என் மலர்
இந்தியா

பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது காலணி வீசி தாக்குதல் - வைரலாகும் வீடியோ
- நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.
அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story






