search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பால்னாங்குப்பம் அருகே அரசு மது பாட்டிலை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    பால்னாங்குப்பம் பெருமாள் வட்டத்தை சேர்ந்த புகழேந்தி மனைவி பிரியா (வயது 34) தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • ஊராட்சி மன்றம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏலகிரி மலை ரோட்டரி கிளப் மற்றும் தருமபுரி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏலகிரி ஊராட்சி மன்றம் சார்பில் நடந்தது.

    இம்முகாமிற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் அத்தனாவூர், நிலாவூர், மங்களம், உள்ளிட்ட ஏலகிரி மலை வாழ் மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    இம்முகாமில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சகுந்தலா (வயது 48). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் நேற்று இரவு சக்தி நகரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார்.

    அப்போது புதூர் கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சகுந்தலா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சகுந்தலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயிர்களை சேதப்படுத்தியது
    • காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன

    ஆம்பூர்:

    ஆந்திரா மாநிலம், நனியாலயா பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக -ஆந்திரா எல்லையான வாணியம்பாடி வன பகுதிக்குள் நுழைந்தது.

    வாணியம்பாடி அருகே உள்ள சிந்தகாமணி பெண்டா, வெலதிகாமணி பெண்டா, மாதகடப்டா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தி நாசம் செய்தன.

    பின்னர் அவைகள் மதகடப்பாவில் இருந்து புறப்பட்டு அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா சென்று அந்த கிராமத்தில் உள்ள வாழை தோட்டம், நெற்பயிர் மற்றும் மாட்டு கொட்டகை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.

    இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட யானைகள் வெங்கடசமுத்திரம் ஊராட்சி, மலைக்காட்டை ஒட்டி உள்ள ராளகொத்தூர் பகுதியில் நெல் மற்றும் மக்காசோளம் உளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மிட்டாளம்மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை மரங்கள், காய்கறி தோட்டம், பூ தோட்டம், நெல் ,கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்நிலையில் தற்போது அந்த காட்டு யானைகள் மிட்டாளத்தை ஒட்டி உள்ள காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன.

    • 10 ஆடுகள் பலியானதால் ஆத்திரம்
    • கிராமத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதனாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. தகவலறிந்து வந்த வாணியம்பாடி வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த கிராமத்தில் நேற்று இரவு 11 மணி வரை முகாமிட்டு, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினருடன் சேர்ந்த கிராம மக்களும் இரவு தூக்கமின்றி விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் ஆடுகளை கடித்துக் குதறியது நாய்கள் என்று கிராம மக்களிடம் கூறிவிட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட முயன்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்து றையினர் வாகனத்தை சிறைப்பிடித்து, வனத்துறை யினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இங்கு ஏதோ ஒரு வன விலங்கு நட்டமாட்டம் உள்ளது, அது என்ன விலங்கு என்று கண்டறிந்து கிராம மக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிக ளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அந்த கிராமத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    • கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பூ அலங்காரம் செய்து வழிபாடு

    ஜோலார் பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கடந்த வருடம் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனால் ஒரு ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்று முடிந்த நிலையில் நேற்று வருட பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூ அலங்காரமும் செய்தனர்.

    இதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் கோ பூஜை தேவதா அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, நடந்தது. 8.30 மணிக்கு மகா பூர்ணாஹீதி, தீபாராதனையும் வெற்றி விநாயகர், காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர், கலசாபிஷேகமும், இதனையடுத்து ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மகா அபிஷேகமும் நடைபெற்றது.

    விழாவில் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி. குமரேசன், கிளாசிக் கோவை அன்பு மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மானிய விலையில் இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்று மற்றும் மானிய விலையில் இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் ராதா வரவேற்றார்.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர் க. உமா கன்ரங்கம், ஊராட்சி மன்ற தலைவர் க. மாலா சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்க ளாக கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விைலயில்லா தென்னங்கன்றுகள் மற்றும் மானிய விலையில் இடுப்பொருட்களை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபு, ஸ்ரீநாத், நாச்சிமுத்து உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி வனத்துறையினர் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

    இருப்பினும் முருகன்குட்டை, சங்கத்து வட்டம், மதனாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இதுவரை சுமார் 50 ஆடுகளை மர்ம விலங்கு கடித்த குதறியது. ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.

    மதனாஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார்.

    நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது, அந்த வழியாக 4 ஓநாய்கள் போன்ற விலங்குகள் கூட்டமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனச்சரக அலுவலர் குமார் தலைமையான வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுவரை 50 ஆடுகள் பலியாகி உள்ளது. மர்ம விலங்கு பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    பொதுமக்கள் கூறியபடி, தொடர்ந்து ஆடுகளை கடித்துக் குதறும் மர்ம விலங்கு, ஓநாயாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். சிறுத்தை போன்ற விலங்குகள் ஆடுகளை கடித்த உடன் வனப் பகுதிக்குள் சென்று விடும். ஆனால் ஓநாய் போன்ற விளக்குகள் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியிலேயே பதுங்கி இருந்து, நள்ளிரவு நேரங்களில் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை.

    எனவே மதனாஞ்சேரியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஓநாய் போன்ற மர்ம விலங்குகள் பதுங்கி உள்ளதாக என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் மூலம் அகற்றம்
    • கனமழை பெய்ததன் காரணமாக தேங்கியது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உள்ள பழைய கட்டிடங்களை புதுப்பிப்ப தற்காக தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று கனமழை பெய்ததன் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற கட்டிடத்தின் மீது மழை நீர் தேங்கியது.

    இந்நிலையில் தலைமை ஆசிரியர் உத்தரவின் பேரில் கட்டிடத்தில் தேங்கிய மழை நீரை மாணவர்கள் அகற்றினர்.

    இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது:-

    கட்டிடத்தின் மேல் தளத்தில் மழைநீர் தேங்கினால் கட்டிடம் சேதமடைந்து விடும் இதனால் மழை நீரை அகற்றியதாக தெரிவித்தார்.

    பள்ளி கட்டடத்தின் மேல் தளத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மழை நீரை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அவர் எழுதிய புத்தகங்கள் கொண்ட பேனா வடிவிலான முத்தமிழ் ஊர்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தது, இந்த ஊர்தியை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. தேவராஜி, நகர தி.மு.க. செயலாளர் சாரதி குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அங்கு வந்த முத்தமிழ் ஊர்திக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர், இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    பின்னர் கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மற்றும் அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பேனா சின்னதுடன் வந்த வாகனத்தை பார்வையிட பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதில் வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன், ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், பேரூராட்சி தலைவர்கள் பூசாராணி (உதயேந்திரம்) தமிழரசி (ஆலங்காயம்), பேரூராட்சி செயலாளர்கள் செல்வராஜ் (உதயேந்திரம்) ஶ்ரீதர் (ஆலங்காயம்), தாசில்தார் மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு பணியாற்றும் சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் பணியில் இருக்கும் போது மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மது அருந்திவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தொந்தரவு செய்வதாகவும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சிறை தலைமைக் காவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகாரி ஆலோசனை
    • தீவிரமாக பணி நடைபெற்று வருகிறது

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு ஊராட்சிக்குட்பட்ட கொட்டையூர், மங்கலம், புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் இணைப்பு வழங்க குடிநீர் குழாய் அமைப்பது குறித்து ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கிராம பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலனிடம் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு விநியோகிக்க தீவிரமாக பணி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் உள்ளிட்ட அந்தந்த வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×