என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராட்வே பஸ் நிலையம்"

    • 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
    • பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.

    சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் பிராட்வே நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இட நெருக்கடியால் வெளியூர் செல்லும் பஸ்கள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது.

    இதன் பின்னர், பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பஸ் நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பஸ் நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

    அதன்படி, பிராட்வே பஸ் நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பஸ் நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் புறநகர் ரெயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இவை 73 பஸ் நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

    இந்த திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டு உள்ளது.

    இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, எஸ்பிளேடு ரோடு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ரோடு நுழைவு மற்றும் வெளி யேற்று அமைப்பு வழியாக பஸ் நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்து உள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பஸ் நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வடிவமைப்பின்படி பயணிகளுக்கும் பஸ்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 2-வது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதில் 2 அடுக்கு கார் நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பஸ் நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.

    22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை கட்டடத்தின் பயணிகள் கூடத்திற்கும், கார் நிறுத்து மிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், .பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
    • ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து இயக்கம்.

    சென்னை:

    பிராட்வே பஸ் முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கடந்த 7-ந்தேதி முதல் பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) முதல் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.
    • என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி ஈவ்னிங் பஜார் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிராட்வே பஸ் முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 7-ந் தேதி முதல் பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும்.

    ராயபுரம் பஸ் முனையத்தில் இருந்து அண்ணாசாலை, ஈ.வெ.ரா. சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது நார்த் போர்ட் சாலையில் துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி ராயபுரம் தற்காலிக பஸ் முனையம் செல்லும்.

    அதேபோன்று, ராயபுரம் தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து ஈ.வெ.ரா. சாலை மற்றும் அண்ணாசலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலையிலுள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

    காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலை வலதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலையில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

    தீவுத்திடல் பஸ் முனையத்திலிருந்து கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது நார்த் போர்ட் சாலையிலுள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.

    மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி சாலையில் போர்ட் ஸ்டேசன் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.

    ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பஸ்கள் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி டி.என்.பி.எஸ்.சி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்துக்கு செல்லும்.

    தீவுத்திடல் தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நார்த் போர்ட் சாலையில் உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும்.

    அதே போல் ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பஸ்கள், ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு பயணிகளை ஏற்றி எஸ்பிளனேடு சாலை வழியாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி ஈவ்னிங் பஜார் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×