என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர்.
    • தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது 2-வது மனைவி சரண்யா (29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்த போது. இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 31-ந் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் திடீரென்று சரண்யா மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மகள் சரண்யாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முடியாததால், அவரது தாயார் அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காவேரி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்தார்.

    அப்போது சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். ஆனாலும், சரண்யா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது மகளை காணவில்லை எனபுகார் அளித்தார்.

    மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. திருவண்ணாமலை போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. சரண்யாவின் தலை, மார்பு பகுதி மற்றும் ஒரு தொடை ஆகியவை மட்டுமே அங்கு கிடந்தன. அதை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்து வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் கோபியை கைது செய்தனர். கணவன் மனைவி இடையே சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கோபி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்தார். சரண்யாவின் உடலை 8 துண்டகளாக வெட்டியுள்ளார்.

    பின்னர் இது குறித்து அவருடைய தாயார் சிவகாமியிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சரண்யாவின் உடல் பாகங்களை ஒரு டிராவல் பையில் வைத்து அடைத்தனர்.

    பின்னர் இது குறித்து கோபி தன்னுடைய நண்பர் ராஜேந்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரை எடுத்து வந்தார்.

    அவருடைய காரில் 3 பேரும் சரண்யாவின் உடல் பாகங்களை பையில் வைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிக்கு சென்றனர்.

    8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர். தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன. மீதி உள்ள கை கால்கள் உள்ளிட்ட 5 பாகங்கள் கிடைக்கவில்லை.

    அவற்றை கைப்பற்ற போலீசார் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கோபியின் தாயார் சிவகாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேரை கைது செய்தனர்.
    • அனைவரும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல் மையமாக திகழ்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்களை சுங்கத்துறையினர் பிடித்து பறிமுதல் செய்தாலும் அதனை விட பலமடங்கு கடத்தல் தங்கம் வெளியில் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் ஒரே நாளில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படையினர் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 11 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளில் சந்தேகப்படும்படியாக வந்த அனைவரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர்.

    இதேபோல் நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடமும் அதிரடி சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் 3 விமானங்களில் வந்த 25 பயணிகளின் உடைமை களில் தங்கக் கட்டிகள், தங்க பசைகள், மற்றும் தங்க செயின்கள் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ. 15 கோடி மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குருவிகளாக சிங்கப்பூர் சென்று சென்னைக்கு தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் உள்ள முக்கிய தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை சிங்கப்பூருக்கு குருவிகளாக அனுப்பி வைத்திருந்தது தெரிந்தது. ஒரே விமானத்தில் வந்தால் சுங்கச் சோதனையில் மொத்தமாக சிக்கி விடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு 3 விமானங்களில் வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இவர்களில் ஒரு பெண் உட்பட 2 பயணிகளிடம் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கம் இருந்தது. மற்ற 23 பயணிகளிடமும் ஒரு கிலோவுக்கு குறைவாகவே தங்கம் இருந்தன. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப் போன்று ஒட்டுமொத்தமாக தங்கம் கடத்தி வரும் சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறையினர் உள்பட ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தங்கம் கடத்தலில் குருவிகளாக சென்று பிடிபட்டு உள்ள 25 பேரிடமும் தங்கத்துடன் வெளியே சென்றால் யாரை சந்திப்பார்கள்? எங்கு செல்வார்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர். எனவே சென்னையில் தங்கம் கடத்தலில் மூளையாக செயல்படும் கும்பல் விரைவில் பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தடப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்த பிரபல யூடியூபர் மற்றும் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.
    • கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் 'உலக நாயகனே' என்று தொடங்கும் பாடலே இடம்பெற்றிருக்கும்.

    தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான கமல் ஹாசன் கடந்த 2018 ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் குதித்தாலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் கமல் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

    நடிப்பிற்காக சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிய கமல், உலகநாயகன் என்ற அடைமொழியுடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கமல் 10 கெட் அப்களில் நடித்த கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் 'உலக நாயகனே' என்று தொடங்கும் பாடலே இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்களை குறிப்பிட்டு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று திடீர் அறிவிப்பு ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழ்வருமாறு,

    என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள், மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

    சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான், பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது, திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

    கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

    எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் நான்.. என்று தெரிவித்துள்ளார்.

    • டெல்லி கணேசுக்கு தங்கம் என்ற மனைவியும் மகா கணேஷ் என்ற மகனும் பிச்சு, சாரதா ஆகிய மகள்களும் உள்ளனர்.
    • டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

    தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருந்தன.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே டெல்லி கணேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. மரணம் அடைந்த டெல்லி கணேசுக்கு தங்கம் என்ற மனைவியும் மகா கணேஷ் என்ற மகனும் பிச்சு, சாரதா ஆகிய மகள்களும் உள்ளனர். மகன் மகா கணேஷை கதாநாயகனாக வைத்து என்னுள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்தார்.

    டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், கார்த்தி, ராதாரவி, சார்லி, செந்தில், இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, வசந்த், நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் மற்றும் நிர்வாகிகள் டெல்லி கணேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்ந், தவெக தலைவர் விஜய், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், நடிகர் சார்லி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் மறைந்து நடிகர் டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    • தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை உயர்ந்து வந்தது. பின்னர் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை அதிகரித்திருந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200

    09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200

    08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

    06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-11-2024- ஒரு கிராம் ரூ. 103

    09-11-2024- ஒரு கிராம் ரூ. 103

    08-11-2024- ஒரு கிராம் ரூ. 103

    07-11-2024- ஒரு கிராம் ரூ. 102

    06-11-2024- ஒரு கிராம் ரூ. 105

    • 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது.
    • மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் 2-வது சுற்றுக்காக காத்திருக்கும் சூழலில், அதற்கான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த 6 அல்லது 7-ந் தேதிகளில் உருவாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் 8, 9-ந் தேதிகளில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உருவாகவில்லை. இப்படியாக 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிபடியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து ம், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் வந்து பங்கேற்கக் கூடாது.
    • இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் கவனத்திற்கு!

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் வந்து பங்கேற்கக் கூடாது.

    நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பாமகவினரை பேருந்து, மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
    • டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.

    டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
    • பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

    பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.

    டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கம், எழுத்தாளர் இந்திரா சொளந்தரராஜன் மறைவுக்கும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி கணேஷின் மறைவுக்கு வெளியிட்டுள்ள பிதிவில், " டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

    நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.

    அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.

    தொடர்ந்து, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " பத்திரிகை வாசகர்கள், தொலைக்காட்சி ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் தன் எழுத்துகளால் வசீகரித்த எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் திடீர் மறைவு வருந்தத்தக்கது.

    தன் இறுதி நாள் வரை எழுத்துத் துறையில் இடையறாமல் இயங்கி வந்த அவர் இன்று இறுதி ஓய்வு அடைந்திருக்கிறார்.

    அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.
    • உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, விருதுநகர் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை இந்த மேடையில் மணிக்கணக்கில் என்னால் சொல்ல முடியும். தமிழர்களின் வீர விளையாட்டான அரங்கம் அமைத்தது பயனற்ற திட்டமா? மதுரையில் மாணவ-மாணவிகள் கல்வியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கலைஞர் நூலகம் அமைத்தது பயனற்ற திட்டமா? கிண்டியில் சிறப்பு மருத்துவமனை அமைத்து பயனற்ற திட்டமா? தமிழகம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது பயனற்ற திட்டமா? இதில் எதை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இப்படி வாய்தொடுக்காகவும் ஆணவத்துடன் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.

    தமிழக மக்கள் மனதில் கலைஞர் தவிர்க்க முடியாதவர். அவரது கொள்கைகளையும், சிந்தனைகளையும் செயல்படுத்தி வருகிறேன். கலைஞர் பிள்ளை என்பது மட்டுமல்லாமல் அவரது தொண்டனாகவும் வாழ்ந்து வருவதில் பெருமிதமடைகிறேன். அவரது புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் வீசுகிறது. அந்த வௌிச்சம் எடப்பாடியின் கண்களை கூச செய்கிறது.

    எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என்னைப் பற்றி முதலமைச்சர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றார்.
    • அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும்.

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டிற்காக 80 ஆண்டுகாலம் ஓயாமல் உழைத்தனர் கலைஞர்.

    மக்கள் திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்களது பெயரையா வைக்க முடியும்" என்று கடுமையாக பேசினார்.

    இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் என்னைப் பற்றி முதமைச்சர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை தெரிவித்து இருகிறார். என்னைப் பற்றி முதமைச்சர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.

    10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுக. ஜெயலலிதா ஆட்சியின்போது மக்கள் அதிகளவில் நன்மை பெற்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். எனது ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள், 6 சட்ட கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

    தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவை இதுவரை திமுக அரசு திறக்கவில்லை.

    திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக அரசின் திட்டங்களை திமுக புறக்கணிக்கிறது. கொரோனா காலத்தில் பாராட்டு, விருதுகளை பெற்றது அதிமுக அரசு. திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதையே காரணம்.

    அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×