என் மலர்
நீங்கள் தேடியது "ஹன்சிகா மோத்வானி"
- ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்திருக்கும் ஹன்சிகா, விரைவில் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்தநிலையில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மோனா மற்றும் ஹன்சிகா மீது நான்சி புகார் தெரிவித்தார்.
இதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனக்கு எதிரான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று தள்ளுபடியானது.
இதையடுத்து ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
- விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று பேசப்படுகிறது.
ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை நாட இருப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இதனால் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா, தனது கணவரை பிரிந்து விட்டார் என்று செய்தி வெளியானது.
- தற்போது மும்பையில் தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.
கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா, தனது கணவரை பிரிந்து விட்டார் என்று செய்தி வெளியானது. கணவரது வீட்டில் இருந்து வெளியேறி, தற்போது மும்பையில் தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையும், அதனைத் தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் தான், ஹன்சிகாவின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விரைவில் விவாகரத்தை நாடப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா தரப்பில் இருந்து மவுனம் காக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் சோஹைல் கட்டாரியா தரப்பில் இருந்து ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஹன்சிகாவை பிரிகிறேனா? அதாவது பிரிவு, மனமுறிவு என்றெல்லாம் வரும் வதந்திகள் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஹன்சிகா என்ன சொல்ல போகிறாரோ...
- மை 3 சீரிசை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கை ராஜேஷ் எம் இயக்கி இருக்கிறார்.
- மை 3 சீரிசில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஒ.டி.டி. தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பிரிவில் உருவாக்கி இருக்கும் "மை3" என்ற சீரிஸ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி உள்ளிட்டோர் இந்த சீரிசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த சிரீசை இயக்கி உள்ளார்.
ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிசாக மை 3 உருவாகியுள்ளது. இந்த சீரிசுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன், அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்-இல் வெளியாக இருக்கும் "மை3" சீரிசை Trendloud நிறுவனம் தயாரித்து உள்ளது.
- 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
- ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேகிங் வீடியோவை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி 'போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
மேலும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






