என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
    • தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் ஓடினர்.

    * எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.

    * நமது அரசன் சாதனைகள் பற்றி வடமாநில Youtube சேனல்களில் பேசுகின்றனர்.

    * தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

    * நீட் விலக்கு வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அதில் விலக்கு பெற முயற்சிக்காமல் இல்லை.

    * நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான நீதி தரும் ஆட்சியில் மத்தியில் அமையும்

    * மத்தியில் ஒருநாள் தமிழ்நாட்டுக்கான நீதியை தரும் ஆட்சி அமையத்தான் போகிறது.

    * அடுத்து வருவதும் நமது திராவிட மாடல் ஆட்சிதான் என்றார். 

    • டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
    • தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.

    கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா அனுமதித்ததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து பேசிய ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் நமது 26 குடிமக்களின் மதத்தைக் கேட்டு அவர்களைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?

    26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? நேற்றும் அந்த 26 குடிமக்களுடன் நாங்கள் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்" என்று தெரிவித்தார்.

    படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    • நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும்
    • வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது:-

    சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடு. அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிறந்த சாதனையைக் கொண்ட நாடு ஆகும். போரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. அமைதிப் பேச்சு வார்த்தைகளை ஊக்குவிப்பதும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண்பதும் சீனாவின் நோக்கமாகும் என்றார்.

    • பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
    • தேர்தலில் தில்லு முல்லு செய்ய மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று இரவு அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசு மக்களை கொடுமை படுத்துவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜீரோ போட்ட முகவரியில் வசிப்பதாக வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    2029-ல் பாஜக-வின் ஆட்சிய முடியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஒரு நேரத்தில் தேர்தலை நடத்த திட்ம். அப்போதுதானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலைகளை எளிதாக செய்ய முடியும். இதற்கு பெயர் ஜனநாயக படுகொலை.

    பாரளுமன்ற தொகுதி வரையறை மூலம் தென்மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கு அதிக எம்.பி. தொகுதி கிடைக்கும் வகையில் மோசடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் தவெக முதலில் எதிர்த்தது. எதிர்க்கிறோம். எதிர்ப்போம். தென்இந்திய மாநிலங்களில் அதிகாரத்தை குறைப்பதற்கான மோசடி வேலைகள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு, Sir. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.

    இவ்வாறு பாஜக அரசு மக்களை கொடுமைப்படுத்துவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

    • டான்சித் ஹசன், பர்வேஸ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.
    • டோஹித் ஹிரிடோய் 8 ரன்களும் மஹேதி ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர்.

    முதல் 5 பந்துகளை டாட் செய்த டான்சித் ஹசன் (0) 6-வது பந்தில் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பர்வேஸ் (0) 3 பந்துகளை டாட் செய்து 4-வது பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

    பவர் பிளேயில் வங்கதேசம் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் வங்கதேசம் அணி 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

    • போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது.
    • சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், "போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷிய மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சீனா, இந்தியாவைத் தவிர்த்து துருக்கி ரஷியாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது. துருக்கியை தவிர்த்து நேட்டோ அமைப்பில் உள்ள 32 நாடுகளில் ஹங்கேரி, ஸ்லோவாகியா நாடுகளும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன.

    அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன்.

    அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை "Naan Thaan CM" என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன். இப்படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.

    படத்தின் முதல் லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டு, பார்த்திபன் நகைச்சுவையான அரசியல் உரையுடன் கூறியுள்ளார்:

    "பெரியோர்களே, தாய்மார்களே,

    வாக்களப் பெருமக்களே!

    ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!

    போடுங்கம்மா ஓட்டு

    Boat'சின்னத்தைப் பாத்து!

    இப்படிக்கு,

    C. M . சிங்காரவேலன் எனும் நான்….

    'சோத்துக் கட்சி'"

    இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பார்த்திபன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பை பார்த்திபனின் Bioscope Film Framers தயாரிக்கிறது

    திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது.
    • ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது ஜியோ, ஏர்டெல்-ன் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.

    ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் முடிவில் தலையிட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்திருக்கும் ஹன்சிகா, விரைவில் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

    ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்தநிலையில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மோனா மற்றும் ஹன்சிகா மீது நான்சி புகார் தெரிவித்தார்.

    இதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனக்கு எதிரான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று தள்ளுபடியானது.

    இதையடுத்து ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • வாடகை கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும்.

    பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு இந்தாண்டு இரட்டை தீபாவளி என்றும், அதற்காக ஜி.எஸ்.டி.யில் வரி சீர்த்திருத்தம் செய்யப்படும் என்றார். அதன்படி கடந்த 3-ந்தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுவரை இருந்த 5, 12, 18, 28 என்ற வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை அடுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் 12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் 5 சதவீதத்திற்கும், 28 சதவீதத்தில் இருந்தவை 18 சதவீதத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி மாற்றங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த மாற்றத்தால் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் கார்கள் 28 சதவீதத்தில் இருந்து 18-க்குள் வந்து விடுகிறது. மேலும் பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ காப்பீடுகள் ஆகியவற்றுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் சில பொருட்களுக்கும், சேவைகளுக்கு வரி அதிகரித்துள்ளது. அதன்படி நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் பஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் பொருட்கள் அதாவது குயில்ட் மெத்தைகள் போன்ற பொருட்கள் ரூ.2 ஆயிரத்து 500-க்கு மேல் இருந்தால் தற்போதைய வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கம்பளிகள் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. அதனால் இந்த பொருட்களின் தற்போதைய விலையில் இருந்து அதிகரித்து விடும்.

    அதே போல வேலைகளை பிறருக்கு அளிக்கும் ஜாப் வொர்க் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கம் தொடர்பான தொழில்நுட்ப சேவைகள், சுரங்க ஆதரவு சேவைகள் என அனைத்து 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு சார்ந்த பணிகளான கடல்சார் பணிகள், மண் அகழ்வு பணிகள், துணை ஒப்பந்தங்கள் ஆகியவை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    அதேபோல் நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பான்மசாலா, அனைத்து இனிப்புப் பானங்கள், ஆல்கஹால் இல்லாத குளிர்பானங்கள், கார்பனேட்டு பழசாறுகள், பழசாறுகள், புகையிலை, சிகரெட், பிற புகையிலை தயாரிப்புகள், நிக்கோடின் பொருட்கள்ஆகியவை அனைத்தும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    கேசினோ, சூதாட்டம், ரேஸ் கிளப்புகள், ஆன்லைன் விளையாட்டுகள், ஐ.பி.எல். போட்டிக்கான வரி ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக இருக்கிறது.

    விமானப் பயணங்களில் எகானமி அல்லாத முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ் பயணங்களுக்கு இதுவரை 12 சதவீத ஜி.எஸ்.டி. இருந்தது. ஆனால் தற்போது அது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமானக் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. அதேபோல், எரிபொருள் செலவு சேர்த்து வசூலிக்கப்படும் மோட்டார் வாகனப் பயண கட்டணங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், வாடகை கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும். சரக்கு போக்குவரத்திலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.

    இந்திய ரெயில்வே தவிர்த்த பிறரால் இயக்கப்படும் ரெயில் கன்டெய்னர் போக்குவரத்து, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படும் சேவைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய அனைத்தும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், வாடகை வாகன சேவைகளில் - மோட்டார் வாகனங்களும், லாரி போன்ற சரக்கு வாகனங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்களின் தாக்கமாக, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மட்டுமல்லாமல், சந்தையில் பொருட்களின் விலைகளும் கூடும் வாய்ப்பு உள்ளது.

    ×