என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஜப்பான்
- விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
- விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.
- சுமார் 30 லட்சம் அயல்நாட்டினர் ஜப்பானில் வசிக்கின்றனர்
- எங்களை ஜப்பானியராக பார்க்காமல் குற்றவாளிகளாக நடத்துகின்றனர் என்றார் சையத்
சமீப சில ஆண்டுகளாக அயல்நாடுகளிலிருந்து பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஜப்பானிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜப்பானில் வசிக்கும் ஜப்பானியர் அல்லாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சம் எனும் அளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் காவல்துறை, அங்கு வாழும் அயல்நாட்டினரை, இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி நடத்துவதாக அந்நாட்டில் வாழும் சிலர், சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அயல்நாட்டினரில் ஒரு சிலரிடம் இனப்பாகுபாடு காட்டுவதாகவும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி இந்திய வம்சாவளியை சேர்ந்த மேத்யு (Matthew), ஆப்பிரிக்க-அமெரிக்கரான மாரிஸ் (Maurice) மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சையத் ஜைன் (Syed Zain) எனும் 3 பேர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
26 வயதான சையத், "நான் ஒரு ஜப்பானிய குடிமகன். ஆனால், காவல்துறையினர் என்னை பலமுறை தடுத்து நிறுத்தி எனது இன விவரக்குறிப்பை கேட்கின்றனர். எனது வீட்டின் முன் தேவையற்ற முறையில் என்னை சோதனை செய்தனர். எங்களை ஒரு ஜப்பானியராக காவல்துறையினர் அடையாளம் காண்பதில்லை; ஒரு குற்றவாளியை போல் நடத்துகிறார்கள்" என குற்றம் சாட்டினார்.
இரண்டு தசாப்தங்களாக ஜப்பானில் வசித்து வரும் சையத், ஜப்பானிய பள்ளிகளில் பயின்று, அந்த மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.
வழக்கு தொடர்ந்துள்ள மூவரும் சுமார் ரூ.16.5 லட்சம் ($20,000) நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.
இது போன்ற வழக்கு ஜப்பானில் தாக்கல் செய்யப்படுவது இப்போதுதான் முதல் முறை என மூவரின் வழக்கறிஞர் மொடோகி டானிகுசி தெரிவித்தார்.
- தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது.
- விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர்.
டோக்கியோ:
ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.
விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது. இதனால் கொரிய விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் அந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அங்கு நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜப்பானின் சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
- விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீ விபத்து.
- விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இருந்து 122 பயணிகளுடன் போயிங் 737-800 ரக விமானம் கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் 9.30 மணியளவில் தென் கொரியாவில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை ஸ்டார்போர்டு என்ஜினுக்குள் மோதி சிக்கி கொண்டது.
இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு குழு விமானத்தை பராமரிக்க முயன்றபோது, எஞ்சினிலிருந்து தீப்பிழம்பு உருவாகி, போயிங் 737-800ன் வால் பகுதியை கிட்டத்தட்ட நெருங்கி இருக்கிறது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறப்பட்டபோது, "பயணிகள் ஏதோ எரியும் வாசனையை உணர்ந்ததால், பணியாளர்கள் விமானத்தை தரையிறக்க முயற்சிக்குமாறு கட்டாயப்படுத்திவுள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீப்பிடிப்பதையும், வெடிப்பதையும் படம் பிடித்துள்ளார் மற்றும் தரையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு காட்சியில், புகைபிடித்த விமானம் விமான நிலையத்தை நோக்கி வேகமாக இறங்கியது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
- அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
- சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஜப்பானின் ஹாங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
- சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
- நிலப்பரப்பு மேற்கு நோக்கி நகர்ந்து இருக்கிறது.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை நகர்ந்து இருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்பு ஒரு மீட்டருக்கும் அதிகமாக நகர்ந்து இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் அந்நாட்டில் உள்ள அதிநவீன ஜி.பி.எஸ். ஸ்டேஷன்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 300-க்கும் அதிகமானோருக்கு காயங்களும், 20 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31 ஆயிரத்து 800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அவசகர கால பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஃபுமியோ கிசிடா தலைமையிலான அரசு முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜப்பானில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது.
- விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனோடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை குறைத்துக் கொண்டே வந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கடலோர காவல்படையின் விமானத்தின் மீது மோதியது. இதன் காரணமாக பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானத்தில் 350-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. எனினும், கடோலர காவல் படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்த பணியாளர்கள் ஐந்து பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில், தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து அவசரகால பலூன் வழியே பத்திரமாக கீழே இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விமானம் கொழுந்துவிட்டு எரியும் போது, பயணிகள் அதில் இருந்து வெளியேறும் காட்சிகள் பார்க்கவே பயத்தை ஏற்படுத்துகின்றன.
பாதுகாப்பு பலூன் வழியே விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 பேர் அடங்கிய பணியாளர் குழு என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எட்டு பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடலோர காவல்படை விமானத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
Evacuation of #JL516 via slides and while engine #2 is still running. All 379 occupants on board escaped and survived. The status of the six people aboard the Coast Guard DHC-8 aircraft is still uncertain at this point. pic.twitter.com/ESBS4FY00a
— JACDEC (@JacdecNew) January 2, 2024
- டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானத்தின் பின்பகுதி தீ பிடித்தது.
- இதில் கடலோர காவல்படை விமானத்தில் 5 ஊழியர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
டோக்கியோ:
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கிய பயணிகள் விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதனால் டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.
இந்த விமானத்தில் 360-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடற்படை விமானத்தில் இருந்த ஊழியர்கள் 5 பேர் உடல் கருகி பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், விமானங்கள் மோதலில் 5 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதி தீ பிடித்தது.
- இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டோக்கியோ:
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது.
கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.
இந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் டோக்கியோ விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- பெரும்பாலனவை ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.
ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலன நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் குறித்து செல்போனில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதால் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை.
இருந்த போதிலும் தற்போது வரை உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பும் அதிகம். சேதமும் அதிகரிப்பு என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
- நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்பு.
- ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2024ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஜப்பானில் இதற்கு முன் 2011ல் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால், ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசு கைவிட்டது.
இருப்பினும், பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்