என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்லைன் கேம் தடை சட்டம்: MPL நிறுவனம் 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு
    X

    ஆன்லைன் கேம் தடை சட்டம்: MPL நிறுவனம் 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

    • MPL பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
    • வருவாய் இழப்பை சமாளிக்க MPL நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டத்தால் கிரிக்கெட் பெட்டிங் நிறுவனங்களான Dream 11, MPL (மொபைல் பிரீமியர் லீக்) ஆகியவை தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    Dream 11 உடைய தாய் நிறுவனமான Dream sports மற்றும் MPL இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், மொபைல் பிரீமியர் லீக் (MPL), இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

    பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க பணிநீக்கம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×