என் மலர்tooltip icon

    பீகார்

    • பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.

    பாட்னா:

    பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய

    கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கே.சி.தியாகி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தந்தால் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக கூறினார்கள் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார்.

    இதனையடுத்து, இது தொடர்பாக பேசிய பீகார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்சய திவாரி, "நிதிஷ்குமார் ஒரு 'பிரதமர் மெட்டிரியல்', ஆனால் பாஜக கூட்டணியில் அவர் தலை குனிந்து உள்ளார்" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    • பாஜக அரசு 2022-ல் ராணுவ வீரர்கள் தொடர்பாக அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தது.
    • நான்கு வருட வேலை என்ற அடிப்படையில் ராணுவ வீரர்கள் நியமனம் செய்யப்படுவர்.

    மக்களை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியாக 290 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் உதவி பா.ஜனவுக்கு தேவைப்படுகிறது.

    இதனால் மந்திரி சபையில் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி சில விசயங்களை செய்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விரும்புகின்றன.

    அமைச்சரவையில் இடம், இரு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து பிரதான கோரிக்கைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பார்வை வேறு பக்கம் உள்ளது. அந்த கட்சி அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது.

    கடந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் 2022-ல் ராணுவ வீரர்கள் தொடர்பாக அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    நான்கு வருட வேலை என்ற அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். அதன்பின் 15 வருடத்திற்கு நிரந்தர கமிஷன் என்ற அடிப்பயைடில் 25 சதவீத சம்பளம் வழங்கப்படும். இதனால் பென்சன் வழங்கும் தொகை மிச்சமாகும் என பாஜக அரசு எண்ணியது.

    இதற்கு பீகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் வருகின்றன பீகார் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய ஜனதா தளம் நினைக்கிறது. இதனால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது.

    இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கேசி தியாகி கூறுகையில் "அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த திட்டத்திற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தாக்கம் தேர்தலில் பார்க்க முடிந்தது.

    நாங்கள் இதை வலியுறுத்தமாட்டோம். அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • கொடுங்கோன்மைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

    எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்த இந்த இரு கட்சிகளும் சமீபத்தில்தான் பா.ஜனதாவுடன் இணைந்திருந்தன. எனவே அந்த கட்சிகளை இந்தியா கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது.

    பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிதிஷ்குமார், கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

    இந்நிலையில் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிதிஷ்குமாரும், இந்தியா கூட்டணியின் தேஜஸ்வியும் பயணம் செய்தனர்.

    பரபரப்பான அரசியல் சூழலில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்தனர்.

    தொங்கு பாராளுமன்றம் அமைந்ததால் பாஜக ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஒரே விமானத்தில் தேஜஸ்வியுடன் பயணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நிதிஷ் உடன் ஒரே விமானத்தில் பயணித்த தேஜஸ்வி யாதவ், "நாங்கள் வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டோம். வேறென்ன.. பொறுமையாக காத்திருங்கள்.

    கொடுங்கோன்மைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை கூட்டத்திற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்று பார்ப்போம் என தெரிவித்தார்.

    • கடந்த முறை பீகாரில் 40 தொகுதியில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • நிதிஷ் குமார் அடிக்கடி பல்டி அடிப்பதால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

    பா.ஜனதா பெரிதும் நம்பும் மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இங்கு 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

    கடந்த முறை நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் இருந்தார். பின்னர் லாலு கட்சியுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்தார். அதன்பின் மீண்டும் பா.ஜனதாவுக்கு தாவினார்.

    காங்கிரஸ் மற்றும் லாலு கட்சிகள் இணைந்து பீகாரில் பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியில் இறங்கியுள்ளது. இந்த முறை பீகாரில் பா.ஜனதாவுக்கு 39 தொகுதிகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 400 இலக்கை நிர்ணயித்துள்ள பா.ஜனதாவுக்கு பீகார் கைக்கொடுக்காவிடில் கடந்த முறை எட்டிய 303-ஐ தொடக்கூட கடினமானதாகிவிடும்.

    இந்த நிலையில்தான் டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள தேஜஸ்வி யாதவ் செல்கிறார்.

    அவர் தேர்தல் முடிவு, இந்த கூட்டம் குறித்து கூறியதாவது:-

    இது ஒரு வழக்கமான ஆலோசனைக் கூட்டம். நாங்கள் இதுபோன்று கூட்டங்களை நடத்துகிறோம். நாங்கள் 300 தொகுதிகளுக்கு மேல் பிடிப்போம். பீகாரில், நாங்கள் ஷாக்கிங் ரிசல்ட்-ஐ பெறுவோம். நாங்கள் அதிகப்பட்டியான இடங்களை பிடிக்கும் அதே நேரத்தில், மத்தியில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியாது.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • பீகாரில் பள்ளிக்கூட மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.
    • இதனால் பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பாட்னா:

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது.

    பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதற்கிடையே, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
    • படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார்.

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார்.

    கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.

    தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என திமுக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமரின் தியான நிகழ்ச்சி குறித்து பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தியானம் செய்ய அல்ல. கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "பிரதமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.
    • வெப்பம் அதிகரித்ததால் மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

    பாட்னா:

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்ட முதல் மந்திரி நிதிஷ் குமார், வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டார்.

    • வெப்பம் அதிகரித்ததால் மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
    • அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பீகார் மாநிலம் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிகள் படித்து வந்தனர். மதியம் நேரத்தில் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை வீசியது. இதை மாணவிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இந்த வெப்ப அலையால் மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக சதார் மருத்துவமனை டாக்கடர் ரஜனிகாந்த் குமார் கூறுகையில் "வெப்பநிலை அதிகரித்ததால் மாணவிகள் கடினமான நிலையை எதிர்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை மூலம் அதிக அளவில் நீர் வெளியேறும் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றார்.

    அதேபோல் பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ முழுவதும் கேலி பேச்சுகள், அரசியல் விவாதங்கள் உள்ளன.
    • தேஜஸ்வி யாதவ் பகிர்ந்துள்ள புதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    பாட்னா:

    ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதிய விருந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த வீடியோவில் தேஜஸ்வி யாதவ், ராகுல்ஜி இப்போது 2 முறை ஆட்டிறைச்சி சாப்பிட்டார் என ஜோக் அடிக்கும் காட்சிகள் உள்ளது.

    யாதவ் குடும்பத்தில் மதிய உணவு என்ன என்ற தலைப்பில் அந்த வீடியோ தொடங்குகிறது. அதில், தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி மதிய உணவு சாப்பிடும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    வீடியோ முழுவதும் கேலி பேச்சுகள், அரசியல் விவாதங்கள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி இந்திய மக்களால் தோற்கடிக்கப்படுகிறது என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பீகாரில் நவராத்திரி விழாவின் போது மீன் சாப்பிடுவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் தேஜஸ்வி யாதவ், இந்த வீடியோ நவராத்திரிக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் பகிர்ந்துள்ள இந்த புதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.


    • மோடி தோல்வியடைந்து விட்டார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது.
    • மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை என்டிஏ கூட்டணி இழந்த பிறகு அவர் மிகப்பெரிய முடிவை எடுக்கலாம்.

    பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் பாஜக உடனான தொடர்பை முறித்துக் கொண்டு லாலு கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக திடீரென லாலு கட்சி உடனான தொடர்பை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜக-வுடன் உறவை புதுப்பித்துக் கொண்டார்.

    இதனால் நிதிஷ் குமாரை லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து என்டிஏ கூட்டணி ஆட்சியை இழந்தபின் நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறிகையில் "மோடி தோல்வியடைந்து விட்டார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது. நாடு புதிய அரசை பெறப்போகிறது. என்னுடைய மாமா நிதிஷ் குமாரை பற்றி ஒரு விசயத்தை சொல்லப் போகிறேன். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை என்டிஏ கூட்டணி இழந்த பிறகு அவர் மிகப்பெரிய முடிவை எடுக்கலாம்.

    துரோகம் செய்தது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம், தற்போது என்னுடைய கணிப்பு அவருடைய கட்சியை காப்பாற்றுவதற்காகவும், அவருடைய ஓபிசி ஆதரவு அரசியலை பாதுகாக்கவும் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என்பது எனது கணிப்பு. ஜூன் 1-ந்தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்" என்றார்.

    • பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹர்ஷ் ராஜ் என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
    • தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பிகார் தலைநகர் பாட்னாவில் சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 27) பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் (22) என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

     

    தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹர்ஸ் ராஜை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கல்லூரியில் உள்ள சிசிடிவி கட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்ததில் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.

    இன்று (மே 28) இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் சந்தன் யாதவ் என்ற மாணவனை கைது செய்த்துள்ளனர். அவரின் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கல்லூரியில் தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதிலிருந்து சின்ன சின்ன உரசாலாக இரு குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையே பூதாகாரமாக மாறி மாணவனின் உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஹர்ஷ் ராஜின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போரட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநிலத் தலைநகர் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்தே மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

     

    ×