search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டர்"

    • ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஆக்டிவா இருக்கிறது.
    • ஆக்டிவா மாடலை வாங்குவோருக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோருக்கு குறுகிய கால சலுகை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா உள்ளது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீதம் கேஷ்பேக் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

    எனினும், இந்த கேஷ்பேக் சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்போர் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் குறைந்த பட்ச பரிவர்த்தனை தொகை ரூ. 40 ஆயிரம் ஆக இருக்க வேண்டும். மற்ற பலன்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு குறைந்த முன்பணம் ரூ. 3 ஆயிரம், 7.99 சதவீதம் வட்டியில் கிடைக்கிறது.

    இந்த சலுகை மார்ச் 31, 2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இரண்டு சலுகைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சலுகை தவிர ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இது பற்றி ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விலை உயர்த்தப்பட்டன.
    • இரு ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அவ்வப்போது உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹீரோ பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது.

    எனினும், தற்போதைய விலை உயர்வில் டெஸ்டினி 125 மாடல் பாதிக்கப்படவில்லை. பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. விலை உயர்வின் படி ஹீரோ பிலெஷர் பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 982 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 79 ஆயிரத்து 522 என மாறி இருக்கிறது. இதே போன்று மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 816 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 92 ஆயிரத்து 760 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய விலை விவரங்கள்:

    ஹீரோ பிலெஷர் பிளஸ் LX ரூ. 70 ஆயிரத்து 982

    ஹீரோ பிலெஷர் பிளஸ் VX ரூ. 72 ஆயிரத்து 738

    ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ரூ. 76 ஆயிரத்து 228

    ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ஜூபிலண்ட் எல்லோ ரூ. 79 ஆயிரத்து 522

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிரம் ரூ. 69 ஆயிரத்து 816

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிஸ்க் ரூ. 74 ஆயிரத்து 910

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 83 ஆயிரத்து 440

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 88 ஆயிரத்து 240

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் ரூ. 88 ஆயிரத்து 660

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் / கனெக்டெட் ரூ. 92 ஆயிரத்து 760

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    விலையை உயர்வை அடுத்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தொடர்ந்து நிதி சார்ந்த சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் குறுகிய காலத்திற்கு எக்சேன்ஜ் மற்றும் நிதி சலுகைகளை அறிவித்து இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

    • சுசுகி நிறுவனத்தின் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் பிரீமியம் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது பர்க்மேன் ஸ்டிரீட் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் முற்றிலும் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சுசுகி இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் EX மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.

    சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடல் சுசுகியின் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும். புதிய ஸ்கூட்டரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மிக முக்கிய மெக்கானிக்கல் அப்டேட் பெற்று இருக்கிறது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் மேம்பட்ட 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது எரிபொருள் பயன்பாட்டை மற்றும் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்டர் சிஸ்டம் உள்ளது. இது போக்குவரத்து நெரிசலில் என்ஜின் ஆஃப் ஆன பின், திராட்டிலை மெதுவாக திருகும் போது என்ஜின் ஆன் ஆகி விடும். இத்துடன் புது மாடலில் 12 இன்ச் வீல், சற்றே அகலமான 100/80 செக்‌ஷன் டயர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சுசுகி ரைடு கனெக்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் மூலம் பயனர்கள் தங்களின் போன்களை ஸ்கூட்டருடன் இணைத்துக் கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இன்கமிங் அழைப்புகள், எல்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட் என ஏராளமான விவரங்களை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் பார்க்க முடியும்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
    • ஹீரோ வாகனங்கள் விலை குறிப்பிட்ட தேதியில் இருந்து மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்படும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    "உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், அவர்களுக்கு நிதி சலுகை மூலம் தீர்வுகளை வழங்குவோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்து இருக்கிறார்.

    விலை உயர்வு தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு விட்டன. எனினும், இதற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அடுத்த மாத வாக்கில் இந்த மாடல் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    • யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.

    • சமீப காலங்களில் வாகனம் வாங்க காயின் மூலம் பணம் செலுத்தும் வழக்கம் வைரலாகி வருகிறது.
    • இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பலமடங்கு அதிகரித்தாலும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    இந்தியாவில் யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் ஒவ்வொரு நாளும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பரவலாக இந்த முறையில் பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், முதியவர்கள் தொடர்ந்து ரொக்கம் மற்றும் சில்லறை காயின்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், நபர் ஒருவர் தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை முழுக்க ரூ. 10 காயின்களாக கொடுத்து இருக்கிறார். ருத்ராபூரை சேர்ந்த நபர் முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை 5 ஆயிரம் ரூ. 10 காயின்களாக கொடுத்து பணம் செலுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பெரிய தொகையை காயின்களாக கொடுக்கும் முறை ஏற்கனவே சிலர் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக காயின்களை மூட்டை மற்றும் பெட்டிகளில் எடுத்து வந்து செலுத்திய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காயின் மூலம் பணம் செலுத்துவது சட்டப்பூர்வமான ஒன்று தான் என்ற போதிலும், காயின்களை முழுமையாக எண்ணி முடிக்க அதிக நேரம் ஆகும். இதன் காரணமாக அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை காயின்களாக செலுத்த டீலர்கள் வரையறை வைத்துள்ளனர்.

    இந்தியாவில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 246 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த நபர் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் எந்த வேரியண்டை தேர்வு செய்தார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

    • ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அசத்தல் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆக்டிவா மாடலுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ஐந்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    எனினும், கேஷ்பேக் சலுகை மாத தவணை முறை பரிவர்த்தனைகளில் தேர்வு செய்யப்பட்ட டெபிட்/கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் முன்பணம் இல்லாமல் ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கும் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோர் ஏதேனும் ஒரு சலுகையை மட்டுமே பெற முடியும். நிதி சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா சீரிஸ் - ஆக்டிவா 6ஜி (110சிசி) மற்றும் ஆக்டிவா 125 (125சிசி) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடல் விலை ரூ. 73 ஆயிரத்து 086 என்றும் ஆக்டிவா 125 விலை ரூ. 77 ஆயிரத்து 062 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • போக்குவரத்து விதிமீறல் மற்றும் போலீஸ் நடவடிக்கை காரணமாக உலகெங்கிலும் பல முறை விசித்திர சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
    • அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸ் நிறுத்திய சம்பவம் விசித்திர செயல்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.

    சாலை பயணங்களின் போது விசித்திர சம்பவங்கள் அரங்கேறுவது சாதாரண நிகழ்வாக மாறி விட்டன. அந்த வகையில், ஐதராபாத் நகரில் அரங்கேறிய சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. ஐதராபாத் சாலையில் தவறான வழியில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஐதராபாத்-இல் உள்ள அமீர்பெட் பகுதியில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை விதிமீறி இயக்கி இருக்கிறார். இவ்வாறு சென்று கொண்டிருந்ததை போலீஸ் அதிகாரி ஒருவர் பார்த்தார். உடனே தவறான வழியில் வந்த நபரை இருசக்கர வாகனத்துடன் தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த எஸ் அசோக் என்ற நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த எஸ் அசோக் திடீரென எரிபொருள் கொண்டு வந்து தனது மோட்டார்சைக்கிள் மீது ஊற்றி அதற்கு தீ வைத்து எரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஐதராபாத் நகரில் போக்குவரத்து போலீசார் சட்டவிரோத பார்க்கிங் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் இதுவரை சுமார் 472 பேரிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 65 ஆயிரம் வரை அபராதம் வசூலித்துள்ளனர்.

    "போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட எஸ் அசோக் தவறான வழியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். இவரை போலீசார் பில்லர் நம்பர் 1053 அருகில் தடுத்து நிறுத்தினர்," என காவல் துறை இணை ஆய்வாளர் ஏவி ரங்கநாத் தெரிவித்து இருக்கிறார்.

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய விற்பனையகம் கேரளா மாநிலத்தில் திறக்கப்பட்டு உள்ளது.
    • இந்த விற்பனையகம் தண்ணீரில் மிதக்கும் வகையில் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் வாகனங்களை விளம்பரப்படுத்த பல்வேறு வித்தியாசமான வழிமுறைகளை கையாள்வது வாடிக்கையான விஷயம் தான். இதை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

    மிகவும் புதிதாகவும், வித்தியாசமாகவும் அமையும் வகையில் ஹோண்டா நிறுவனத்தின் மிதக்கும் விற்பனையகம் கேரளாவில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மிதக்கும் விற்பனையகம் தண்ணீரில் ஏழு நாட்கள் பயணம் செய்து 15-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்கிறது.

    "உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஏற்ற கதையை தெரிவிக்க விரும்பினோம். மிதக்கும் விற்பனையகம் மூலம், வாடிக்கையாளர்களுடன் எங்களின் தொடர்பு மேலும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருப்பதில் ஹோண்டா சிறந்து விளங்கும் நிலையில், இந்த முயற்சி அதனை மேலும் வலுப்படுத்தும்," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார்.

    முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலின் பிரீமியம் எடிஷனை அறிமுகம் செய்து இருந்தது. இந்த ஸ்கூட்டர் தங்க நிற வீல்கள், பேட்ஜ்கள் மற்றும் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருந்தது. இதன் விலை ரூ. 74 ஆயிரத்து 400, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் அக்சஸ் 125 ஸ்கூட்டரை புதிய நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • அந்த வகையில் அக்சஸ் 125 மாடல் தற்போது டூயல் டோன் நிற ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது அக்சஸ் 125 ஸ்கூட்டரின் டூயல் டோன் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் சுசுகி அக்சஸ் 125 சாலிட் ஐஸ் கிரீன் / பியல் மிரேஜ் வைட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் ஆப்ஷன் சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    முன்னதாக சுசுகி அக்சஸ் 125 மாடல் மெட்டாலிக் ராயல் பிரான்ஸ், பியல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் மேட் போர்டௌக்ஸ் ரெட், பியர் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர். பியர் மிரேஜ் வைட் மற்றும் மெட்டாலிக் டார்க் கிரீனிஷ் புளூ போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வரிசையில் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் எடிஷனில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்புகள், அதிவேக எச்சரிக்கை, போன் பேட்டரி நிலை, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட், மிஸ்டு கால் என ஏராளமான விவரங்களை காண்பிக்கிறது.

    இந்த ஸ்கூட்டரில் வெளிப்புறம் பியூல் லிட், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பொசிஷன் லைட்கள், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய சுசுகி அக்சஸ் 125 டூயல் டோன் விலை ரூ. 85 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் டைமண்ட் கட் அல்ய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது சாலையில் அதிவேகமாக 50 லட்சம் வாகனங்கள் எனும் மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 866 ஆகும்.

    இந்த ஸ்கூட்டரின் பெண்டர் கார்னிஷ், டிண்ட் செய்யப்பட்ட வைசர், மிரர் ஹைலைட் உள்ளிட்டவைகளை சுற்றி பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 3டி பிளாக் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் எண்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரிச் டார்க் பிரவுன் பேனல்கள், பிரீமியம் லெதர் இருக்கை மேற்கவர்கள், பேக் ரெஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன .இந்த ஸ்கூட்டர் மிஸ்டிக் கிரே மற்றும் ரீகல் பர்ப்பில் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை அலுமினியம், லோ-ஃப்ரிக்‌ஷன் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் சீரான செயல்திறன், பிக்கப் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இத்துடன் டிவிஎஸ் மோட்டார் காப்புரிமை பெற்ற எகனோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இகோ மோட் மற்றும் பவர் மோட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றில் இகோ மோட் அதிக மைலேஜ் வழங்கும்.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் பிளாக்‌ஷிப் ஜூப்பிட்டர், என்டார்க், வீகோ மற்றும் பெப் பிளஸ் என நான்கு ஐசி என்ஜின் ஸ்கூட்டர்களும் தொடர்ந்து அமோக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. ஜூப்பிட்டர் மற்றும் வீகோ மாடல்கள் 3 லட்சத்து 64 ஆயிரத்து 095 யூனிட்களும், பெப் பிளஸ் 28 ஆயிரத்து 913 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 15 ஆயிரத்து 028 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

    ×