search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரகண்டநல்லூரில் ஏரியில் பதுக்கிய 900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
    X

    பறிமுதல் செய்யப்பட்ட சாராய ஊறல்களை படத்தில் காணலாம். 

    அரகண்டநல்லூரில் ஏரியில் பதுக்கிய 900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

    • ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பனந்தல் ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தலைமை யில் அப்பனந்தல் ஏரி அருகே சென்று சோதனை செய்தனர் அப்போது ஏரியில் சுமார் 900 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டி யார்பாளையம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய சுந்தரத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×