என் மலர்tooltip icon

    இந்தியா

    • பயந்து போன இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார். சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார்.

    கஞ்சா போதையில் இருந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது
    • 2005–2013 க்கு இடையில், காங்கிரஸ் அரசாங்கங்கள் 88,792 வங்கதேச நாட்டினரை நாடு கடத்தின. பாஜக ஆட்சியின் கீழ், 11 ஆண்டுகளில் 10,000 க்கும் குறைவானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் காரணமாக இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசும்போதும், தனது எக்ஸ் பதிவிலும் அமித் ஷா இந்த குற்றச்சாட்டைமுன்வைத்தார்.

    அதில், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைக்க வேண்டும். நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது, இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஊடுருவல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக அமித் ஷா கூறினார்.

    ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அமித் ஷா கூறினார்.

    இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அக்டோபர் 10 ஆம் தேதி கூட்டுறவு அமைச்சர், இந்து-முஸ்லிம் தீயை மூட்டி, வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்களை பிளவுபடுத்த முயற்சித்திருக்கிறார்.

    இந்தியாவில் பரவலாக முஸ்லிம் ஊடுருவல் இருப்பதாக மறைமுகமாக முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

    இந்த சூழ்நிலையில் ஒரு தர்க்கரீதியான கேள்வி என்னவென்றால், அவர் கூறுவது போல், முஸ்லிம் மக்கள் தொகை ஊடுருவல் காரணமாக உயர்ந்துள்ளது என்றால், கடந்த 11 ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் சரியாக என்ன செய்து கொண்டிருந்தார்?

    அவர் தான் உள்துறை அமைச்சரும் கூட என்பதை அவர் உணர்த்தாரா?. மேலும் அவர் முஸ்லிம்களை நோக்கி குறிவைத்த பூமராங் திரும்பி அவரையே வந்தடைந்தது. எனவே, அவரது பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

    ஆனால் அது உண்மையை நீக்கவில்லை. 2005–2013 க்கு இடையில், காங்கிரஸ் அரசாங்கங்கள் 88,792 வங்கதேச நாட்டினரை நாடு கடத்தின. பாஜக ஆட்சியின் கீழ், 11 ஆண்டுகளில் 10,000 க்கும் குறைவானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், நாங்கள் ஒருபோதும் பெருமை பேசவில்லை, பாஜக ஒருபோதும் வாயை மூடிக்கொள்ளாது. காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தத்தை உண்டாக்கும்" என்று விமர்சித்துள்ளார்.   

    • மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

    ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

    அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

    அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

     மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மேற்கு வங்க அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒடிசா அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, "மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும்வரை, மாநிலம் முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்வார்கள். 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள மம்தாவின் திரிணாமுல் கட்சி முக்கிய தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான சசி பஞ்சா, "இங்கே அரசியலுக்கு இடமுண்டா? ஒடிசாவில் தீக்குளித்த பெண்களுக்கு கிடைத்த நியாயம் என்ன? மணிப்பூர் எரிந்தபோது அல்லது டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக தலைவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தங்கப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த போராட்டம் நடத்தியபோது இந்தக் குரல்கள் எங்கே இருந்தன? வங்காளத்தில் பாஜகவின் கடையை மூடச் சொல்லுங்கள். காவல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த வருடம் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ மாணவி கொலை மற்றும் தற்போதைய விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும் அப்பெண்ணை விவாகரத்து செய்யமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது. ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்கவைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழவைத்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கொண்டுருள்ளார்.

    தீயில் கருகிய உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
    • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    • ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.
    • அதானி குழுமம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

    அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.

    ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது.

    ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதனை குழுமம் மற்றும் செபி திட்டவட்டமாக மறுத்தது. பின்னர் சிறிதுகாலம் களைத்து மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மீடனும் பழைய நிலைமைக்கு உயர்ந்தது.

    இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பேசிய கவுதம் அதானி, "ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமம் சந்தை மதிப்பில் $100 பில்லியனை (இந்திய மதிப்பில் ரூ.8.8 லட்சம் கோடி) இழந்து விட்டது. முற்றிலும் பொய்யை ஆயுதமாக்கியதன் விளைவால், அந்த இழப்புகள் ஏற்பட்டது" என்று தெரிவித்தார். 

    • டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
    • செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.

    ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் சாஹின் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "டெல்லி ஆப்கான் தூதரகத்தில் பெண் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை. அனுமதி பாஸ்கள் குறைவாகவே இருந்ததால், சிலரால் அதைப் பெற முடியவில்லை. வெளியுறவு அமைச்சர் முத்தாகி பல பெண் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.

    • அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை சமீபத்தில் வழங்கியது.

    ஆறு நாள் பயணமாக செர்ஜியோ கோர் நேற்று இந்தியா வந்தார். மாலையில் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர்.

    செர்ஜியோ கோருடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, கோரின் பதவிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்படும் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், செர்ஜியோ கோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா மதிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் நாட்களில் வலுவடையும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். தற்போது கூட இரு தலைவர்களும் போனில் மிகச் சிறந்த உரையாடலை நிகழ்த்தினர். இது வருகிற நாட்கள் மற்றும் மாதங்களில் தொடரும் என தெரிவித்தார்.

    • ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள்.
    • எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும் என்றார்.

    பாட்னா:

    ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் ரகோபூரிலிருந்து போட்டியிட வேண்டுமானால், ரகோபூரின் மக்கள் என்னுடன் நிற்க வேண்டும். இன்று நான் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் நாளை கட்சிக் கூட்டத்தில் முன்வைப்பேன். ஓரிரு நாட்களில், யார் போட்டியிடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

    பீகார் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். இது இருக்கை பகிர்வு அல்ல. இது ஊழலைப் பகிர்ந்து கொள்வது - யார் அதிகமாக கொள்ளை அடிப்பார்கள், யார் அமைச்சராக வருவார்கள், யார் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், யார் கொள்ளையில் அதிக பங்கைப் பெறுவார்கள் - இது அதற்கான போராட்டம்.

    இது நீண்ட காலத்திற்கு தொடரும். ஏனென்றால் நாம் கூட்டணி அமைத்தவுடன் பொதுமக்களை மீண்டும் முட்டாளாக்குவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    சிலர் சாதியின் பெயரால் தங்களை விற்றுவிடுவார்கள். சிலர் இந்துக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ மாறுவார்கள். சிலர் ஐந்து கிலோ தானியத்திற்கு, சிலர் ஐநூறு ரூபாய்க்கு வாக்களிப்பார்கள். ஆனால் இது நடந்தால், உங்கள் மூலம் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் கீழ் வாழத் தயாராக இருங்கள். பிறகு யாரையும் குறை சொல்லாதீர்கள்.

    ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் நிறைய ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள். எனவே, எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், இந்த பரிதாபகரமான நிலையில் வாழத் தயாராக இருங்கள்.

    நாம் அவரை நம்பினால், அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) 18 ஆண்டுகளில் 4-5 லட்சம் வேலைகளை வழங்கினர். இப்போது அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 கோடி வேலைகளை வழங்குவதாகச் சொல்கிறார். இதன் பொருள் ஒன்றுதான்: நீங்கள் ஒரு முட்டாள் அல்லது நீங்கள் அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள் என தெரிவித்தார்.

    • பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
    • விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.

    பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.

    ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.

    இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

    பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.

    இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

    பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.

    • நான் ரகோபூரில் போட்டியிட்டால், தேஜஸ்வி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்.
    • அப்படி போட்டியிட்டால் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு நடந்தது தேஜஸ்விக்கு நடக்கும்.

    பீகார் தேர்தலில், தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சியில் களம் இறங்குகிறது.

    இங்குள்ள ரகோபூர் சட்டமன்ற தொகுதி, லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி ராப்ரி தேவி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இருவரும் முதல்வராக இருந்துள்ளனர். இவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் 2015 மற்றும் 2020-ல் வெற்றி பெற்றுள்ளார். துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

    இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். இங்கு நான் போட்டியிட்டால், தேஜஸ்வி யாதவ் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எதிர்கொண்டதை, தேஜஸ்வி யாதவ் எதிர்கொள்வார்" என்றார்.

    ராகுல் காந்தி 2010 மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதைத்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • மாநில அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி மிரட்டியதாக மம்தா குற்றச்சாட்டு.
    • மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்ற்சாட்டை வெளியிடுவதாக மம்தா எச்சரிக்கை.

    மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    ஆனால், மம்தா பானர்ஜி SIR-ஐ கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் தலைமை செயலாளர், மந்திரி அரூப் விஸ்பா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆதிகாரி மாநில அதிகாரிகளை மிரட்டியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அத்துடன், எல்லையை மீறினால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.

    கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வரானார். அதில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக மாநில தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இந்த நிலையில் மம்தா பேசியது மற்றும் அதை மொழிமாற்றம் செய்யப்பட்ட வீடியோவை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மாநில தேர்தல் அதகாரி மீது எந்தவொரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக இருந்தாலும், ஆதாரங்களுடன் லோக்பாலில் முறையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    ×