என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது- ஜெர்மனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
- உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.
- ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.
டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெர்மனியில் தமிழ் ஆரவாரத்தை கேட்கும்போது தமிழ் மண்ணில் இருப்பதை போன்று உணர்ந்தேன்.
* பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து நீங்களும் நானும் சந்திப்பது தான் தமிழ் பாசம்.
* வெளிநாடுகளில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சென்னை கூட்டி வந்துள்ளோம்.
* உக்ரைன், சூடான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவித்த மாணவர்களை மீட்டு வந்திருக்கிறோம்.
* அயலக தமிழர்களை அரவணைக்க தமிழக அரசும் நானும் எப்போதும் இருப்போம்.
* உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.
* தமிழ்நாடு வளர வேண்டும் என முடிந்த உதவிகளை தாய் மண்ணுக்கு செய்யுங்கள்.
* தமிழர் தொன்மையின் பண்பாட்டு சின்னங்களை உங்கள் குழந்தைகளுக்கு காட்ட தமிழ்நாடு வாருங்கள்.
* இந்த உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழர் என்பதையும் தமிழ்நாட்டையும் மறக்காதீர்.
* தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.
* ஜெர்மனியில் நீங்கள் சிறியதாக தொழில் செய்தாலும் அதனை தமிழ்நாட்டிலும் தொடங்க முன்வாருங்கள்.
* ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.
* தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
* உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






