

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வர கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 53) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பனை செய்வ தாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலை மையிலான போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீரன் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீ சார் வீரனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.