search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தில் திடீர் தீ விபத்து: ஜப்பானில் பரபரப்பு
    X

    ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தில் திடீர் தீ விபத்து: ஜப்பானில் பரபரப்பு

    • டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதி தீ பிடித்தது.
    • இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது.

    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.

    இந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

    தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் டோக்கியோ விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×