என் மலர்
இந்தியா
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
- கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் - பொன்னேரி, மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்ட்ரல், மாலை 3.56 மணிக்கு எண்ணூர் - சென்ட்ரல், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு சென்ட்ரல்- மீஞ்சூர், மாலை 4.14 மணிக்கு மீஞ்சூர் - சென்ட்ரல், மதியம் 2.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரி, மாலை 4.47 மணிக்கு பொன்னேரி - கடற்கரை, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.
- சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்துவிட்டு கையொப்பம் பெற்றார்.
அப்போது அங்கு தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு பெண் முககவசம் அணிந்து இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணிடம் முககவசத்தை அகற்றும்படி கூறினார். பின்னர் நுழைவு சீட்டை சோதனை செய்து பார்த்தார்.
அப்போது நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபரின் புகைப்படம் இருந்தது.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வாம்பிகை(வயது 25) என்பது தெரிய வந்தது.
திருமணமான அவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிய வந்தது. இதேபோல அவர் கடந்த 28-ந் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை முககவசம் அணிந்து எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தாய் சுகந்தி 10-ம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்துள்ளபோது, மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார்? என அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். தாய்க்காக ஆள்மாறாட்டம் செய்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு சென்று பிரபல பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் தயாரித்தார்.
- ரீல்சை வலைத்தளத்தில் பதிவிட அது காட்டுத்தீயாக பரவியது.
சண்டிகரை சேர்ந்தவர் அஜய். போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஜோதி. சமூக வலைத்தளத்தில் 'ரீல்ஸ்' பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்தநிலையில் ஜோதி, சாலை நடுவே ரீல்ஸ் எடுத்து பதிவிட முடிவு செய்தார். அதன்படி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு சென்று பிரபல பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் தயாரித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த ரீல்சை வலைத்தளத்தில் பதிவிட அது காட்டுத்தீயாக பரவியது. இதனை தொடர்ந்து மனைவியின் 'ரீல்ஸ்' மோகத்தால் அவருடைய கணவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
- மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி ஒப்புதளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது
- ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
புதுடெல்லி:
மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், சந்தேகத்துக்கு இடமான கப்பல்கள் வந்து செல்வதாகவும் இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கடற்படையினரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்றை, தர்காஷ் கப்பல் வழிமறித்து நிறுத்தியது.
இதையடுத்து கடற்படையினர் அந்த படகை சோதனையிட்டனர். அப்போது அதில் சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் அதிக அளவில் இருந்தன. விசாரணையில் அதில் 2,386 கிலோ ஹாஷிஷ் என்ற போதைப்பொருளும், 121 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
- உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர் கோட்டை, களமருதூர், குன்னத்தூர், ஆசனூர், கெடிலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சென்னை:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர் கோட்டை, களமருதூர், குன்னத்தூர், ஆசனூர், கெடிலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
- சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
- பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. குறிப்பாக பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் வரும் 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழைக்கு வாயப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
- ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் விதமாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சித்தராமையாவை காஸ்ட்லீ டீசல் என்று கிண்டலடித்த பாஜக, வின் டீசல் என்றால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast & Furious), சித்தராமையா ஸ்கேம் அண்ட் இன்ஜுரியஸ் (scam and injurious)" பாஜக விமர்சித்துள்ளது.
- மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
- மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:
இங்கு வெறும் ஐம்பது வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளது, இந்த மசோதா எவ்வளவு பிரபலமற்றது மற்றும் பொதுமக்களின் ஆணைக்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
கட்சியின் கொறடா மற்றும் இரு கூட்டாளிகளால் மட்டுமே அவர்களால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் இது மிகவும் இருண்ட நாள். அரசாங்கம் நியாயமற்ற மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.
- நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
- 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ். 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:
நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். நான் 7 வருடங்கள் இங்கு இருந்தேன். ஜெர்சியை சிவப்பு நிறத்தில் இருந்து நீலமாக மாற்றினேன். உணர்ச்சிவசப்பட்டேன், ஆனால் பந்து கிடைத்ததும் எனக்கு நன்றாக இருந்தது. நான் ரொனால்டோவின் ரசிகன், அதனால் கொண்டாட்டம்.
நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இடைவேளையின் போது என் தவறுகளை சரிசெய்து, என் உடற்தகுதியை மேம்படுத்த முயற்சித்தேன்.
குஜராத் டைட்டன்ஸ் அணி என்னை அழைத்துச் சென்றதும் நான் ஆஷிஷ் பாயிடம் பேசினேன். நெஹ்ரா எனது பந்துவீச்சை அனுபவிக்கச் சொல்கிறார். இஷாந்த் பாய் என்ன லைன் அண்ட் லென்த் பந்து வீசவேண்டும் என்று சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். பிட்ச் எனக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.
- மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
- அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சிலர் கூறினர்.
- ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இல்லை. பெரும்பான்மையினர் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
பார்சிகள் போன்ற சிறிய சிறுபான்மை சமூகங்கள் கூட இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளன. இங்குள்ள அனைத்து சிறுபான்மையினரும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.
இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது.
சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. நானும் ஒரு சிறுபான்மையினர், நாம் அனைவரும் இங்கு எந்த பயமும் இல்லாமல் பெருமையுடன் வாழ்கிறோம்.
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் மத துன்புறுத்தலை எதிர்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்வது மிக, மிக தவறு.
வரும் தலைமுறை உங்களை ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் பெரும்பான்மையினர் முழுமையாக மதச்சார்பற்றவர்கள் என்பதால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இது இல்லை. ஆனாலும், நீங்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் ஒன்றிணைக்கப் போகிறது. வக்பு தீர்ப்பாயங்களில் ஏராளமான தகராறுகள் நிலுவையில் உள்ளன. சட்டத்தின் மூலம் இந்த வழக்குகளை விரைவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.






