என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idols of Vinayagar"

    • விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இந்நிலையில், கர்நாடகாவின் தொட்டபல்லாபூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அந்த விபத்தில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் விபத்து ஏற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

    • குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
    • தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது.

    கோவை,

    கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆடி வெள்ளியை முன்னிட்டு இந்து அன்னையர் முன்னணி சார்பில் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி 1008 பெண்கள் பங்கேற்கும் அம்மன் மஞ்சள் நீர் அபிஷேக ஊர்வலம் பிரமாண்டமாக நடக்க உள்ளது. மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 10,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜைகள் ஆகியவை நடத்தப்படும். கோவை மாநகரில் நடக்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. இதில் இந்துமுன்னணியினரோடு பொதுமக்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொதுசெயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன், ஆனந்த், ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×