என் மலர்
நீங்கள் தேடியது "confidential information"
- மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜா என்கிற ஜான்பீட்டர் (வயது 22) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பீட்டரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினர்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த ஐபேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந் தம், சப்- இன்ஸ்பெக்டர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட் புதரில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமி ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- திட்டக்குடி அருகே வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்காவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே பரமசிவம் என்பவர் வீட்டு வராண்டாவில் வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி 100 கிலோ எடையுள்ள மூட்டைகள் 42, 50 கிலோ எடையுள்ள மூட்டைகள் 55 என தனித்தனியாக அடிக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டக்குடி டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்து. இது குறித்து அவர் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு வீட்டு வராண்டாவில் அடிக்கடி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர் . வீட்டின் உரிமை யாளர் பரமசிவம் தலைம றைவானதால் இது குறித்து வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை வழங்கல் துறையிடம் ஒப்படைத்தனர்.
- ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பனந்தல் ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தலைமை யில் அப்பனந்தல் ஏரி அருகே சென்று சோதனை செய்தனர் அப்போது ஏரியில் சுமார் 900 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டி யார்பாளையம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய சுந்தரத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.