search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள்"

    • மானிய விலையில் இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்று மற்றும் மானிய விலையில் இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் ராதா வரவேற்றார்.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர் க. உமா கன்ரங்கம், ஊராட்சி மன்ற தலைவர் க. மாலா சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்க ளாக கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விைலயில்லா தென்னங்கன்றுகள் மற்றும் மானிய விலையில் இடுப்பொருட்களை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபு, ஸ்ரீநாத், நாச்சிமுத்து உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×