search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரஸ் காய்ச்சல்"

    • திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன.
    • புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை, சாக்கடை கழிவு நீர் கால்வாய் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகள், செடிகள் நிறைந்த புதர் பகுதி உள்ளிட்ட திறந்த வெளிப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சுகாதார பிரிவினர் கொசு மருந்து புகை அடித்தல் மற்றும் கொசு புழுஒழிப்பு மருந்து தெளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்கு மண்டலவாரியாக, புகை அடிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.சுகாதார பிரிவினர் கூறுகையில், 'வழக்கம் போல் சுழற்சி முறையில் பகுதிவாரியாக புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றனர்.

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:    

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.
    • காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவிய காய்ச்சல் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது. 2 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    புளூ காய்ச்சலுடன் எச்1 என்1 என்னும் ஒருவகை இன்புளூயென்சா வைரஸ் கிருமி தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்தியா முழுவதும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையில் ஒரு வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் விற்பனை கடந்த மாதம் உயர்ந்த நிலையில், எழுச்சி தொடர்கிறது.

    "கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.

    "காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது."

    பிப்ரவரி மாதத்தில் நோய் தொற்று எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.22,883 கோடியாக இருந்தது.

    சுவாச மருந்துகள் கடந்த மாதம் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.14,880 கோடியாக இருந்தது.

    நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய மருந்துகள் விற்பனை 26.1 சதவீதம் அதிகரித்து ரூ.2,766 கோடியாக உள்ளது. நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கப் பயன்படும் சிப்லாவின் புட்கார்ட் 23.3 சதவீதம் அதிகரித்து ரூ.2,385 கோடியாகவும், வலி நிவாரணியான வலி நிவாரணி மருந்துகள் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,898 கோடியாகவும் இருந்தது.

    இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வைரஸ் காய்ச்சல் அல்லது இன்புளுயென்சா ஏ அதிகரித்து வருகிறது.

    இன்புளுயென்சா ஏ இன் எச் 3 என் 2 பரவல் காரணமாக மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சளி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிலருக்கு உலர் ஹேக்கிங் இருமல் உள்ளது, மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்ட நாட்கள் மற்றும் வாரங்களுக்குப் பிறகு தொடர்ந்து இருமல் உள்ளது. நோய் பாதிப்பை மக்கள் புறக்கணிக்கக்கூடாது, ஏனெனில் அவர்களுக்கு நெபுலைசர்கள், இன்ஹேலர்கள், மூச்சுக்குழாய்கள் மற்றும் சில நேரங்களில் குறுகிய ஸ்டீராய்டு படிப்புகள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.

    குறிப்பாக வயதான நோயாளிகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு தொற்று மார்பில் இறங்கி நிமோனியாவை ஏற்படுத்துகிறது.

    குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், புற்றுநோய், நீரிழிவு நோய் அல்லது ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

    இதயம் அல்லது நுரையீரல் பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை இந்த நோய் தாக்கத்தில் மிகவும் பாதிக்கப்பட கூடியவர்கள்.

    மக்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும், கை மற்றும் சுவாச சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகளை எடுக்க வேண்டும்.

    உட்புற காற்றின் தரத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் மற்றும் ஆலோசனையின்றி வீட்டு வைத்தியத்தைத் தவிர்க்க வேண்டும்.

    புளூ காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுவாக கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    நன்கு சூடாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் சாப்பிடலாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    திருப்பூர்:

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில் வரும் 10-ல் மெகா மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 210, கும்பகோணம் மாகராட்சியில் 60 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொசு ஒழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் காய்ச்சல் கண்டறியக்கூடிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தஞ்சை மானம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக இந்த மருத்துவமனையை அணுக வேண்டும். உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒரு பகுதியில் இருந்து அதிக அளவு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வருவதால் உடனடியாக அந்த பகுதி குழு அனுப்பவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .

    யாருக்கேனும் காய்ச்சல் இருந்தாலோ அந்த பகுதியில் அதிக அளவு காய்ச்சல் பரவுவதாக அறிந்தால் தாமாக முன்வந்து மருந்தகங்களில் சென்று மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் ஆலோசனைபடியே மருந்து உட்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது.
    • 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வகை வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

    இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள ஐ.சி.எம்.ஆரின் 30 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த பரிசோதனையில் தற்போது வேகமாக பரவி வருவது 'இன்புளூயன்சா ஏஎச்3என்2' வகை வைரஸ் என தெரியவந்துள்ளது.

    கடந்த டிசம்பர் 15-ந் தேதி முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் 'இன்புளூயன்சா ஏஎச்3என்2' வைரசால் பாதிக்கப்படுவோருக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது.

    50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வகை வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுவும் இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    மற்ற 'இன்புளுயன்சா' காய்ச்சல் போல் அல்லாமல் இந்த வைரசின் பாதிப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    வழக்கமாக பருவகாலம் மாறும்போது இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்கு இருக்கும். 2 முதல் 3 வாரங்களுக்கு இருமல் இருக்கும். இந்த வைரஸ் பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது.

    இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. வெளி இடங்களுக்கு சென்று வந்த பின்பு கைகளை கழுவாமல் கண் மற்றும் மூக்கை தொடக்கூடாது. நாம் சந்திக்கும் நபர்களிடம் பரஸ்பரம் கை கொடுத்தல் கூடாது.

    இந்தவகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதத்தினருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் வகையில் பாதிக்கப்படுகின்றனர். சளி, காய்ச்சல், உடல்வலி இருந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திரவ உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்படுவதால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

    அதே வேளையில் இந்த காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களை பாடாய் படுத்தி விடுவதால் பொதுமக்கள் மத்தியில் இந்த வைரஸ் காய்ச்சல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

    பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு தொண்டை வலி , உடற்சோர்ர்வுடன் கூடிய வைரஸ் காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பனிக்காலத்தில் இது போன்ற வைரஸ் காயச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் நடப்பாண்டு பார்த்தோம் என்றால் கோடைக்காலம் என்பது தொடங்கி விட்டது.

    குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே மாறுபட்ட சீதோஷண நிலையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் அதீத காய்ச்சல் ஆகவும் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளையும் கொண்டிருக்கிறது.

    இன்புளுயன்ஸா எனப்படும் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவுவது கண்பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்.எஸ்.வி. எனப்படும் சுவாச பாதையை தாக்கும்வைரஸ் பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக கோடைக்காலங்களில் குறையத் தொடங்கும் இது போன்ற காய்ச்சல் பாதிப்புகள், மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கிறது. புற நோயகளிகள் சிகிச்சை பிரிவிற்கு வருவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாறுப்பட்ட சிதோஷண நிலை, கொசுக்குழுக்களுடைய வாழ்நாள் அதிகரிப்பு காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் அரசு சார்பாக தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    காய்ச்சல் தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நடப்பாண்டில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் மிக குறைவாக காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறினர். பொதுமக்கள் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
    • காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.

    * காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

    * காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீத பேருக்கு influenza வைரஸ் பாதிப்பு உள்ளது. இது உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    * காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    * கோடையில் குறைய தொடங்கும் காய்ச்சல் பாதிப்புகள், நடப்பாண்டில் மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சளி மற்றும் வறட்டு இருமலில் தொடங்கும் இந்த வைரஸ் காய்ச்சல் கடுமையான உடல் வலி, கை, கால், மூட்டு வலி, உடல் சோர்வுடன் காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமான பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

    ஒருவருக்கு காய்ச்சல் காணப்படும் நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் பரவி வருகிறது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் 2 வாரத்திற்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல், உடல் சோர்வு காணப்படுகிறது. பொன்னேரி நகராட்சி 15-வது வார்டு, 19-வது வார்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பேருக்கு காய்ச்சல் பரவி உள்ளது.

    இந்த நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர். பொன்னேரி நகராட்சி நிர்வாகம் 15-வது வார்டு, 19-வது வார்டு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • வீட்டில் ஒருவருக்கு வந்தால்... அத்தனை பேரையும் சாய்த்து விடுகிறது.
    • சளி... இருமல் தொல்லை 15 நாட்கள் வரை நீடிப்பதால் கடும் அவதி.

    சென்னை:

    சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே அழைத்து வருகிறது.

    காய்ச்சல் வந்துவிட்டால் எழுந்து உட்கார முடியாத அளவுக்கு தலைவலி, இருமல் ஆகியவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது.

    அதனுடன் கை, கால் மூட்டு வலி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு எப்போதும் படுத்தே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

    இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பனி காலத்தில் கொசு உற்பத்தி சென்னையில் மிக அதிகமாக உள்ளது.

    அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ் என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை காய்ச்சலில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

    சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதிகளிலும் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருவதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் சிறிய கிளினிக்குகள் கூட நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சராசரியாக முப்பது பேர் வரை வந்து செல்வதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்த காய்ச்சல் தொடர்பாக டாக்டர்கள் கூறும் போது வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்து அனைவரையும் முடக்கி போடும் வகையில் இந்த வைரஸ் காய்ச்சல் வீரியமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீடுகளில் இருந்து இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சளி பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வழக்கமாக காய்ச்சல் தலைவலி வந்தால் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல் சரியாவதற்கு 15 நாட்கள் வரை ஆகிறது.

    இந்த 15 நாட்களும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதற்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    இந்த சளித்தொல்லை சிலருக்கு அதிகமாகி நுரையீரலில் போய் சளி கெட்டியாக தேங்கி விடுகிறது. இது இரவு நேரத்தில் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. இது போன்ற நேரங்களில் நெபுலேசர் வழியாக மருந்தை செலுத்தி சளியை கரைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது, சிலருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் திடீரென குறைந்து விடுகிறது. இது போன்ற பாதிப்புக்குள்ளாகும் நபர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

    எனவே லேசான சளி தொல்லை மற்றும் இருமல் ஏற்படும் போதே டாக்டர்களிடம் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

    சளி பிரச்சினை ஏற்பட் டால் மருந்து கடைகளில் சென்று டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது நல்லது அல்ல என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போன்ற நேரங்களில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றவே மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். மருந்து கடைகளில் நாமாகவே வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் சளியை உடலுக்குள்ளேயே தேங்கச் செய்து விடும்.

    இது நாளடைவில் இருமலை அதிகப்படுத்தி மூச்சு விடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். எனவே தற்போதைய சூழலில் காய்ச்சல், சளிக்கு டாக்டர்களிடம் உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

    மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் ரத்த பரிசோதனை கூடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்பு
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை, பனி மூட்டம் என சீதோஷ்ண நிலை மாறி, மாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக காலை நேர பனி மூட்டம் பகல் 12 மணி வரை நீடித்து வருகிறது. இரவிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரம் இருக்கிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கெனவே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகள், பயன்படுத்தி வீசப்பட்ட பொருட்களில் எங்காவது கொசுப்புழு வளர்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றில் வளர்ந்துள்ள கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர்.

    மேலும், தண்ணீர் தேங்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை மருந்தும் அடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் சார்பில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளித்தாலும் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    அதன் பிறகு அடுத்தகட்ட முகாம்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    • குழந்தைகள், முதியோர்களை இந்த காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது.
    • தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பதம் பார்த்து விட்டுதான் செல்கிறது.

    சென்னை:

    பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று தான். தற்போதும் மழை, வெயில் என பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் இந்த காய்ச்சல் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக குழந்தைகள், முதியோர்களை இந்த காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது. சாதாரண காய்ச்சல் என்றால் 3 நாட்களில் சரியாகிவிடும்.

    தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பதம் பார்த்து விட்டுதான் செல்கிறது. அவ்வாறு 7 நாட்களில் இந்த காய்ச்சல் குணமான போதிலும் அதன்பின்பு 3 முதல் 7 நாட்கள் வரை உடல்வலி இருக்கிறது.

    தற்போது பரவி வரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்கள் ஆகியும் கடுமையான காய்ச்சல் குறையாதபட்சத்தில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த காய்ச்சல் டெங்கு காய்ச்சலா அல்லது ப்ளூ காய்ச்சலா என கண்டறிந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிப்பதால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் காய்ச்சலுக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×