என் மலர்tooltip icon

    பீகார்

    • ஆசிரியை கேமராவை பார்த்து சைகை செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு ஆசிரியை ஒருவர் உருவாக்கிய ரீல்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பீகாரில் பிபியூ தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதில், விடைதாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவர் விடைகளை கூட பார்க்காமல் ரீல்ஸ் வீடியோ தயாரிப்புக்காக விடைத்தாள்கள் தரப்படுத்தும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோவில் விடைத்தாள் திருத்தும் அறையில் சர்ச்சைக்குரிய ஆசிரியை மற்றும் சில ஆசிரியைகள் அமர்ந்துள்ளனர்.

    அதில், சம்பந்தப்பட்ட ஆசிரியை கேமராவை பார்த்து சைகை செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் அந்த ஆசிரியை விடைத்தாள்களை கவனிக்காமலேயே அதனை திருத்துவது போன்று பாவனை செய்யும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
    • பாடலிபுத்ரா தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒவைசி பிரசாரம் செய்தார்.

    பாட்னா:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உத்தர பிரதேசம், பீகார் உள்பட சில வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாடலிபுத்ரா பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்தார்.

    அப்போது அசாதுதீன் ஒவைசி பேசுகையில், இதெல்லாம் ஒரு பிரதமர் பேசும் பேச்சுக்களா? எங்களுக்கு அதுபோல் பேசத் தெரியாதா? 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நமது நிலத்தை ஆக்கிரமித்தபோது மோடி அவர்களே சீனாவுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தீர்களா? என்று கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    முன்னதாக பாடலிபுத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தபோது, ஓட்டு ஜிகாத்துக்காக, முஸ்லிம்களை குளிர்விக்க, எதிர்க்கட்சிகள் 'முஜ்ரா' எனப்படும் பெண்களை ஆடவிட்டு மகிழ்வித்து வருகின்றன என குற்றம்சாட்டினார்.

    • தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை லேசாக கீழே இறங்கியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் பாட்லிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார். அவருடன் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார்.

    இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை லேசாக கீழே இறங்கியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி இருக்கும் மேடை திடீரென கீழே சாய்ந்தது. அவரின் பாதுகாவலர்கள் விரைவாகச் செயல்பட்டு ராகுலை பிடித்தனர். எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்த போதிலும், ராகுலுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வை பதற்றப்படாமல் ராகுல் காந்தி சமாளித்தார்.

    • குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது.
    • தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் வெளிப்படையாக மிரட்டுகிறார்.

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், குஜராத் அரசும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குஜராத்தில் ஓபிசி முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பட்டியலை இணைந்துள்ளார்.

    அக்கடிதத்தில், "குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து, தற்போது பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?

    தனியார் துறையில் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பிரதமர் புறக்கணித்துள்ளார். பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீட்டை அதிகரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனை நிராகரித்தார்.

    அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும், ஆனால் பாஜக அரசு ரயில்வே, ராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அரசு வேலைகளை நீக்கியதன் மூலம் இடஒதுக்கீடு மறைமுகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    எருமைமாட்டை பறித்து விடுவார்கள், தாலியை பறித்துவிடுவார்கள் என்று பேசிய மோடி இப்போது முஜ்ரா நடனத்தை பற்றி பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமரின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.

    தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் பேசுகிறார். மத்திய விசாரணை அமைப்புகள் மோடியின் விருப்பப்படி செயல்படுகின்றன என்பதற்கு உங்களது பேச்சே ஆதாரமாகும்" என்று எழுதியுள்ளார்.

    • நீண்ட தொடர்ச்சியான பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    • நாட்டின் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகளை பற்றி பீகார் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்லுங்கள்.

    பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பரமாத்மா கதையை ஏன் கொண்டு வந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?. ஏனென்றால், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதானி பற்றி நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்கும்போது, எனக்குத் தெரியாது என்று அவர் சொல்வார். பரமாத்மாதான் இப்படி கேட்கச் சொன்னார் என்று நழுவிக் கொள்வார்.

    நீண்ட தொடர்ச்சியான பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில், நாட்டின் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகளை பற்றி பீகார் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்லுங்கள்.

    மோடி 22, 25 பேர்களை ராஜா மற்றும் மகாராஜாவாக ஆக்கியுள்ளார். அவர்களுக்கு அதானி, அம்பானி என வெவ்வேறான பெயர்கள் உள்ளன. அந்த ராஜாக்களுக்காகவே 24 மணிநேரமும் உழைக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தபிறகு அக்னிபாத் திட்டத்தை நீக்குவோம். ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்வோம். மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறப்போம். 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.
    • இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் என்றார் கார்கே.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

    நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

    இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல.

    பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகாரை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீகாரில் ஆடப்படுகிறது. இதனால் அவர் பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
    • இந்தியா கூட்டணி பிரதமர் நாற்காலிக்கு மியூசிக்கள் சேர் விளையாடுகிறது என விமர்சித்தார்.

    பீகார் தலைநகர் பாட்னாவின் அருகில் உள்ள பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் இன்று (மே 25) நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    பேரணியின் அவர் உரையாற்றியபோது, "சிறுபான்மை எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து அவர்களை அடிமைப்படுத்தி இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முஜ்ரா நடனம் ஆடுகிறது

    தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்கும் முயற்சிகளை முறியடிக்க நான் சபதம் ஏற்றுள்ளேன். ஓட்டு ஜிகாத்தில் ஈடுபடுபவர்களுடன் எதிர்கட்சி (ஆர்ஜேடி) கூட்டணி வைத்திருக்கிறது" என்று கூறினார். மேலும் முஸ்லீம் குழுக்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் மேற்கு வங்க அரசின் முடிவை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு அதை வரவேற்பதாக தெரிவித்தார்.


     



    தொடர்ந்து பேசிய அவர், "பாடலிபுத்திரா தொகுதி பாஜக வேட்பாளர் ராம் கிருபால் யாதவின் பெயரில் ராம் என்ற வார்த்தை இருப்பதால் அதைக் கேட்டு முகம் சுளிக்க்கும் அளவுக்கு ராமரை எதிர்க்கட்சிகள் வெறுக்கின்றன. இந்தியா கூட்டணி பிரதமர் நாற்காலிக்கு மியூசிக்கள் சேர் விளையாடுகிறது" என விமர்சித்தார்.  

    • இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர்.
    • இந்தியா கூட்டணி கட்சிகள் சொந்த நலன்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுகின்றன.

    பாட்னா:

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் ஒருபுறம் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் மோடி, மறுபுறம் உங்களிடம் பொய் சொல்லும் இந்தியா கூட்டணி இருக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த பாரத் ஆக்குவதில் நான் 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறேன்.

    இந்தத் தேர்தல் இந்தியாவை வலிமையாக்க 24 மணி நேரமும் உழைக்கும் மோடிக்கும், வேலை இல்லாத இந்தியக் கூட்டணிக்கும் இடையே நடப்பதாகும்.

    இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர். அதனால்தான் இந்த இந்தியா கூட்டணி என்னை தவறாக பேசுவதில் மும்முரமாக உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் சொந்த நலன்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுகின்றன. அவர்கள் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் உள்ளனர்.

    இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது என்று நமது அரசியலமைப்பு கூறுகிறது. இதை டாக்டர் அம்பேத்கரும் கூறியுள்ளார். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் எஸ்.சி,எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகின்றன.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் வகுப்புவாதிகளாக இருக்கிறார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்க இந்தியா கூட்டணியை அனுமதிக்க மாட்டேன்.

    தங்கள் வாக்கு வங்கியை சந்தோஷப்படுத்த, காங்கிரஸ் சிறுபான்மை நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை ஒரே இரவில் மாற்றியது. இதற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு இந்த நிறுவனங்களில் சேர்க்கையின்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி முழு இட ஒதுக்கீட்டைப் பெற்றனர்.

    இது எல்.இ.டி பல்புகளின் காலம். ஆனால் பீகாரில் சிலர் லாந்தருடன் அலைகிறார்கள். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 'லாந்தர்' ஒரு வீட்டிற்கு மட்டுமே வெளிச்சம் தருகிறது. அதே நேரத்தில் பீகார் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

    இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     

     

    பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 34.62 சதவீதம்

    மகாராஷ்டிரா- 27.78 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 48.41 சதவீதம்

    ஒடிசா - 35.31 சதவீதம்

    ஜார்கண்ட்- 41.89 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர்- 34.79 சதவீதம்

    லடாக்- 52.02 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 38.55 சதவீதம்


    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×