என் மலர்tooltip icon

    இந்தியா

    • காட்டில் உள்ள ஒரு இந்து கோவில் முன் சிங்கம் ஓய்வு எடுக்கிறது.
    • சிவன் கோவில் முன் நந்தி இருப்பதுபோல், அமைதியாக இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் ஒரு இந்து கோவில் முன் நடு ராத்திரியில் சிங்கம் ஒன்று கோவிலுக்கு காவல் இருப்பது போன்ற வீடியோ வனத்துறை அதிகாரி (ஐபிஎஸ்) பிரவீன் காஸ்வான் பகிர்ந்துள்ளார். 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பகிர்ந்து என்ன ஒரு தெய்வீக காட்சி. லயன் கோவிலுக்கு காவல் இருப்பது போல் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில இது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து்ளளனர்.

    இந்த வீடியோ வனவிலங்குகளுக்கும் இப்பகுதியின் கலாச்சார மரபுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பைக் காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன. எப்படியோ நவராத்தி விழா காலத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடியவுதான்- இந்தியா வெற்றி- பிரதமர் மோடி.
    • எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்- காங்கிரஸ்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான சைகைகளில் ஈடுபட்டனர். அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வாக்குவாத்தில் ஈடுபட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

    பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியது போன்றும், விமானம் கீழே விழுந்து நொருங்குவது போன்றும் சைகை காட்டினார். இது கடும் பேசும்பொருளானது. பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசி-யிடம் புகார் அளித்தது.

    இந்த பரபரப்புக்கு இடையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடிவுதான்- இந்தியா வெற்றி பெற்றது! நம்முடைய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா, அந்த பதிவை டேக் செய்து "பிரதமர் ஜி, முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்துடன் ஒப்பிடுவது சரியானது அல்ல.

    2ஆவது, நீங்கள் எந்த வகையிலும் ஒப்பீடு செய்திருந்தால், அதன்பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, வெற்றியை (ஆபரேஷன் சிந்தூர்) நெருங்கி வந்தபோது, எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் சண்டை தன்னுடைய தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதை வைத்துதான் கெரா இவ்வாறு தெரிவித்து்ளளார்.

    • மேற்கு வங்கத்தில் இருந்து பூடானின் சம்ட்சே நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.
    • அசாம் மாநிலத்தில் இருந்து கெலேபூ நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.

    இந்தியா- பூடான் நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 89 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டுள்ளன என மத்திய ரெயில்வேத்துறை அமை்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.

    மேற்கு வங்கத்தில் உள்ள பனார்ஹட்- பூடானில் உள்ள சம்ட்சே நகரை இணைக்கும் வகையிலும், அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹர்- பூடானின் கெலேபூ நகரை இணைக்கும் வகையிலும் ரெயில்பாதை அமைய இருக்கிறது.

    இந்தியாவும் பூடானும் விதிவிலக்கான நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் கொண்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. என மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிரதமர் மோடி பூடான் சென்றிருந்தார். அப்போது இந்த ரெயில்பாதைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
    • 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 12 பேர் பலியானார்கள். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தல் செய்தியை அனுப்பி இருக்கிறார்.

    அனைத்துத் துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.

    • ராஜேஷ்வர் ராவ் பதவிக்காலம் அடுத்த மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
    • இவருக்கு அரசு இரண்டு முறை பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணை கவர்னராக இருக்கும் எம். ராஜேஷ்வர் ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 9ஆம் தேதி ஷிரிஷ் சந்திர முர்மு துணை கவர்னராக பதவி ஏற்பார்.

    ஆர்பிஐ-யின் கண்காணிப்பு துறையை மேற்பார்வையிடம் நிர்வாக இயக்குனராக ஷிரிஷ் சந்திர முர்மு இருந்து வருகிறார்.

    ஆர்.பி.ஐ.-யின் 1934 சட்டத்தின்பாடி, ரிசர்வ் வங்கி நான்கு துணை கவர்னர்களை கொண்டிருக்க வேண்டும். தற்போது ரபி சங்கர், சுவாமிநாதன், பூனம் குப்தா ஆகியோர் துணை ஆளுநர்களாக உள்ளனர்.

    ரஜேஷ்வர் ராவ் கடந்த 2020 ஆம் ஆண்டு துணை கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருடைய பதவிக்காலம் 3 வருடம் ஆகும். 2023ஆம் அண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பின்னர், மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டது. இதனால் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

    தற்போது புதிய துணை கவர்னராக பதவி ஏற்கும் ஷிரிஷ் சந்திர முர்மு-வின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

    • 'ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும் என மகாதேவ் பேச்சு.
    • பாஜக தலைமையிடம் இருந்து திட்டவட்டமான கண்டனமும், பொது மன்னிப்பும் தேவை.

    பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக-வையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியில் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே பா.ஜ.க செய்தி தொடர்பாளரான பிரிந்து மகாதேவ், மலையாள டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்" எனப் பேசியுள்ளார். மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக மேலிடம் அவர் மீது எந்தவித நடவடிக்கையில் எடுக்கவில்லை.

    இந்த நிலையில், ராகுல் காந்தி மீது நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது.

    அந்த கடிதத்தில் காங்கிரஸ் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொடூரமான வகையில் பிந்து மாதவ் கொடூரமான கொலை மிரட்டல் விடுத்துள்ளதை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. இது வாய் தவறியோ அல்லது அலட்சியமாகவோ கூறப்படவில்லை. இது மக்களின் பிரச்சனைக்காக அவர்களுடன் நிற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட கொடூரமான கொலை மிரட்டல் ஆகும்.

    இது சட்டத்தின் ஆட்சியின் மீதான, ஒவ்வொரு குடிமகனுக்கும், ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்.

    ராகுல் காந்திக்கு பல்வேறு நிலைகளில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக பாஜக-வின் நோக்கம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது.

    * இது மக்களின் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராகத் தீட்டப்படும் ஒரு பெரிய, கொடூரமான சதித்திட்டமா?

    * பொது வாழ்வில் நஞ்சை விதைக்கும் கிரிமினல் மிரட்டல், கொலை மிரட்டல்கள் மற்றும் வன்முறை அரசியலை நீங்கள் வெளிப்படையாக ஆதரிக்கிறீர்களா?

    * ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகம் மீதான தாக்குதல்.

    காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை

    * பிரிந்து மகாதேவ்-க்கு எதிராக உடனடி மற்றும் முன்னுதாரமான நடவடிக்கை மாநில போலீசாரால் மீது எடுக்க வேண்டும்.

    * பாஜக தலைமையிடம் இருந்து திட்டவட்டமான கண்டனமும், பொது மன்னிப்பும் தேவை.

    * பாஜக அவ்வாறு செய்யத் தவறினால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த இழிவான செயலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று நாடு நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.

    • SIR தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
    • தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    கேரள மாநில சட்டசபையில் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி எம்.எல்.ஏ.-க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    தீர்மானம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறிகையில் "SIR-ஐ செயல்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்த அவசர நடவடிக்கை மற்றும் அவர்களின் நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    SIR நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.

    பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களை எந்தவித காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டது. தேசிய அளவில் அதே முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் நாடு முழுவதும் உள்ளது.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

    மேலும், பீகார் மாநில SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் SIRஐ செயல்படுத்த இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    • மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது.

    மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

    நாசிக் மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3 பேர் வீடு இடிந்து விழுந்ததில் இறந்து உள்ளனர். தாராஷிவ், அகில்யாநகரில் தலா 2 பேர் இறந்துள்ளனர். ஜல்னா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

    பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் 11,800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர். இந்த கனமழைக்கு காரணமாக மராத்வாடா பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    அங்குள்ள கோதாவரி ஆற்றில் உள்ள ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2.92 லட்சம் கன அடியாக உயர்ந்தது. வெள்ள அபாயம் காரணமாக சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் பகுதியில் இருந்து சுமார் 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த மாவட்டத்தில் உள்ள ஹர்சுல் வட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மராத்வாடாவில் உள்ள பீட், நான்டெட் மற்றும் பர்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மராட்டிய மாநிலம் முழுவதும் 16 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2 கூடுதல் குழுவினர் புனே தலைமையகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

    மராத்வாடா மண்டலம் மற்றும் சோலாப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று 5 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு மேல் மும்பையில் மழை குறைந்தது. இதனால் போக்குவரத்து மற்றும் ரெயில் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

    தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது. தானேவின் பிவாண்டி தாலுகாவில் 71 குடும்பங்களை சேர்ந்த 262 பேர் மீட்கப்பட்டனர். பீட், நாந்தேட் மற்றும் பர்பானி மாவட்டங்களின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

    ஆஷ்டியில் உள்ள சாங்வி கோவிலில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 12 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டது. நாந்தேட் நகராட்சி எல்லைக்குள் பொதுமக்கள் சுமார் 970 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    நாசிக்கில் கனமழையை தொடர்ந்து கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் உள்ள ராம்குண்ட் பகுதியில் சில கோவில்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 21 பேர் மீட்கப்பட்டனர்.

    மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    • கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
    • பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.

    இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.

    வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
    • இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    ஜூலை 27, 2025: உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    ஜூன் 4, 2025: ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

    மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.

    பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்கு ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

    ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பிரயாக்ராஜில் உள்ள சங்கமம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் (அரசு தரவுகள்) உயிரிழந்தனர்.

    ஜனவரி 8, 2025: திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகளை வாங்க பக்தர்கள் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவங்கள் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. 

    • டெல்லியில் பள்ளிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்ட் மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • சோதனைக்குப் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

    புதுடெல்லி:

    விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது சமீப காலமாக தொடர் கதையாக உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதோடு மக்களும் பீதி அடைகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதனால் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. எனினும் வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

    • பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
    • லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர்.

    லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் அமைப்பில் 6வது அட்டவணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறையை தூண்டியதாக காலநிலை செயல்பாட்டாளர்கள் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், லடாக்கின் அற்புதமான மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரால் தாக்கப்படுகின்றன.

    லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு பாஜக, 4 இளைஞர்களை கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.

    கொலையை நிறுத்துங்கள். வன்முறையை நிறுத்துங்கள். லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள். அவர்களுக்கு அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையை வழங்குங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    ×