என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினை மோடி நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.

    நேற்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்..

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினை மோடி நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.

    தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.

    டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜெர்மனியில் தமிழ் ஆரவாரத்தை கேட்கும்போது தமிழ் மண்ணில் இருப்பதை போன்று உணர்ந்தேன்.

    * பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து நீங்களும் நானும் சந்திப்பது தான் தமிழ் பாசம்.

    * வெளிநாடுகளில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சென்னை கூட்டி வந்துள்ளோம்.

    * உக்ரைன், சூடான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவித்த மாணவர்களை மீட்டு வந்திருக்கிறோம்.

    * அயலக தமிழர்களை அரவணைக்க தமிழக அரசும் நானும் எப்போதும் இருப்போம்.

    * உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.

    * தமிழ்நாடு வளர வேண்டும் என முடிந்த உதவிகளை தாய் மண்ணுக்கு செய்யுங்கள்.

    * தமிழர் தொன்மையின் பண்பாட்டு சின்னங்களை உங்கள் குழந்தைகளுக்கு காட்ட தமிழ்நாடு வாருங்கள்.

    * இந்த உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழர் என்பதையும் தமிழ்நாட்டையும் மறக்காதீர்.

    * தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.

    * ஜெர்மனியில் நீங்கள் சிறியதாக தொழில் செய்தாலும் அதனை தமிழ்நாட்டிலும் தொடங்க முன்வாருங்கள்.

    * ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.

    * தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

    * உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • MPL பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
    • வருவாய் இழப்பை சமாளிக்க MPL நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டத்தால் கிரிக்கெட் பெட்டிங் நிறுவனங்களான Dream 11, MPL (மொபைல் பிரீமியர் லீக்) ஆகியவை தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    Dream 11 உடைய தாய் நிறுவனமான Dream sports மற்றும் MPL இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், மொபைல் பிரீமியர் லீக் (MPL), இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

    பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க பணிநீக்கம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 

    • அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக தணல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    • முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 168 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து தோற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஓவல் இன்வின்சிபிள்ஸ், டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. வில் ஜாக்ஸ் 72 ரன்னும், ஜோர்டான் காக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஓவல் இன்வின்சிபிள் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் கேப்டனாக தொடர்ந்து 3 முறை தனது அணிக்கு கோப்பை வாங்கித் தந்துள்ளார் என்பதால் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

    • நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    2001 க்கு பிறகு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் (NTTO) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

    அதன்படி, நடப்பாண்டில் ஜூன் வரை 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அமெரிக்கா சென்றவர்கள் 2.3 லட்சம் பேர் ஆவர்.

    ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.5 சதவீதம் சரிந்துள்ளது.

    இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா செல்லும் வெளிநாடினர் விகிதமும் குறைந்துள்ளது.

    2024 ஜூன் உடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் இல் 6.2 சதவீத சரிவு விகிதம் உள்ளது. 

    அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன், இந்தியா, பிரேசில் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் ஆவர். 

    • தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றார்.
    • அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபகமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் பெங்களூருவின் பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டைச் சேர்ந்த மஞ்சு பிரகாஷ் ஆவார்.

    டிசிஎஸ் ஊழியரான பிரகாஷ்,நேற்று, அருகிலுள்ள கரும்புக் கடைக்குச் சென்றுவிட்டு மதியம் 12.45 மணியளவில் வீடு திரும்பியதாகவும், பின்னர் தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    சிறிது நேரம் கழித்து, ஷூவின் அருகே பாம்பு இறந்து கிடப்பதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள், அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்தனர். பிரகாஷ் வாயில் நுரை தள்ளியதாகவும், காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பின்னர் பிரகாஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

    2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் பிரகாஷின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதன் பின் பிரகாஷின் ஒரு காலில் எந்த உணர்வும் இல்லை. அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.  

    தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.

    நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. அப்படத்திற்கு பிறகு அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அஜித், ‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள். கார் ரேஸ் வெறும் ஃபன்னாக ஓட்டும் போட்டியல்ல '' என்றார்.

    அஜித்தின் இந்த பேச்சு வைரலாகி உள்ளது. தன்னை விட கார் ரேஸில் அவர் கொண்ட காதல் எவ்வளவு என்பதை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.



    • அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.
    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்

    அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.

    டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    • ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
    • ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது.

    தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ந் தேதி நான் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருகிறேன் என்றார்.



    இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது. அவர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    • நவம்பர் மாதத்தில் டெல்லியில் குவாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
    • குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரவிருந்தார்

    குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனையால் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையீ இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு டிரம்ப் 50% வரிவிதித்தார்.

    இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ×