என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்.
    • இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

    பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் கோஷத்துடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையை தொடங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான அரசு அமைய வேண்டுமா? என கூட்டத்தினரிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

    அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆமாம் என்று கோஷம் எழுப்பினர்.

    பின்னர் அமித் ஷா மேலும் பேசியதாவது:-

    தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியான புதுக்கோட்டையில் உரையாற்றுகிறேன்.

    2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான். உதயநிதியை முதலமைச்சராக்குவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது.

    திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி திமுக தான்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

    தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது.

    அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.

    புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பிரச்சார பயண நிறைவு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

    அப்போது அவர், கரூர் கூட்ட நெரிசல், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.

    திமுக ஆட்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்.

    நாங்கள் உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி; திமுக உருவாக்கியது போலி கூட்டணி, திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை

    தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். பீகார் மற்றும் திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழ்நாட்டிலும் வீசும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு.
    • விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.

    ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவரகளுக்கான நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஜனவரி 12, 24 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஜனவரி 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
    • எல்.கணேசன் உடல் தஞ்சாவூர் கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    மொழிப்போர் தளபதி என்றழைக்கப்பட்ட தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எல். கணேசன் காலமானார். அவருக்கு வயது 92.

    வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைத் தளபதியாக வழிநடத்திய எல்.கணேசன் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

    மொழிப்போரில் ஈடுபட்டு மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். எல்.கணேசன் உடல் தஞ்சாவூர் கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், மறைந்த திமுக மூத்த நிர்வாகி மொழிப்போர் தியாகி எல்.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், துக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
    • பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.

    இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், தமிழகம் வந்தனைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு பாஜக-க்கான மண் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள்" என்றார்.

    • பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட அரசு.
    • தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு.

    பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்!

    உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட அரசு!

    பொங்கலோ பொங்கல்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

    மேலும் பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்களும் ஏராளமானோர் குவிந்தனர். அதிகாலையில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி ரூ. 100 கட்டண தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை முதல் 10-ந்தேதி வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    இதனிடையே இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 8-ந்தேதிவரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
    • 2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

    நெல்லை:

    தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.

    இந்த நிலையில் அவர் வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சி காமராசுடன் நெல்லைக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆற்று நீர் மாசுபடும் இடங்கள், அதனை சரி செய்ய மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள், பாதாள சாக்கடைகள் கழிவு நீர் சென்று சேரும் ராமையன்பட்டி பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பின்னர் நகர் பகுதிக்குள் தாமிரபரணி பாய்ந்தோடும் சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நதியை தூய்மைப்படுத்த வழிமுறைகளை ஆராய ஐகோர்ட்டு எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளது. நதி மிகுந்த மாசடைந்து இருப்பதை கண்டேன். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்றுள்ள சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழல் ஏற்பட்டு விட்டது. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

    மேலும் நீதிமன்றத்திற்கு 3 பரிந்துரைகளை செய்ய இருக்கிறேன். முதலாவதாக ஆறு எங்கு உற்பத்தியாகி எந்தெந்த பகுதிகள் வழியாக எங்கு வரை செல்கிறது, அதில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது, ஆற்றின் திசைகள் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும்.

    2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். பாகுபாடு இன்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு திட்டத்திற்கு உடனடியாக ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரை கலப்பது மிகப்பெரிய தவறு. பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் 'நதி அறிவு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியை தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக கருதினால் மட்டுமே தூய்மைப்பணிகள் முழுமை பெறும்.

    மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, நல்ல மழையுள்ள இந்த பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தாமிரபரணி நதி குறித்த எனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன். அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

    அவருடன் உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, சமூக ஆர்வலர் கிருஷ்ண குமார், நம் தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர். 

    • திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர்.
    • தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.

    கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை திரும்பிக் கூட பார்க்காத திமுக அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

    இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவார்கள் என்று கூறியுள்ளார்.

    • பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    • டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.

    பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

    பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    சென்னையில் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டோக்கனில் பொங்கல் பரிசு தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம். 

    • ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும்.
    • அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

    கே: புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. அதுகுறித்து?

    ப: ஜார்ஜ் கோட்டையை பிடிக்கப் போகிறோம், அதனால் புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. பல கோட்டைகளைப் பிடித்து சாதனை படைத்த அமித்ஷா இன்று வருகிறார். புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க போகிறோம். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். தொடர்ந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறது.

    தேர்தல் ஸ்டண்ட் என்பது நேற்று இவர்கள் அறிவித்திருக்கிற ஓய்வூதிய திட்டம். இது புதிய ஓய்வுதிய திட்டமா, பழைய ஓய்வூதிய திட்டமா, அல்லது பழைய, புதிய ஓய்வூதிய திட்டமா என்ற ஒரு குழப்பத்திலேயே அந்தத் திட்டம் இருக்கிறது. இப்படி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் ஓய்வூதியத் திட்டம் வந்திருக்கிறதா என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

    மகாத்மா காந்தி பெயரை மாற்றி விட்டு பாரத பிரதமர் அதை விரிவுபடுத்தினார். இவர்கள் பெயரை மாற்றி அதை சுருக்கி விட்டு, ஏற்கனவே அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பின்னர் அவர்களுக்கே கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதற்கு எல்லோரும் ஸ்வீட் கொடுக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு மறு உருவு தானே தவிர, பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.

    கே: தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து நிதிகள் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

    ப: ப.சிதம்பரம் போன்றவர்கள் கடன் வாங்குவது பிரச்சனை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரை முதலமைச்சர் சொல்கிறார் போதையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று. ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும். இணக்கமில்லாமல் நீங்கள் இருந்து கொண்டிருப்பதால் தான் எல்லாம் நாங்கள் செய்தோம், நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது. துப்புரவு தொழிலாளர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை அடி அடி என்று அடிக்கிறீர்கள்.

    தேர்தல் சமயத்தில் இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். இந்த ஓய்வூதிய திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்று இந்த அரசாணையில் இல்லை. தி.மு.க.வுக்கு நாம் அடுத்து வருவோமா என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் அறிவிப்பு விடுவோம் என்று தான் நடக்கிறது. இது போன்ற பல அறிவிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.

    கே: தி.மு.க. கூட்டணி கட்சியினர் மது ஒழிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் கட்சியில் உள்ளவர்களே மது ஆலையை நடத்துகிறார்கள்.

    ப: வைகோவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் எதற்கு எதிராக நடைபயணம் செல்கிறீர்கள்? அறிவாலயத்திற்கு தான் நீங்கள் நடைபயணம் செல்ல வேண்டும். சாராய ஆலையை நோக்கி தான் நடைபயணம் செல்ல வேண்டும். ஆனால் சாராய ஆலையை நீங்கள் மூட மாட்டீர்கள், டாஸ்மாக்கை குறைக்க மாட்டீர்கள். அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.

    அதேபோல் நாளை 10 லட்சம் லேப்டாப்புகளை முதலமைச்சர் மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஏன் எச்.சி.எல். நிறுவனத்தில் வாங்கவில்லை. நமது தமிழரான சிவ நாடாரிடம் ஏன் வாங்கவில்லை?

    கே: நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது அறநிலையத்துறை அமைச்சருக்கும் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல் இப்பொழுது கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ளதே?

    ப: நான் கவர்னராக இருக்கும்போது கூட அதைப்பற்றி சிந்தித்தது கிடையாது. நான் கூட்டத்தோடு தான் செல்வேன் என்று நான் கூறியபோது என்னுடன் வந்தவரை தடுத்து நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்று கூறுகிறார். இவர் தனியாகவா எல்லா இடங்களுக்கும் செல்கிறார்? கோவில் அவருடைய சொந்த சொத்தா, பொதுமக்களுடையது தான். இந்த தி.மு.க. கூட்டணி தான் மதசார்பற்ற கூட்டணி என்று பெயர் வைப்பதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று நான் சொல்கிறேன்.

    கே: தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி டோல் பிரீ எண்ணை வழங்கி, மக்களுடைய தகவல்களை தெரிவிக்க சொல்லி இருக்கிறார்களே?

    ப: ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையை பார்க்க சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×