என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன்.
- நிறைவு விழாவிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வை ஆட்சி அரியணையில் இருந்து இறக்கி தமிழகத்தை மீட்டெடுக்கும் நமது வேள்விப் பயணமான "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" என்ற யாத்திரையின் நிறைவு விழாவிற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மனதார வரவேற்கிறேன்.
இப்பெருவிழவில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு நமது தாமரை சொந்தங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் மனமெங்கும் நிறைந்திருக்கும் மீனாட்சி அம்மனின் அருளாசியோடும் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் தி.மு.க.விற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடும். கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதியன்று சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இருந்து நமது வேள்வி யாத்திரையைத் தொடங்கினோம். தி.மு.க. அரசின் கோரப் பிடியில் சிக்கி நிலைகுலைந்து கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த யாத்திரைக்குத் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" எனப் பெயர் சூட்டினோம்.
கடந்த 84 நாட்களில் சுமார் 2400 கி.மீ-க்கும் அதிகமாகப் பயணித்து. 52 அமைப்பு மாவட்டங்களுக்கும் 33 அலுவல் மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடம் நேரடியாக உரையாடி இருக்கிறோம். நம்மை முடக்க நினைத்த தி.மு.க. அரசின் அத்தனை அடக்கு முறைகளையும் முறியடித்து கிட்டத்தட்ட 47-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும் 34-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களையும் நடத்தி உள்ளோம்.
காற்றுக்கு ஓய்வேது. நீருக்கு சோர்வேது என்பது போல. கொஞ்சம் கூட களைப்பு தட்டாமல் இந்த யாத்திரையின் அனைத்துப் பணிகளையும் தேனீக்களின் சுறுசுறுப்புடன் முன்னின்று செய்ததோடு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இப்பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக மாற்றி உள்ளனர் நமது கட்சி நிர்வாகிகள். நமது தொண்டர்களின் அன்பையும். நிர்வாகிகளின் கடின உழைப்பையும், மூத்த தலைவர்களின் அர்ப்பணிப்பையும் கண்டு இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன். கர்வம் கொண்டேன்.
"இப்படை தோற்கின், எப்படை வெல்லும்" என்பதை நமது ஒற்றுமையின் மூலம் மீண்டுமொருமுறை நாம் நிரூபித்துள்ளதைக் கண்டு சொல்ல முடியாத ஆனந்தத்தில் திளைத்து உள்ளேன்.
இவ்வாறு நமது தாமரை சொந்தங்களின் நெஞ்சுரத்தாலும், விடா முயற்சியாலும் வரலாறு காணாத வெற்றி பயணமாக மாறிய இந்த வேள்வித் தவத்தின் நிறைவு விழாவிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம்.
கடந்த மூன்று மாதங்களாக ஓடி இளைத்த நமது வியர்வைத் துளிகளின் மீது சூடப்படும் மணிமகுடம் உலகம் வியக்கும் அரசியல் சாணக்கியரான அமித்ஷா கலந்து கொண்டு நம்மைச் சிறப்பிக்கும் உயர்வான அத்தருணத்தை நாம் ஆற, அமர முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
எனவே இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில், நமது கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நமது வெற்றியின் முழக்கத்தை ஊரறியச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த நவ.4-ந்தேதி முதல் டிச.14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005-ம் ஆண்டு காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும், இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.
வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்ப்பதற்கு கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து கடந்த 2-ந்தேதி வரையில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து 9575 பெயரை நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளிலும்,அதற்கு அடுத்த வாரம் 17, 18 ஆகிய தேதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 18-ந்தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியாது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- அணையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70.24 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது மழை பெய்தாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் முழு கொள்ளளவில் இருந்த அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 49.54 அடியாக உள்ளது. 752 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1933 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 744 கனஅடியாக உள்ளது. தம்பதி முல்லை பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்கள் உடலை தேடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதனால் அணையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதால் நேற்று முதல் பாசனத்திற்கான நீருடன் சேர்த்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர் கேம்ப்பில் உள்ள நீர்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 5212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 35.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார்.
- நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
கோவை:
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்காலத்தில் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாக தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும்.
உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதில் முதல் இடம் விஜய்க்கு தான். 2-வது இடத்தில் தான் பிரதமர், 3-வது இடம் முன்னாள் ஆந்திர முதல்-அமைச்சர், 4-வது இடத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.
அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பதை காலம் பதில் சொல்ல இருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவரே 100 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்தால் எங்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக இருக்கும் என அ.தி.மு.க.வை பார்த்து குறிப்பிட்டார். அப்படி என்றால் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று பொருள்.
தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார். அதுபோன்று தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் வரலாறு படைப்பார். தலைவர் வருவார். முதல்வர் ஆவார் என்று தான் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளுமே வேண்டாம். புதிய முகம் தான் தேவை என தமிழக மக்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
பொதுவாகவே ஒரு திரைப்படத்தை வெளியிடும் போது வளர்ந்து வரும் இயக்கங்களுக்கு இதுபோன்ற தடைகள் வரும். பொங்கல் வரை காத்திருங்கள். அதற்குள் எத்தனை பேர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்று பாருங்கள். டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நமது கூட்டணியில் இடம் பெறுவார்கள்.
மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது. அங்கு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோடு ஷோ நடத்தப்படும். பொதுவாக அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. ஆனால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஆன வரலாறும் அங்கே உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும். திரைப்படம் வெளியான பிறகு மக்களை வியக்கத்தக்க வகையில் அந்த படம் இருக்கும் என்றார்.
- உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நாளை தொடங்குகிறது. முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
- டி.என்.பி.எஸ்.சி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
- என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி ஈவ்னிங் பஜார் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிராட்வே பஸ் முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 7-ந் தேதி முதல் பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும்.
ராயபுரம் பஸ் முனையத்தில் இருந்து அண்ணாசாலை, ஈ.வெ.ரா. சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது நார்த் போர்ட் சாலையில் துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி ராயபுரம் தற்காலிக பஸ் முனையம் செல்லும்.
அதேபோன்று, ராயபுரம் தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து ஈ.வெ.ரா. சாலை மற்றும் அண்ணாசலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலையிலுள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலை வலதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலையில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
தீவுத்திடல் பஸ் முனையத்திலிருந்து கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது நார்த் போர்ட் சாலையிலுள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி சாலையில் போர்ட் ஸ்டேசன் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி டி.என்.பி.எஸ்.சி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலையில் உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும்.
அதே போல் ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பஸ்கள், ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு பயணிகளை ஏற்றி எஸ்பிளனேடு சாலை வழியாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி ஈவ்னிங் பஜார் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது நாளை (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் நாளை முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
* செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை வந்தடையும்.
* தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
* ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-கடற்கரை, கடற்கரை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் ஆகிய ரெயில்கள் நாளை முதல் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.
ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துக்கு மதியம் 1.15 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.05 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும்.
* கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.39 மணிக்கும், தாம்பரத்துக்கு மாலை 4.40 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.30 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.25 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.38 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.47 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.33 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.53 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.55 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.48 மணிக்கும் சென்றடையும்.
* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் ரெயில், இரவு 11.55 மணிக்கும் சென்றடையும்.
* செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.
* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கும், தாம்பரத்திற்கு இரவு 10.40 மணிக்கு செல்லும் ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
- ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவும் இன்று காலை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06053), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 9, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06156), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 9,16 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06155), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06158), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* கோவையில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06034), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் சிறப்பு ரெயில் (06033), மறுநாள் காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06024), அதேநாள் காலை 10.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06023), அதேநாள் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), அதேநாள் இரவு 11.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06106), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயில் (06105), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
இவை உள்பட மொத்தம் 10 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.
- 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது.
- பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
சென்னை:
ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவி, எழுத்தறிவு. மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் எழுத்தறிவு பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 95 சதவீதத்தை தாண்டினாலே அது முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மிகவும் வயதானவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்களால் எழுத்தறிவை பெற முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை 2027-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் எட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு திட்டங்களை வகுக்கிறது.
இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவும், நிதிசார் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மத்திய அரசு 2027-ல் இலக்கை நிர்ணயித்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த நிலையை கடந்த ஆண்டிலேயே (2025) அடைந்துவிட்டோம். ஆனாலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் முறையாக இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதலுக்காகவும், அந்த ஒப்புதல் அளித்ததும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காகவும் தமிழ்நாடு அரசு ஆவலோடு காத்திருக்கிறது.
95 சதவீதத்தை தாண்டுவது மட்டுமல்லாமல், முடிந்த வரை 100 சதவீதத்தை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அரசும் எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அதன் மூலம் தேர்வை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது. ஜூனில் நடந்த தேர்வை 5 லட்சத்து 38 ஆயிரத்து 29 பேரும், டிசம்பரில் நடந்த தேர்வை 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 பேரும் என மொத்தம் 15 லட்சத்து ஆயிரத்து 38 பேர் எழுதியுள்ளனர். இதன் தேர்ச்சியும், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற அறிவிப்பும் ஒருசேர வரும் சூழல் இருக்கிறது.
அப்படி அறிவிப்பு வந்தால், முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெறும். இதற்கு முன்பு மிசோரம், கோவா, திரிபுரா, இமாசல பிரதேசம், லடாக் ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.
இவைகள் எல்லாவற்றிலும் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. இந்த மாநிலங்களின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம் கொண்டவையாக தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
கேரளாவை பொறுத்தவரையில், 1991-ம் ஆண்டிலேயே யுனெஸ்கோ அமைப்பால் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
- குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சாமுவேல், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் கிங்ஸ்லின், குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

- தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
- ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-
தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்ப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் 2002&03ஆம் ஆண்டுடன் ரத்து செய்யப் பட்டு, 2004 ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
இத்தகைய சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தான் இந்த அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்பதை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.
பழைய ஓய்வூதியத்துடன் ஓப்பிடும் போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு; பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல அம்சங்கள் தெளிவற்று உள்ளன. அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இத்தகைய தெளிவற்றை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் எவ்வளவு? என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மாறியிருக்கும் இன்றைய சூழலில் ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு 30 வயதிற்கும் மேலாகும் நிலையில், அவர்கள் 30 ஆண்டுகள் பணி செய்வது என்பது சாத்தியமற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன் அளவு குறித்து எந்த விளக்கமும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
வழக்கமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 30 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியமும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களுக்கு கால அளவிற்கு ஏற்ற வகையிலும் ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டப்படி 30 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்பதும், அதன் அளவை குறிப்பிடாததும் பெரும் அநீதி.
அதேபோல், 2003&ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பணியில் சேர்ந்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு எவ்வளவு? என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்காமல் கருணை ஓய்வூதியம் வழங்குவதாக அறிவிப்பது அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி சிறுமைப்படுத்தும் செயலும் ஆகும்.
இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓய்வூதிய நிதியத்திற்கு அரசு ரூ.13,000 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்தத் தொகையை, இன்னும் 45 நாள்களில் முடங்கவிருக்கும் திமுக அரசு, எப்போது, எப்படி செலுத்தும்? என்பது தொடர்பாக எந்த விளக்கமும் திமுக அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும் போது தான் தெளிவாகத் தெரியும். அத்தகைய அரசாணை வெளியாகும் போது அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதற்கான 30 ஆண்டுகள் பணி செய்ய வாய்ப்பில்லாதவர்களும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்; அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று கூறியுள்ள அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள், அப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஓட்டைகள் நிறைந்த இத்திட்டத்தை அரசு அறிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுக அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், 56 மாதங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு, பதவிக்காலம் முடிவடைவதற்கு 56 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பது சதி மட்டும் தான்.
இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம்; நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறி வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இப்படி ஒரு ஏமாற்று வேலையை திமுக அரசு செய்கிறது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைக்கப்படும் போது பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை பாமக உறுதி செய்யும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது.
- வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கு விற்பனை.
வாரம் தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை இன்று காலை குறைந்த நிலையில், மாலை சற்று உயர்ந்து உள்ளது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது.
இந்நிலையில், தற்போது ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,00,800 விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.80 அதிகரித்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கும் ஒரு கிலோ ரூ.2.57 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.






