களுக்கும் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம், மேலும் எங்கள் நேரமின்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதை 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
- காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும்.
நேற்று மக்களவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய ராகுல், நாட்டு மக்களுக்கும் ஜனநாயக நிறுவனங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும். இந்தியா 1.5 மில்லியன் இந்தியர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நெய்த துணியைப் போன்றது, வாக்குகள் இல்லாமல், இந்த நாட்டில் எந்த நிறுவனங்களும் இருக்காது. வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வருவதாக கூறினார்.
ஆர்எஸ்எஸ் குறித்து ராகுலின் பேச்சைக் கேட்ட பாஜக வரிசை எம்பிக்கள் அவரை மேற்கொண்டு பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் தேவையில்லாததை பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்தார்.
- பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
- அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்
மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.
தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.
இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.
நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.
ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.
சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே வாக்களர்
- அவரது வயதை கருத்தில்கொண்டு அவரை விட வேண்டும்
இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக பாஜக குற்றம் சாட்டிவரும் நிலையில், அது திட்டமிட்ட பொய் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா,
"அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இது முற்றிலும் பொய். அவர் இந்தியாவின் குடிமகளாக ஆன பிறகுதான் வாக்களித்தார். அவருக்கு 80 வயதாகும்போதும் அவரை ஏன் பின்தொடர்கிறார்கள் என தெரியவில்லை. தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார். அவரது வயதை கருத்தில்கொண்டு அவரை விட்டுவிட வேண்டும்" என தெரிவித்தார்.
1980-81 வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதாக, அதாவது அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவர் பெயர் வாக்களர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை செப்டம்பர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் மறுசீராய்வு மனு தொடரப்பட்டது. இந்த மறுசீராய்வு தொடர்பாக ரூஸ் அவென்யூவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து இந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.






